இடுகைகள்

ராகுல்காந்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போர்க்குணத்துடன் வெளிப்படையான பேச்சின் தேவை!

படம்
                போர்க்குணத்துடன் வெளிப்படையான பேச்சின் தேவை!  சுவாரசியமான போக்கு நம் நாட்டின் அரசியலில் தொடங்கியிருக்கிறது. பிடிவாதமும், போர்க்குணமும் கொண்ட அரசியல்வாதிகள் உருவாகி வருவதுதான் அது. இந்தியாவின் பெரும்பாலான முக்கிய முன்னாள் இந்நாள் முதலமைச்சர்களான நரேந்திரமோடி, நிதீஸ்குமார், ஜெயலலிதா, மாயாவதி, மம்தாபானர்ஜி, ஷீலா தீக்ஷித் ஆகியோர் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்ற தனித்தன்மையான, கருத்துகளைக்கொண்ட ஆளுமைகள் எனலாம்.  இந்நிலை, ஒரேமாதிரியான எப்போதும் பேசாத (அ) கட்டாயப்படுத்தினால் பேசக்கூடிய அதனை யாரிடமும் கலந்து பேசாத ராஜதந்திர தன்மைக்கு முழுமையாக எதிராக உள்ளது. காங்கிரஸ் கட்சியில் அமைதியான ஒரேமாதிரியான தன்மை வெற்றிகரமான மர்ம நிலைப்பாடாக கடந்த இருபது ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தலைவர்கள் இதனை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் இதுவே. மிகச்சிறந்த முதல்வர்களில் ஒருவராக இந்திய வாக்காளர்களை ஒன்றிணைக்க நினைத்தால் வெளிப்படையாக பேசவேண்டும்.  இதற்கான மிகச்சிறந்த செவ்வியல் உதாரணமாக காலங்கடந்த மௌனத்தலைவராக ஐந்து ஆண்டுகள...

அதீதசுயமோக வெறியால் துண்டாடப்படும் குடியரசு!

படம்
        வினோதரச மஞ்சரி ஐந்தாம் வரிசை இருக்கையும், அதீத சுயமோகமும் கூலிப்படை ஊடகங்களில் வேலை செய்து பிறகு, அவை தொழிலதிபர்களின் கைகளுக்கு போனபிறகு வெளியே வந்த பத்திரிகையாளர்களில் பர்கா தத், ரவீஷ் குமார் ஆகியோர் முக்கியமானவர்கள். ரவீஷ் குமார், யூட்யூபில் தனி சேனல் ஒன்றைத் தொடங்கி இந்தியில் அரசியல் விவகாரங்களை அவருடைய அனுபவங்கள் வழியாக அலசி பேசிக்கொண்டிருக்கிறார். பர்காதத் மோஜோ எனும் யூட்யூப் சேனலைத்தொடங்கி நடத்தி வருகிறார். நேர்மையான, பாகுபாடற்ற செய்திகளை விரும்புவர்கள் எவரும் இந்த சேனல்களை அணுகி செய்திகளை புரிந்துகொள்ள முயலலாம். ரவீஷ்குமார் யூட்யூப் சேனலில் குடியரசு விழாவில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு ஒலிம்பிக் வீரர்களுக்கும் பின்னால் ஐந்தாவது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது பற்றி பேசியிருந்தார். அதில் முக்கியமானது, தற்போதைய பிராமண இந்து மதவாத கட்சியின் தலைவருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்குமான வீடியோக்கள், அதில் நாம் அறிந்துகொள்ளும் செய்தி. ஒருவர் அதிகாரத்திற்கு வந்து அதை வைத்து என்ன செய்கிறார், எப்படி நடந்துகொள்கிறார் என்பதே முக்கியம். இன்று எதிர்க்கட்சி த...

ராகுல்காந்தி ஜல்லிக்கட்டை பார்க்க வந்ததில் எந்த அரசியல் நோக்கமுமில்லை! கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கமிட்டி தலைவர்

படம்
                    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே . எஸ் . அழகிரி ராகுல்காந்தி மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு வந்துள்ளது பல்வேறு சர்ச்சைகளுக்கு இடமளித்துள்ளதே ? ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில்தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது ..? ஜல்லிக்கட்டிற்கு பிரச்னை வந்தது 2014 இல்தான் . உச்சநீதிமன்றம் இதற்கான தடை ஆணையை பிறப்பித்தது . பின்னர் இத்தீர்ப்பை எதிர்த்து மனுவும் பதியப்பட்டது . ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழர் விளையாட்டு தொடர்வதற்கான முயற்சிகளை செய்தது . அவர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் தமிழர் விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருக்காது . ஆனால் முன்னாள் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் இதற்கு எதிர்ப்பதமாக கருத்துகளை கூறுகிறாரே ? இந்த விவகாரத்தில் அரசுக்கு பல்வேறு கருத்துகள் இருந்தன . 1960 இல் உருவாக்கப்பட்ட விலங்குகளை துன்புறுத்தும் சட்டம் தொடர்பானவை அவை . ஜெயராம் ரமேஷ் கூறிய கருத்துகள் சட்டத்தின்பாற்பட்டவை . கேபினட் கமிட்டி ஜல்லிக்கட்டை தடை செய்யும் விஷயத்தை ஆதரிக்கவில்லை . இதற்கு கார...

இந்தியா டுடே சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியல்! ரகுராம் ராஜன், அபிஜித் பானர்ஜி, ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி மற்றும் பலர்..

படம்
    abhijeet banerjee raghuram rajan இந்தியா டுடே சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியல் ஆர்.சி. பார்க்கவா 86 தலைவர், மாருதி சுசுகி அண்மையில் தனது வாழ்க்கை தொழில் அனுபவங்களை கெட்டிங் காம்பெட்டிட்டிவ் ஃபார் இந்தியா என்ற நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். இதில் இந்தியாவை வலிமையாக்குவது பற்றியும் கூறியுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான பார்க்கவா முப்பதாண்டுகளா மாருதி சுசுகி நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகவும், அதிகம் விற்பனையாகும் ஐந்து கார்களில்  நான்கு கார்கள் மாருதிக்கு சொந்தமாக இருக்கவும் பார்க்கவாவின் அயராத உழைப்பே முக்கியமான காரணம். மாருதி அண்மையில் குறிப்பிட்ட தொகைக்கு கார்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் சந்தா திட்டத்தை தொடங்கியுள்ளது. இதுபோல வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, காலமாற்றத்தோடு இணைந்து பயணிக்கும் பார்க்கவாவின் முடிவுகள் மாருதியை எப்போது உயரத்தில் வைத்துள்ளன. வணிக வரலாறு தொடர்பான ஆழமான அறிவு கொண்டவர். மேலும் பொருளாதாரம் வணிகம் பற்றி ஊடகங்களில் தொடர்ச்சியாக உரையாடி வருகிறார். ஆனந்த் மகிந்திரா ஆனந்த் மகிந்திரா 65 தலைவர், ம...