இடுகைகள்

நாபிக்கமலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அன்பின் ஈரம் குறையாத சிறுகதைகள்! - நாபிக்கமலம் - வண்ணதாசன்

படம்
            நாபிக்கமலம் வண்ணதாசன் இந்த தொகுப்பில் மொத்தம் பதிமூன்று கதைகள் உள்ளன . இதில் வண்ணதாசன் கதைகளில் இல்லாத சிறப்பு என்னவென்றால் , இதில் இடம்பெறும் பாத்திரங்கள் முன்னர் தங்களுக்கு ஏற்பட்ட நிலைகளுக்கு யாரையும் குறை சொல்லமாட்டார்கள் . ஆனால் இத்தொகுப்பில் உள்ள கதைகளில் மனிதர்கள் தங்களுக்கு பிடித்ததைப் போலவே பிடிக்காத விஷயங்களையும் பகிர்கிறார்கள் . அடுத்தவர்களுக்கு அது புரிகிறதோ இல்லையோ தங்கள் மனதிலுள்ளதை வெளிப்படுத்த நினைக்கிறார்கள் . ஒருவரின் உலகில் ஒருவர் மட்டுமே இருந்தால் போதுமா என நாபிக்கமலத்தில் சங்கரபாதம் கேட்கும் கேள்வி முக்கியமானது . அவரது மனைவி அவரின் தோழிகளின் மீதும் , அவர் மீதும சந்தேகப்படுவதால் அவரது வாழ்க்கை நரகமாகிறது அதனை அவர் எங்கும் வெளிப்படுத்த முடியவில்லை என்றாலும் அவரது வாழ்க்கை சுதந்திரமானதாக இல்லை . வருத்தம் தொய்ந்ததாக மாறுகிறது . காசிராஜன் , தாயம்மளா , அகஸ்திய அத்தை , தனுஷ்கோடி அண்ணன் , பிரேமா , சரவணன் என பல்வேறு கதாபாத்திரங்கள் உறவுகளுக்கு ஏங்குபவர்களாகவும் , ஒருவரின் கரம் பற்றி பேசுவதில் தங்கள் ஆன்மாவை மறக்கிறவர்களாகவும் உள்ள