இடுகைகள்

காப்பகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வன உரிமைச் சட்டத்தை நான் ஆதரிக்கவில்லை - எம் கே ரஞ்சித் சிங், இயற்கைச்சூழல் செயல்பாட்டாளர்

படம்
  எம் கே ரஞ்சித் சிங் வனப்பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட அடிப்படையான விஷயங்களை செய்தவர், திரு. எம் கே ரஞ்சித் சிங். இவர் புலிகளைக் காப்பதற்கான பல்வேறு செயல்பாடுகளை செய்வதோடு, காப்பகங்களை உருவாக்கவும் உதவியுள்ளார். குஜராத்தின் வங்கானர் எனும் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர், ரஞ்சித் சிங். தனது செயல்பாடுகளின் விளைவாக இந்தியாவின் முக்கியமான வனப்பாதுகாப்பு செயல்பாட்டாளராக அறியப்பட்டு வருகிறார். பதினொரு வனப்பாதுகாப்பு சரணாலயங்கள், எட்டு தேசியப் பூங்காங்களை உருவாக்குவதில் பங்களித்துள்ளார். அவரிடம் புலிகளின் பாதுகாப்பு பற்றி பேசினோம். புலிகளின் பாதுகாப்பு திட்டம் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? 1972ஆம் ஆண்டு, புராஜெக்ட் டைகர் குழுவில் செயலாளராக இருந்தேன். அடுத்த ஆண்டு கைலாஷ் சங்கலா இந்த பதவிக்கு வந்தார். புலிகளை பாதுகாத்து அதன் எண்ணிக்கையை பெருக்குவதே எங்கள் குழுவின் நோக்கமாக இருந்த து. எங்கள் குழுவின் லட்சியத்தை எட்டியதாகவே நினைக்கிறேன். இந்த திட்டம் மட்டும் உருவாக்கப்படாமல் இருந்திருந்தால்   நிறைய துணை விலங்கினங்களைக் காப்பாற்ற முடியாமலேயே போயிருக்க

குழந்தைகளை தத்தெடுப்பதில் உள்ள சட்டரீதியான பிரச்னைகள்!

படம்
          சட்டவிரோத தத்தெடுப்பும் , பிரச்னைகளும் பொதுவாக இந்திய சமூகத்தில் திருமணம் என்பது முக்கியமானது . அதுதான் ஆண்களுக்கும் , பெண்களுக்கும் சமூகத்தில் அங்கீகாரத்தை தருகிறது . மகன் , மகள் பிறக்கும்போது அவர்களின் வாழ்க்கை முழுமை பெறுகிறது . மரணத்தில் கூட ஒருவருக்கான சடங்குகளை அவரின் ரத்த வழிகளைச் சேர்ந்தவர்தான் செய்யவேண்டும் என்பதுதான் இந்து மத நம்பிக்கை . திருமணமான பெண்கள் , கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் மெல்ல சித்திரவதைகள் தொடங்கும் . மலடி என்று அழைப்பதோடு , அந்த பெண்ணின் கணவர் மறுமணம் செய்துகொள்ளவேண்டுமென கூறுவதும் தொடங்கும் . இதற்கும் மேலாக இப்படி குழந்தை பெறாத பெண்களை சமூக புறக்கணிப்பு செய்து விழாக்களில் தவிர்ப்பதும் இயல்பாக நடக்கிறது . இதனை பெரும்பாலும் பெண்களே வன்மத்துடன் செய்கிறார்கள் . சட்டரீதியான தத்தெடுப்பு என்பதை பெற்றோர் பலரும் ஏற்காமல் அவசரப்படுகிறார்கள் . இதனால் தரகர்கள் உள்ளே புகுந்து சட்டவிரோதமாக குழந்தைகளை தத்தெடுக்க உதவுகின்றனர் . முதலில் இதற்கென தனியாக தொகையை வாங்குபவர்கள் பின்னர் , பெற்றோரின் சென்டிமெண்ட்டை பயன்படுத்தி அவர்களை மிரட்டி தொக

என்ஜிஓக்கள் குழந்தைகளை எப்படி தத்தெடுத்து விற்கிறார்கள்?

படம்
          குழந்தைகள் விற்பனை - என்ஜிஓக்களின் தில்லுமுல்லு கடந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதி , தமிழ்நாட்டில் 295 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக அரசு அறிவித்தது . அதில் கூடுதலாக இரு குழந்தைகள் பின்னர் இணைந்தனர் . இவர்கள் இருவரும் , இதயம் டிரஸ்ட் எனும் என்ஜிஓ மூலம் கோவிட் காரணமாக இறந்துபோனதாக கணக்கு காட்டப்பட்டு தத்து எடுக்க்ப்பட்டு காசுக்கு விற்கப்பட்டனர் . இதயம் டிரஸ்டின் நிறுவனரான ஜி . ஆர் . சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் இதற்கு முக்கியமான காரணம் . இந்த அமைப்பு , மாநில அரசின் ஏராளமான விருதுகளை வென்றுள்ளது . காவல்துறையோடு இணக்கமாக செயல்பட்டு வருகிறது . தங்களது செல்வாக்கை திறமையாக பயன்படுத்திக்கொண்டு முகமூடியுடன் ஆதரவில்லாத குழந்தைகளை விற்பனை செய்துவந்திருக்கிறது . மதுரை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான கட்டிடத்தில் இதயம் டிரஸ்ட் , பல்வேறு பணிகளை செய்துவந்துள்ளது . இந்த விவகாரம் வெளிவந்தவுடன் பிற குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகங்களும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளன . மதுரையில் மாநில அரசுக்கு சொந்தமான காப்பகம் ஒன்றும் , மத்திய அரசின் உதவியுடன் நடைபெறும் காப்பகம் ஒன்றும் உள்ளது . இவையன

தத்தெடுத்த குழந்தைகள் திரும்ப ஒப்படைப்பு!

படம்
pixabay 2024-15 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கிலான குழந்தைகள், தத்தெடுக்கப்பட்டனர். ஆனால் பல்வேறு காரணங்களால், அவர்களில் 1,100 குழந்தைகள் அரசு அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்ற காரா என்ற அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையின் எண்ணிக்கை நாடு முழுக்க தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது. 2014-15 ஆண்டுகளில் 4,362 குழந்தைகள் த த்து கொடுக்கப்பட்டனர். அதில் 387 குழந்தைகள் திரும்ப அரசு அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டுள்ளனர். 17-18 இல் 4027 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டனர். இதில் 133 குழந்தைகள் திரும்ப அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளனர். காரணம், குழந்தைகளுக்கு அதிக வயது இருப்பதும் அவர்களால் த த்து குடும்பத்துடன் இணைய முடியாததும்தான். “த த்து கொடுத்த குழந்தைகள் திரும்ப காப்பகங்களுக்கு வருவதில் மகாராஷ்டிரமும், மத்தியப் பிரதேசமும், ஓடிசாவும் முன்னிலையில் உள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் உள்ள குழந்தைகள் தத்து கொடுப்பு மையங்கள் பெயரில் மட்டும் செயல்படுகின்றன. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் கௌன்சிலிங் கொடுத்திருந்தால் இப்படி நடந்திருக்காது ” காரா நிறுவன அதிகாரி.

இறப்புக்காக பிராத்தியுங்கள்- நைஜீரிய பெண்களின் அவலநிலைமை!

படம்
நைஜீரியாவைச் சேர்ந்த அதாராவுக்கு பதினேழு வயதானபோது நடந்த சம்பவம், அவரது வாழ்க்கையை மாற்றியது. அவரிடம் பேசிய பெண், லிபியாவில் வேலைவாய்ப்பு உள்ளது என்றார். இவர் மிகவும் சிரமப்பட்டு, அங்கு சென்றபோதுதான் 4 ஆயிரம் டாலர்களுக்கு விற்கப்பட்டிருப்பது தெரிந்தது. அங்கு பாலியல் தொழில் செய்ததோடு, அவரது எஜமானியோடும் உடலுறவு கொள்ளும் நிர்பந்தம் ஏற்பட்டது. பின்னர் அவர் ஐஎஸ் படையின் பாதாள சிறையில் உடலுறவுக்கான அடிமையாக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு லிபியா படையினரால் மீட்கப்பட்டுள்ளார். தற்போது, உலக அகதிகள் அமைப்பு மூலம் நைஜீரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர், காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். காரணம் அவரது வீட்டில் பெற்றோரின் கட்டற்ற வன்முறை அதாராவால் தாங்க முடியாமல் இருந்தது. காப்பகத்திலும் உணவு, சுகாதார வசதிகள் குறைவுதான். ஆனால் அவருக்கு வேறு என்ன வழி இருக்கிறது? நைஜீரிய ஊடகங்கள் வேலை என்ற பெயரில் கடத்தப்படும் பெண்களைப் பற்றி பரபரப்பான செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் இம்முறையில் மீட்கப்படும் பெண்களின் நிலைமை பற்றி கள்ள மௌனம் சாதிக்கின்றன. அரசும் இதில் பெர