தலைமுடி மூலம் மனநோய்களை அறியலாம்!
முடி மூலம் நோய்களை அறிய முடியுமா ? மூளையிலுள்ள ஹைப்பர் ஆக்டிவ் மரபணுக்கள் மன நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள் . மூளையில் நடக்கும் பிரச்னைகளுக்கு நாம் அதனை திறந்து பார்க்கவேண்டியதில்லை . முடியைப் பார்த்தாலே போதும் . மூளையில் உள்ள எம்பிஎஸ்டி மரபணு , கட்டற்று இயங்கும்போது பாதிப்பு ஏற்படுகிறது . இந்த மரபணுவினால் ஹைட்ரஜன் சல்பைடு அதிகளவு மூளையில் உருவாகிறது . இது ஆன்டி ஆக்சிடன்ட்தான் என்றாலும் அதிகளவு உருவாகும்போது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது . ஹைட்ரஜன் சல்பைடு மைட்டோகாண்ட்ரியாவின் செயல்பாடுகளை முடக்குகிறது . மேலும் பிற நரம்பு செல்களின் தகவல்தொடர்பையும் பாதிக்கிறது . இதனால் ஸிசோபெரேனியா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது . எம்பிஎஸ்டி மரபணுவால் மூளையில் ஏற்படும் பாதிப்பு மட்டுமன்றி , முடியில் ஸ்டெம் செல்லும் பாதிக்கப்படுகிறது . ஆர்என்ஏவை நகல் எடுத்து எம்பிஎஸ்டி என்சைம்களை உருவாக்க முயல்கிறது . இதனால் தலைமுடியை எடுத்து சோதித்தால் மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை அடையாளம் கண்டு்விடலாம் .