இடுகைகள்

நீர்நிலைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாட்டர் வாரியர் விருது பெற்ற கோவை மணிகண்டன்! - கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

படம்
  கோவையைச் சேர்ந்தவர், மணிகண்டன். இவர் மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சக வாட்டர் வாரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ளார். இதற்கான விருதை இன்று, ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் வழங்குகிறார்.  மணிகண்டன் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். 2017ஆம் ஆண்டு தொடங்கி கோவையிலுள்ள பல்வேறு குளம், குட்டை, ஏரிகளை மீட்டு வருகிறார். இவரது செயல்பாடுகளைப் பார்த்து ஜல்சக்தி அமைச்சக அதிகாரிகள், சில மாதங்களுக்கு முன்னர் இவரைத் தொடர்புகொண்டுள்ளனர். குளங்களை புனரமைப்பு செய்த தகவல்களை தொகுத்து அனுப்பக்கூறியுள்ளனர். இப்படித்தான் விருதுக்கு மணிகண்டன் தேர்வானார்.  இவர்களது முதல் வேலை, பேரூர் பெரியகுளத்தில் பணியைத் தொடங்கினர். பிறகு ஏரி என செயல்பாடு வளர தன்னார்வலர்களும் ஆர்வமாகி இணைந்தனர். இப்படி 24 ஏரிகள், 900 குளங்கள், 27 கால்வாய்களை புனரமைப்பு செய்துள்ளனர். 224 வாரங்களில் சீமை கருவேல மரங்கள் போன்ற அந்நிய தாவர இனங்களையும் அகற்றியுள்ளனர்.  புனரமைப்பு பணியோடு பசுமை பரப்பை அதிகரிக்க மியாவகி வகை காடுகளையும் உருவாக்கி வருகின்றனர். இந்த முறையை ஜப்பானைச் சேர்ந்த  அகிரா மியா

நீர்நிலைகளை தூர்வாரி விழிப்புணர்வு செய்யும் இளைஞர்!

படம்
குளங்களை மீட்கும் இளைஞர் சென்னையைச் சேர்ந்த என்விரோன்மென்டல் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி, இதுவரை 39 ஏரிகள் 48 குளங்களை தன்னார்வலர்களுடன் சேர்ந்து தூய்மைப்படுத்தியுள்ளார். 2007 ஆம் ஆண்டு என்விரோன்மென்டல் பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார். கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முன்னாள் பணியாளரான அருண் கிருஷ்ணமூர்த்தி, இயற்கைச்சூழல் வட்டாரத்தில் பணியாற்றிவந்தார். குஜராத், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், புதுச்சேரி, ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் பல்வேறு குளங்கள், குட்டைகளை தூர்வாரியுள்ளார். அறிவியல் முறையில் நீர்நிலைகளைத் தூர்வாரினால் மட்டுமே நிலத்தடி நீரைப் பாதுகாக்க முடியும். எதிர்வரும் காலத்தில் இப்போது சந்திக்கும் நீர் பற்றாக்குறையை இன்னும் தீவிரமாக சந்திக்க வேண்டி வரும் என்கிறார் அருண். யூடியூபில் ஹைட்ரோஸ்தான் எனும் வீடியோ சேனலை நடத்தி வருகிறார் அருண். நாங்கள் பல்வேறு அரசுகளுடன் இணைந்து திட்டங்களை நடத்தி வருகிறோம். நாங்கள் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் அனுமதியுடனும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்கிறோம் என