இடுகைகள்

குடிநீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுகாதாரமான குடிநீர் வசதி அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை! - பீட்டர் கிளீக்

படம்
நேர்காணல் பீட்டர் கிளீக் சூழல் அறிவியலாளர்  அமெரிக்காவின் ஓக்லாந்து நகரைச் சேர்ந்த அறிவியலாளர், பீட்டர் கிளீக். பசிஃபிக் இன்ஸ்டிடியூட் (Pacific Institute) என்ற அமைப்பைத் தொடங்கி, சூழல் பிரச்னைகளைப் பற்றி பேசி எழுதி வருகிறார்.  நீருக்கும் மனிதர்களின் முன்னேற்றத்திற்கும் தொடர்பிருக்கிறது என எப்படி கூறுகிறீர்கள்? இன்றுவரை,  தூய குடிநீர், சுகாதார வசதி என்பது  அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை. இது நமது மிகப்பெரும் தோல்வி. தூய குடிநீர், சுகாதார வசதிகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க அரசு அதிக நிதி செலவிட வேண்டும். குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினாலே மனிதர்களுக்கு ஏற்படும் பிற பிரச்னைகள் தீர்ந்துவிடும்.   சிறந்த நீர்மேலாண்மைக்கான எடுத்துக்காட்டுகள் உள்ளனவா? சிங்கப்பூர் நாட்டில் தூய குடிநீர், கழிவுநீர் மறுசுழற்சி, புத்திசாலித்தனமான நீர்ப்பாசன முறைகளைக் கையாள்கிறார்கள். அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் விவசாயிகள் நீரை எப்படி சிறப்பாக பயிர்களுக்குப் பயன்படுத்துவது என அடையாளம் கண்டுள்ளனர்.  காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இந்தியாவின் பருவகாலத்தைப் பாதிக்குமா? நிச்சயமாக. காலநிலை மாற்

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த களத்தில் குதிக்கும் தன்னார்வ அமைப்பு - பால் உத்சவின் பணிகளை அறிவோமா?

படம்
  அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் பால் உத்சவ் அமைப்பு!  2009ஆம் ஆண்டு தொடங்கி, கர்நாடகத்தின் பெங்களூருவில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பு, பால் உத்சவ். இந்த அமைப்பு அரசு பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியர்களுக்கான பயிற்சி, மாணவர்களுக்கான சுகாதார மேம்பாடு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. இதனை பினு வர்மா மற்றும் ரமேஷ் பாலசுந்தரம் ஆகியோர் தொடங்கி நடத்தி வருகின்றனர். ரமேஷ் பாலசுந்தரம், கர்நாடக அறிவு ஆணையத்தில் முன்னாள் ஆலோசகராக செயல்பட்டுள்ளார்.  பால் உத்சவ் , அரசு பள்ளிகளுக்காக இரு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல் திட்டம் ஐஷாலா (ishaala). இதில் மாணவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாக உள்ள பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். அங்கு, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகப்பை, எழுது பொருட்கள், காலணிகள், சானிடரி நாப்கின், குடிநீர் பாட்டில்களை வழங்குகிறார்கள். மாணவர்கள் கல்வியை சுமையின்றி கற்க உதவும் திட்டமிது.  பள்ளியில் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் டிவி, இணையம், மின்சார வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கின்றனர். இரண்டாவது திட்டம், சம்பூர்ண ஷாலா (Sampoorna Shaala). இதில் மாணவர்களின் எண்ணிக்கை 500க்கும் அதிகமாக உ

கிராம மக்களுக்கு சுகாதாரமான நீர் தேவை - நீதா படேல்

படம்
  சுகாதாரமான நீருக்காக போராடும் பெண் செயல்பாட்டாளர்! இந்தியாவில் நீரைப் பாதுகாக்கும் பல்வேறு தொன்மையான முறைகள்  உண்டு. தற்போது குடிநீர் பற்றாக்குறை தீவிரமாக எழத் தொடங்க, தொன்மையான நீர் சேகரிப்பு முறைகள் நடைமுறைக்கு வரத்தொடங்கியுள்ளன. இவற்றை பிரசாரம் செய்பவர்களில் ஒருவர்தான், குஜராத்தைச் சேர்ந்த நீதா படேல்.  குஜராத்தில் பழங்குடிகள் வாழும் மாவட்டங்களாக டங் (Dang), நர்மதா (Narmada), பாருச்  (Bharuch)ஆகியவை கடுமையான நீர்பஞ்ச பாதிப்பு கொண்டவை. இந்த மாவட்டங்கள் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவை. இங்கு, நீர்  மேம்பாட்டு பணிகளுக்காக  நீதா படேல் 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார். இதன் விளைவாக, பழங்குடி மாவட்டங்களிலுள்ள 51 கிராமங்களில் வாழும் 30 ஆயிரம் மக்களின் குடிநீர் தேவை நிறைவு செய்யப்பட்டுள்ளது.  பழங்குடி கிராமங்களில், மக்களின் ஆதரவுடன் குடிநீருக்கான கைபம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  தினசரி 90 கி.மீ. தொலைவுக்கு பயணித்து, பல்வேறு கிராமங்களுக்கு நீதா சென்றுவருகிறார். அங்குள்ள பெண்களுக்கு நீர் சேமிப்பு பற்றி பிரசாரம் செய்கிறார். இதுபற்றி பஞ்சாயத்துகளில்,  பேசும்படி கோரி வருகிறார். இதன்மூலம்

குடிநீர் தேடி அலையும் விலங்குகளுக்கு உதவும் சூழல் மனிதர் - ராதாஷ்யாம் பிஷ்னோய்

படம்
  விலங்குகளின் குடிநீர் தாகம் தீர்க்கும் மனிதர்!  ராஜஸ்தானின் ஜெய்சல்மீர் மாவட்டத்தில் வாழும் விலங்கினங்களுக்கு கோடைக்காலம் கடினமானது. அப்போது, நீர்வேட்கையில் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்துதான் தாகத்தை தணித்து வந்தன. தற்போது, அப்படி அலையும் விலங்குகளுக்காக குளங்களில் நீரை நிரப்பி வருகிறார் சூழலியலாள் ராதேஸ்யாம் பிஷ்னோய்.  ராஜஸ்தானின் தோலியா கிராமத்தைச் சேர்ந்தவர், பிஷ்னோய். இனிப்புகளில் சேர்க்கப்படும் கோயா எனும் பால் பௌடரைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். ஓய்வு நேரத்தில் விலங்குகளைப் பாதுகாக்கும் பணிகளைச் செய்து வருகிறார். காயம்பட்ட விலங்கினங்களை மீட்டு சிகிச்சை அளிப்பதோடு, அவற்றைப் பாதுகாப்பது பற்றிய பிரசாரத்தையும் செய்து வருகிறார்.  கடந்த ஐந்து ஆண்டுகளாக கோடைக்காலமான  ஏப்ரல், ஜூன் மாதங்களில் விலங்கினங்களுக்காக குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் பணிகளைச் செய்து வருகிறார். தோலியா கிராமத்தோடு அருகிலுள்ள  கேடோலி கிராமத்திற்கும் தனது பணியை விரிவுபடுத்தியுள்ளார்.  இதன் மூலம், பாலைவன  நரி, பூனை, சின்காரா மான், கழுகுகள் ஆகியவை பயன்பெற்று வருகின்றன. ”2017ஆம் ஆண்டு நீர்தேட

கழிவுநீர் சுத்திகரிப்பு

படம்
  கழிவுநீர் சுத்திகரிப்பு உலகெங்கும் தினசரி பல லட்சம் லிட்டர் கழிவு நீர் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இதோடு வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரின் அளவு தனி. இப்படி ஒன்றாக கலக்கும் கழிவுநீரில் மலக்கழிவுடன் ஆபத்தான வேதிப்பொருட்கள் மற்றும் நுண்ணுயிரிகளும் இருக்கும். எனவே, கழிவுநீரை இதற்கென தனி நிலையம் அமைத்து அரசு சுத்திகரித்து அதனை  நன்னீராக்கி வெளியேற்றுகிறது. இதில் சூழலுக்கு ஆபத்து ஏற்படாது. கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்துவதால் நீர் தட்டுப்பாட்டின் அளவு குறைகிறது. உயிரியல் மற்றும் வேதியியல் முறையில் கழிவுநீரை பல்வேறு கட்டமாக சுத்திகரிக்கிறார்கள். இந்த முறையில் கழிவுநீரிலுள்ள திடக்கழிவுகளை அகற்றும் முறைக்கு செடிமென்டேஷன் (sedimentation)என்று பெயர்.  கழிவுநீரை சுத்திகரிக்கும்போது கிடைக்கும் உலர்ந்த திடக்கழிவுக்கு ஸ்லஜ் கேக் (Sludge cake)என்று பெயர். இதனை தாவரங்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்கான உரமாக பயன்படுத்துகின்றனர். தகவல் super science encyclopedia book pinterest

அமெரிக்காவைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் - கீதாஞ்சலி ராவ்

படம்
  பிறரது வாழ்க்கையை மாற்ற விரும்புகிறேன்!  கீதாஞ்சலி ராவ், இந்தியாவை பூர்விகமாக கொண்ட அமெரிக்க மாணவி.  அமெரிக்காவின் கொலராடோவில் ஹைலேண்ட் ரான்ஞ்சில் பள்ளிப்படிப்பு படிக்கிறார் கீதாஞ்சலி. கூடவே, கொலராடோ பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் ஆராய்ச்சி செய்து வருகிறார். தான் கேள்விப்படும் செய்தியிலிருந்து பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்குவது கீதாஞ்சலியின் வழக்கம். ஜிகா வைரஸ் நோய் பரவியபோது,  ஜீன் எடிட்டிங் செய்வதன் மூலம் நோயை கட்டுப்படுத்த முடியுமா என்று யோசித்தார்.2014ஆம் ஆண்டு மலேசிய விமானம் காணாமல் போனபோது, கருப்பு பெட்டியை கண்டுபிடிப்பதற்கான கருவியைக் கண்டுபிடித்தார்.  அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஃபிளின்ட் நகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, குடிநீரில் உள்ள காரீயம் என்ற நச்சுப் பொருளைக் கண்டுபிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தார்.  அண்மையில், கைண்ட்லி (Kindly) எனும் ஆப் ஒன்றை கோடிங் எழுதி உருவாக்கியுள்ளார். இதனை ப்ரௌசரில் இணைத்து கொள்வதன் மூலம், இளம் வயதினர் சைபர் தாக்குதல்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முடியும்.  இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவியுடன் செயற்கை நுண்ணற

இந்தியமக்களில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இறக்க காரணம்!- நீர் பற்றாக்குறை - பிட்ஸ்

படம்
  நீர் பற்றாக்குறை - பிட்ஸ் 1. உலகெங்கும் 84.4 கோடி மக்கள்  சுத்தமான நீரைப் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை அமெரிக்க மக்கள்தொகையை விட இருமடங்கு அதிகம்.  2. உலகில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையால், 2 பில்லியன் மக்கள் மாசுபட்ட நீரைக் குடிநீராக அருந்தி வருகின்றனர்.  3. மாசுபாடான குடிநீரால் வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, போலியோ ஆகிய நோய்கள் பரவுகின்றன. ஆண்டுதோறும் வயிற்றுப்போக்கு பிரச்னையால் 4 லட்சத்து 85 ஆயிரம் பேர் பலியாகின்றனர்.  4. 2025ஆம் ஆண்டு,  உலக மக்கள் தொகையில் பாதிப்பேர் நீர்ப்பற்றாக்குறையைச் சந்திப்பதோடு, அவர்களின் வாழிடத்திலுள்ள நிலத்தடி நீர்மட்டமும் குறையும் என்று ஐ.நா. ஆய்வு குறிப்பிடுகிறது.  5.வளரும் நாடுகளில் மருத்துவச் சேவைகளைச் செய்வதற்கு தடையாக 22 சதவீதம் நீர்ப்பற்றாக்குறை உள்ளது. இந்நாடுகளில் சுகாதாரப் பணிகள் 21 சதவீதம் பற்றாக்குறையாகவும், கழிவுகளைக் கையாள்வதில் திறனின்மை 22 சதவீதமாகவும் உள்ளது.  6. நமது உலகைச்சுற்றி 70 சதவீத நீர்ப்பரப்பு உள்ளது. அதில், 2.5 சதவீத நீர் மட்டுமே நன்னீர். மீதி முழுக்க கடல்நீர்தான். பூமியிலுள்ள 1 சதவீத நீரை மட்டுமே ந

பிஸ்லரியின் வடிவமைப்பு விற்பனை முறைகளை மாற்றி சந்தையில் வென்ற பெண்மணி - அஞ்சனா கோஷ்

படம்
        அஞ்சனா கோஷ்     அஞ்சனா கோஷ் விற்பனைப் பிரிவுத் தலைவர், பிஸ்லரி இன்டர்நேஷ்னல் கோஷ் உருவாக்கிய ஹர் பானி கி பாட்டில் பிஸ்லரி நஹி என்ற விளம்பரம் நாடெங்கும் பிஸ்லரிக்கான மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. இவரின் நிறுவனம் இத்துறையில் 14 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டது. இதோடு நிற்காமல் குளிர்பானங்களை மூன்றை தனித்துவமாக உருவாக்கி விற்று வருகின்றனர். சமூக பொறுப்புணர்வு திட்டமாக கோஷ் உருவாக்கிய பாட்டில்ஸ் ஃபார் சேஞ்ச் என்ற திட்டம் மூலம் மும்பையில் மட்டும் 4800 கோடி டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்பட்டன.   இரும்பு தொழிலில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர், 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிஸ்லரி நிறுவனத்தில் இணைந்தார். அவரது முயற்சியால்தான் நீலநிறமாக இருந்த பிஸ்லரி இன்று பச்சை நிறமாக ஒட்டகம் கூட தேடிப்பிடித்து குடிக்கும் குடிநீராக உள்ளது. சந்தையில் உள்ள பிற நிறுவனங்களை தூக்கி ஓரம் வீசிவிட்டு பிஸ்லரி முக்கியத்துவம் பெற விற்பனையில் அஞ்சனா கோஷ் செய்த பல மாற்றங்கள் முக்கியக் காரணங்களாக அமைந்தன.

பள்ளியை மாற்றிய ஆசிரியர்! -பீகாரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் அகிலேஸ்வர் பதக்

படம்
                               பள்ளி ஆசிரியர் அகிலேஸ்வர் பதக்   பள்ளியை மாற்றிய ஆசிரியர் பீகாரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் அகிலேஸ்வர் பதக், 2020ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதை வாங்கியுள்ளார். பீகாரிலுள்ள சரண் மாவட்டைச்சேர்ந்த சன்புரா பைஸ்மாரா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இவர். என்ன செய்தார் என்று இவருக்கு நல்லாசிரியர் விருது? இந்த அரசுப்பள்ளிக்கு மாற்றலாகி வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. முதலில் வந்தபோது பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிவறை குடிக்க குடிநீர் என எந்த வசதியும் இல்லை என்பதைக் கவனித்தார். இதனால் அங்குள்ள மக்களை சந்தித்தார் அவர்களிடம் பள்ளியின் நிலையைச் சொல்லி நிதியுதவியைக்கேட்டார். அவர்கள் மூலம் 98 ஆயிரம் ரூபாய் நன்கொடை கிடைத்துது. தனது சேமிப்பிலிருந்து 21 ஆயிரம் ரூபாயை அதில் தன் சார்பில் கொடு்த்தார். பள்ளி ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்து 5 ஆயிரம் ரூபாய் தந்தனர். இதன் காரணமாக இன்று பள்ளியில் சிசிடிவி கேமரா உள்ளது. சாப்பிடுவதற்கான அறை உள்ளது. மாணவர்களுக்கான வருகைப்பதிவு முறை டிஜிட்டலாக மாற்றப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவிகள் எண்ணிக்கை குறைந்து வந்தது. அப்படி வந்தவர்களும் கழிவறை இல்ல

சூரிய சக்தியில் இயங்கும் கடல்நீர் சுத்திகரிப்பு முறை! - எம்ஐடி சாதனை!

படம்
கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலைகள் என்பது அதிக செலவு பிடிக்கக்கூடியது. இதனை எப்படி அனைத்து குடும்பங்களும் பயன்படுத்த முடியும்? அதற்காகத்தான் இந்த கருவி. இதன் மூலம் நூறு டாலர்கள் விலையில் ஒரு குடும்பம் தனக்கு தேவையான குடிநீரைப் பெறலாம். அமெரிக்காவைச் சேர்ந்த எம்ஐடி, சீனாவைச் சேர்ந்த ஜியாவோ டாங் பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகளின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தீர்வை கண்டறிந்துள்ளனர். இதன்மூலம், கடல்நீரை மின்சாரமின்றி எளிதாக குடிநீராக மாற்றலாம். இதனால் குடிநீர் பிரச்னையால் கடல்பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்களை தடுக்க முடியும். இதனின் மாதிரியை எம்ஐடி அமைப்பின் மாடியில் வைத்து சோதனை செய்து வெற்றி கண்டுள்ளனர். இக்கருவியில் நீரை சுத்திகரிக்க பல்வேறு அடுக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. மாதிரிக்கருவில் பத்து அடுக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை அதிகம் பயன்படுத்தினால் காசும் கூடும். கருவியும் பெரிதாகும். மாதிரியில் பயன்படுத்திய ஏரோஜெல் விலைகூடியது. இதனை சந்தைக்கு கொண்டுவரும்போது விலைகுறைவான மாற்று பொருளை பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் எண்ணியுள்ளனர். சூரிய சக்தியை பயன்படுத்தி குடிநீரை சுத்த

குடிநீருக்கு காலாவதி நாட்கள் தேவையா?

படம்
குடிநீர் பாட்டில்களுக்கு எக்ஸ்பைரி நாள் இருக்கிறது அது தேவையா? சர்க்கரை உப்புக்கு காலாவதி நாட்கள் உண்டு. ஆனால் அதைப் பார்த்துத்தான் நீங்கள் அதனை பயன்படுத்துகிறீர்களா கிடையாது. காரணம், விற்பனைக்கு வைக்கும் பொருட்களில் கண்டிப்பாக காலாவதி நாட்களை அச்சிடவேண்டும் என்பது அரசு விதி. ஆனால் குடிநீர் பாட்டில்களில் இரண்டு மாதங்கள் என அச்சிட்டிருப்பார்கள். அது முக்கியமானது அல்ல. அந்த நீரை சரிபார்த்துவிட்டு குடிக்கலாம். இமாலயத்திலிருந்து வந்த குடிநீர் என விளம்பரம் செய்வார்கள். ஆனால் குடிநீர் தயாரிப்பு மையங்களும் ஒரே மாதிரி மெஷின்களை வைத்துத்தான் குடிநீரை சுத்திகரித்து பாட்டிலில் அடைக்கிறார்கள். சுவை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மாறியிருந்தால் அதனைக் குறித்து நீங்கள் நிறுவனத்திற்கு புகார் கொடுக்கலாம். மற்றபடி சுவையைப் பார்த்து நீரைக் குடிக்கலாம். காலாவதியை பெரிதாக கண்டுகொள்ளாதீர்கள். நன்றி: லிவ் சயின்ஸ் 

தினசரி பிளாஸ்டிக் சாப்பிடுகிறோமா?

படம்
நாம் சாப்பிடும் உணவில் பிளாஸ்டிக் உள்ளது. அதன் அளவு வாரத்திற்கு கிரடிட் கார்டு அளவு என்று இது குறித்து வெளியான ஆய்வு குறிப்பிடுகிறது. ஆஸ்திரேலியாவிலுள்ள நியூகேஸ்டில் பல்கலைக்கழகம் இதுகுறித்த ஆய்வை வெளியிட்டுள்ளது. உலகளவில் 2 ஆயிரம் சிறு துகள்கள் அளவுக்கு சாப்பிடுகின்றனர் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிளாஸ்டிக் துகள்களின் எடை வாரத்திற்கு 5 கிராம் என ஆண்டிற்கு 250 கிராம் பிளாடிஸ்க்கை நாம் சாப்பிட்டு வருகிறோம் என்கிறார்கள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். பொதுக்குடிநீர் பைப்புகளில்தான் பெரும்பான்மையான பிளாஸ்டிக் கலப்படம் நிகழ்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இதன் அளவு அதிகமாக உள்ளது. உப்பு, மீன், பீர் ஆகியவற்றில் இந்த பிளாஸ்டிக் கலப்பு அபரிமிதமாக உள்ளது. இந்த ஆய்வு நாம் கவனிக்க வேண்டிய விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளது. எனவே நாடுகள் உடனடியாக மக்கள் பிளாஸ்டிக் கலப்பு உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க உதவ வேண்டும் என்று கூறுகிறார் உலக வைல்ட் ஃபன் உலக இயக்குநர் மார்கோ லாம்பெர்டினி. இந்த ஆராய்ச்சியை தவ பழனிச்சாமி செய்துள்ளார். இந்த அறிக்க

தண்ணீர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கலாம்?

படம்
தண்ணீர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கலாம்? சென்னைக்கு நீர் வழங்கும் பல்வேறு ஏரிகள் மழை பொய்த்துப் போனதால் வறண்டுபோய்விட்டன. மக்கள் அரசு வழங்கும் குடிநீருக்காக குடங்களுடன் காத்திருக்கின்றனர். இந்தச்சூழலை எப்படி சமாளிக்கலாம் என கணினியும் கீபோர்டுமாக யோசித்தோம். 1.வாசல் தெளிக்க பக்கெட் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவேண்டும. அதற்கு பதில் சுப நிகழ்வுகளில் இளம்பெண்கள் பன்னீர் தெளிக்கிறார்களே அதே பாட்டிலைப் பயன்படுத்தலாம். 2.ஹோட்டல்களில் சாப்பிடச்செல்லும்போதே, சாப்பாட்டை நெஞ்சுவரை சாப்பிடுங்கள். மீதி மூக்கு வரை உள்ள இடத்திற்கு நீரை தம் பிடித்து குடியுங்கள். சவாலில் ஜெயித்தால் கேன் வாட்டர் காசு மிச்சம். 3.அகன்ற வாய் கொண்ட தண்ணீர் பாட்டில்களில் குடித்தால்தானே நீர் அதிகம் செலவாகும்? வீட்டுக்கு வரும் விருந்தினருக்குக் கூட பக்கத்து பிளே ஸ்கூல் பாப்பாவிடம் அபேஸ் செய்த ஸ்ட்ரா போட்ட பாட்டில், ஃபீடிங் பாட்டிலில்  நீர் நிரப்பி கொடுத்து வரவேற்கலாம்.  4.தண்ணீர்க்குடம் வரிசையில் நின்று நீர்பிடித்து வருவது ஒலிம்பிக் பதக்கம் வெல்வதை விட கஷ்டம். எனவே, அதிக ஏசி மாட்டியுள்ள வீடுகளை குறி

கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கலாம்! சென்னை கார்ப்பரேஷன் ஐடியா

படம்
IndiaSpend கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கலாம் ! சென்னை குடிநீர் வடிகால் வாரியம் (CMWSSB) கழிவுநீரைச் சுத்திகரித்து குடிநீர் தயாரிக்கலாம் என்ற திட்டத்தை அரசுக்கு முன்மொழிந்துள்ளது.  பருவமழை தவறியதாலும், முறையான மழைநீர் சேகரிப்பு வசதிகள் கடைபிடிக்காததும் சென்னையின் குடிநீர்ப் பிரச்னையை அதிகரித்துள்ளது. மழைநீர் பொய்த்ததால் சென்னைக்கு நீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளில் நீர் வற்றிவிட்டது. இந்நிலையில் எதிர்வரும் கோடையை எப்படிச் சமாளிப்பது? இதற்குத்தான் குடிநீர் வடிகால் வாரியம் கழிவுநீரை சுத்திகரித்து தினசரி, 260 மில்லியன் லிட்டர் நீரை குடிநீராக வழங்கும் திட்டத்தை அரசுக்கு அளித்துள்ளது. இதற்கான தொழிற்சாலையை அமைக்க ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. குடிநீர் கிடைக்குமா? இத்திட்டத்தின் மூலம் பெருங்குடி ஏரி, நாராயணபுரம் ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி, கீழ்கட்டளை ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, போரூர் ஏரி, அயனம்பாக்கம் ஏரி, ரெட்டி ஏரி ஆகிய நீர்நிலைகள் பயன்பெறவிருக்கின்றன. தற்போது நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல