இடுகைகள்

மனநல பாதிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சைக்கோ கொலைகாரர்கள் - 3 (நிலமெங்கும் ரத்தம்)

படம்
Add caption சைக்கோ கொலைகாரர்கள் 3 ரேணுகா ஷிண்டே - சீமா கவிட் ரேணு - சீமா இருவருமே தாய் அஞ்சனாபாயினால் திருட்டு பழகினர். பின்னர் குழந்தைகளை வைத்து திருடினர், ஏதாவது இடத்தில் சிக்கினாலும் தப்பிக்க கேடயம் குழந்தைகள்தான். இதற்காகவே குழந்தைகளை கடத்த தொடங்கினார்கள். சிக்கல் அங்குதான் உருவானது. 1990 - 96 முதல் ஆறு குழந்தைகளை போட்டுத்தள்ளினர். ஏம்மா கொன்னீங்க என்று கேட்டதற்கு, எத்தனைப் பேரை கொன்றோம் என எண்ணிக்கை தெரியவில்லை என கைகளின் அத்தனை விரல்களையும் விரித்தனர் கொலைகார சகோதரிகள்.தற்போது மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விட்டனர். தக் பேஹ்ராம் 1840 ஆம்ஆண்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட கொள்ளையர். மத்திய இந்தியா வரையில் பயணித்த இக்கொள்ளையரின் ஒரே ஹாபி, வழியில் உள்ள பயணிகளை கர்ச்சீப்பினால் கழுத்தை இறுக்கி நொடியில் கொன்றுவிட்டு பொருட்களை கொள்ளையடிப்பது. இப்படி கொன்றவர்களின் எண்ணிக்கை 931(1790-1840). ஆனால் இவர் ஒப்புக்கொண்டது 125 மட்டுமே. கிளாசிக் கொலைகாரர் என சொன்னால் இவரைத்தான் சொல்லவேண்டும். ராஜேந்திர ஜாக்கல், திலிப் சுதார். சாந்தாராம் கன்ஹோஜி ஜக்தப், ம