இடுகைகள்

விதிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்மார்ட்போன் ஆப் வழியாக மாட்டிக்கொள்ளும் மனிதர்கள்! - சீன ஆப்களின் இன்ஸ்டா லோன் பயங்கரம்!

படம்
                கடன் ஆப்கள் - கடன் பெற்றவர்களை அவமானப்படுத்திக்கொல்லும் கொடூரம் ! சீனாவைச் சேர்ந்த கடன் ஆப்கள் மூலம் கேரளம் , தமிழகம் , தமிழகம் மாநிலங்களைச் சேர்ந்த பலர் தற்கொலை செய்துள்ள நிலை வேதனைக்குரியது . எப்படி இப்படி ஒரு நிலை ஏற்படுகிறது ? மொபைல் ஆப்கள் மூலம் இன்ஸ்டன்டாக கடன்கள் கிடைப்பதுதான் இதனை பலரும் நாடிச்செல்லுவதற்கு முக்கியக் காரணம் , பெருந்தொற்று காரணமாக வேலையிழந்த பலரும் இந்த ஆப்களில் கடன் வாங்கியுள்ளனர் . கடன் வழங்கும் சீன நிறுவனங்கள் பலரும் வங்கியல்லாத பல்வேறு நிதிநிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு செயல்பட்டு வருகின்றன . இதில் கடன் வேண்டும் என்பவர்கள் தங்களை ஒரு செல்ஃபீ எடுத்து பதிவிடுவதோடு , ஆதார் கார்டு தகவல்களையும் தர வேண்டும் . கடன்களைப் பெற்றவர்கள் அதனை கட்டுவதற்கு 91 முதல் 360 நாட்கள் காலம் தருகிறார்கள் . கடன் பெற்றவர்களுக்கு ஏழு நாட்களுக்கு பிறகு கடனை கட்டுவதற்கான நிர்ப்பந்த அழைப்புகள் தொடர்புடைய கடன் நிறுவனங்களிலிருந்து வரத்தொடங்கும் . போனில் கடன் ஆப்களை தரவிறக்கும்போது ஒருவரின் போன்புக் தகவல்கள் அனைத்தும் சீன நிறுவனங்களுக்க

சிறுகுறு தொழில்துறைக்கு என்னாச்சு? - அரசின் பாதகமான நிதி,பணக்கொள்கை!

 இந்தியாவிலுள்ள 6.3 கோடி சிறுதொழிலாளர்கள் ஆட்டோமேஷன், அல்காரிதம் என தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ஏற்றபடி தொழில்களை மேம்படுத்தி, வருகிறார்கள். நாட்டின் நாற்பது சதவீத ஏற்றுமதிக்கும், 28 சதவீத உள்நாட்டு உற்பத்திக்கும் உதவுவது இவர்கள்தான். தோராயமாக 11 கோடிப்பேருக்கும் மேலாக வேலைவாய்ப்புகளை வழங்கும் சிறுகுறுகுறுந்தொழில் துறை, விவசாயத்துறைக்கு அடுத்து வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்குகிறது. மத்திய அரசு பதிவு செய்த குறுந்தொழில் நிறுவனங்களுக்கு புதிய கடனாக 350 கோடியை இரு சதவீத வட்டியுடன் வழங்குகிறது. கூடவே முத்ரா கடன் வசதியும் உள்ளது. ஆனால் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்காக இந்திய அரசு செய்த பணமதிப்பு நீக்க முயற்சியில் இத்துறையின் வளர்ச்சி முடங்கியது. இதன்விளைவாக, தொழில்துறை உற்பத்தி இண்டெக்ஸில் (IIP) 3.6 சதவீத வளர்ச்சி மட்டுமே இந்த ஆண்டில் பதிவாகியுள்ளது. இக்காலகட்டத்தில் வங்கிகளில் வாராக்கடன் அளவு அதிகரித்து வந்தது. இதைக் குறைக்க, ரிசர்வ் வங்கி கடன் தரும் முறைகளையும் மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதனால், சிறுகுறு தொழிலாளர்கள் வங்கிக் கடன் கிடைக்காமல் தடுமாறினர்.  இதற்காகவே இந்திய அரசு, செபியின்