இடுகைகள்

லாவா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மெக்சிகோவின் கலாபகோஸ் தீவுகள்! - ரெவில்லேஜிஜெடோ தீவுகள்

படம்
  மெக்ஸிகோவின் கடற்புரத்தில் ரெவில்லேஜிஜெடோ தீவுகள் அமைந்துள்ளன. இவற்றை மெக்ஸிகோவின் கலாபகோஸ் என்று புவியியலாளர்கள் அழைக்கிறார்கள். இதற்கு, இங்கு காணப்படும் பல்லுயிர்த்தன்மையே முக்கியக் காரணம். கடல் பகுதியில் அமைந்துள்ள சங்கிலித் தொடரான தீவுக்கூட்டங்களுக்கு ஆர்ச்சிபெலகோ என்று பெயர்.  இவற்றில் நிறைய எரிமலைகள் அமைந்துள்ளன. இவை என்ன காரணத்தில் வெடிப்புக்குள்ளாகின்றன என்பதை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.  1953ஆம் ஆண்டு பார்சினாவில் உள்ள ஆர்ச்சிபெலகோ எரிமலை லாவாவை வெளியேற்றியது. பிறகு, 1993 ஆம் ஆண்டு பசிபிக் பகுதியிலுள்ள எவர்மன் எரிமலை, வெடித்தது.இந்த இரண்டு எரிமலைகள் இரண்டுமே இன்று வரை இயங்கி வருகின்றன. “நாங்கள் இந்த எரிமலையில் வெளியாகும் லாவா அளவையும், ஏற்படும் ஆபத்து பற்றியும் ஆராய்ந்து வருகிறோம்” என்றார் நெதர்லாந்தின் உட்ரெச்ட் பல்கலைக்கழக பேராசிரியரான தூவே வான் ஹின்ஸ்பெர்ஜன் (). எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற ஆபத்தை ஏற்படுத்தும் என்ற பயம் இருப்பதால்தான் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் பயப்படுகின்றனர். எனவே, எரிமலைகளின் வெடிப்பை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.  லாவாவில் க

தொன்மைக்கால மக்களை அழித்த எரிமலைக் குழம்பு!

படம்
தொல்குடியிருப்புகளை மூழ்கடித்த எரிமலைக் குழம்பு! மெக்ஸிகோவின் உள்ள மெக்ஸிகோ சிட்டியில் அமைந்துள்ளது, போபோகாடெபெட்ல் (Popocatepetl) எரிமலை. உலகிலேயே ஆபத்தான எரிமலை என்று புவியியல் வல்லுநர்களால் கூறப்படும் எரிமலை இது. கடந்த 23 ஆயிரம் ஆண்டுகளாக லாவா குழம்பை வெளித்தள்ளி வருகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளை அறியும்போது, எளிதாக எதிர்கால வெடிப்புகளைக் கணிக்க முடியும் என புவியியல் வல்லுநர்கள் நம்புகிறார்கள். இதற்காக, லாவா குழம்பு, இதனால் உருவான பாறைகளையும் ஆய்வு செய்து கனிமங்களை  அடையாளம் கண்டறிந்து வருகிறார்கள்.  ”நாங்கள் இப்போது செய்யும் ஆராய்ச்சி மூலமாக எரிமலை வெடிப்பு நடந்தபோது உள்ள சூழ்நிலைகளை அறிய முடியும். ஒருவகையில் எரிமலையின் கடந்தகால வரலாற்றை மறு உருவாக்கம் செய்ய தகவல்களை சேகரித்து வருகிறோம்” என்றார் புவியியல் ஆய்வாளர் இஸ்ரேல் ராமிரெஸ் உரைப்.  ஹவாயில் உள்ள எரிமலைகளில் வெடிப்பு வேகமும், அடர்த்தியும் குறைவு. நிலப்பரப்பில் தினசரிக்கு 1 - 33 மீட்டர் நீளத்திற்கு பரவுகிறது. ஆனால்  மெக்சிகோவில் உள்ள போபோ எரிமலை வெடித்து வெளியேறும் லாவாவின் அடர்த்தி அதிகம். லாவா குழம்பில் ஏர

வெப்பம் குறைந்து வரும் எரிமலைப் பகுதிகள்!

படம்
  வெப்பம் குறைந்துள்ள எரிமலைப்பகுதிகள்! பூமியில் அடியில் உள்ள வெப்பம் காரணமாக, பாறைகளை எரித்தபடி எரிமலைக்குழம்பு வெளியே வருகிறது. இப்படி எரிமலைக்குழம்பு வெளியேறும் இடங்களை எரிமலை என்கிறோம். எரிமலைக் குழம்பு வெளியேறும் நிலப்பரப்பிற்கு ஹாட்ஸ்பாட்(hot spot) என்று பெயர். பொதுவாக இப்படி எரிமலைகள் உருவாகின்றன என்றால் அந்த இடம், பூமியின் அடிப்பரப்பிற்கு நெருக்கமாக உள்ளது என்று பொருள்.  சில எரிமலைப்பகுதிகளில் வெளியேறும் எரிமலைக்குழம்பில் பல்வேறு வேதிப்பொருட்கள் உண்டு. குளிர்ந்த எரிமலையில் சிலசமயங்களில் எரிமலைக்குழம்பு வெளிவந்தாலும் அவை ஒப்பீட்டளவில் வெப்பநிலை குறைந்தவை என ஆய்வுகள் கூறுகின்றன.  நிலத்திட்டு, கடல்நீர்த்தட்டு ஆகியவை ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்போது மலைகள், எரிமலைகள் தோன்றுகின்றன. நிலத்திட்டின் நடுப்பகுதியில் எரிமலை இயக்கங்கள் ஏற்படுவதாக புவியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  ஹவாய் தீவுகள், தெற்கு அட்லாண்டிக் அஸ்சென்சன் தீவு, தெற்கு பசிபிக் பிட்கெய்ர்ன் தீவுகள் ஆகியவற்றை உதாரணமாக கூறலாம்.  பல்வேறு தனிப்பட்ட பகுதிகளில் எரிமலை வெடிப்பு இருப்பதை ஆய்வாளர் ஸியுவான் பாவோ என்று ஆய்வா

கடலுக்குள் உள்ளே உருவான எரிமலை

படம்
  கடல் ஆய்வில் வெளியான ஒற்றை எரிமலை! பசிபிக் கடலில் வடமேற்காக  952 கி.மீ. தொலைவில் பயணித்தால் ஹோனோலுலு என்ற இடத்தைப் பார்க்கலாம். இங்கு கடல்மட்டத்திலிருந்து 52 மீட்டர் உயரத்தில் அமைந்த மலைச்சிகரங்கள் உண்டு. கடல் பறவைகள் பாறைகளின் மீது அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இதில்தான் புகாஹோனு (Puhahonu) எனும் எரிமலை உள்ளது என  கண்டறியப்பட்டுள்ளது.  புகாஹோனு என்ற பெயருக்கு, மூச்சை உள்ளிழுக்கும் ஆமை என்று பொருள்.   அண்மையில், இங்கு கடல் படுகை ஆய்வைச் செய்தனர். அப்போதுதான், ஆய்வாளர்கள் ஒற்றையாக இருக்கும் பெரிய எரிமலை ஒன்றை கண்டுபிடித்திருக்கின்றனர்.  ”நாம் பார்க்கும் பகுதி வெளித்தெரியும் 30 சதவீத மலை. அதற்கு கீழே இன்னும் உள்ளது ”என ஹவாய் பல்கலைக்கழக எரிமலை ஆய்வாளர் மைக்கேல் கார்சியா கூறினார். இதுபற்றிய ஆய்வு 2020ஆம் ஆண்டு எர்த் அண்ட் பிளானட்டரி சயின்ஸ் லெட்டர்ஸ் என்ற இதழில் வெளியாகியுள்ளது. கடலுக்கு கீழே உள்ள மலைகள், எரிமலைகள் என தொடர்ச்சி ஹவாயிலிருந்து ரஷ்யாவின் கிழக்குப்பகுதி வரையில் நீண்டுள்ளது.  ஹவாயிலுள்ள மௌனா லோவா (Mauna Loa,) என்ற எரிமலை, 9,170 மீட்டர் உயரம் கொண்டது. உலகில் பெரிய எரிமலை என

நெருப்புச்சொற்களில் அனல் கவிதைகள்- தடை செய்யப்பட்ட புத்தகம்

படம்
தடை செய்யப்பட்ட புத்தகம் வசுமித்ர சிந்தன் புக்ஸ் ரூ.140 சமூகத்தை பிளவுபடுத்தும் அத்தனை சக்திகளுக்கும் தன் சொற்களாலேயே தண்டனையை அறிவித்துவிட்டார் வசுமித்ர. அதற்கான முன்கூட்டிய அறிவிப்பு, தடை செய்யப்பட்ட புத்தகம். மனிதர்களை அடிமையாக்கி சுரண்டியவர்கள், சுரண்டுபவர்கள், சர்வாதிகாரிகள் ஏன் உங்கள் மேலதிகாரி என  யார் படித்தாலும் நூலிலுள்ள ஒவ்வொரு எழுத்தும் முட்களாக குத்தும். கவிதைக்கான அத்தனை சொற்களிலும் அவ்வளவு கோபம். எரிமலையின் லாவாவாக நம் மனதை கொந்தளிக்கச் செய்கிறது. அதுவும் கிறிஸ்துவர்கள் படித்தால் நிச்சயம் தற்கொலை செய்துகொள்வார்கள். அவ்வளவு தூரம் வரலாற்றை குடைந்து கவிதை செதுக்கியுள்ளார் வசுமித்ர. உலக அரசியல், ராஜபக்ச, ட்ரம்ப், கிறிஸ்தவம், ஏசு, பைபிள், ராமன் என அனைத்தும்  தமிழ் மொழியை நாயாக ஏவி கடிக்க வைத்திருக்கிறார் கவிஞர். படிக்கும் அனைவருக்கும் அவரின் இனப்படுகொலை குறித்த கவிதைகள் கனவிலும் துரத்தும் என்பது உறுதி. அமெரிக்காவுக்கு என்று வரும் கவிதைகளில் லாவாவின் வீச்சு அதிகம். அதிலும் என்ன செய்துகொண்டிருந்தாய் ஜூசஸ்? என்பதை எப்படி கிறிஸ்தவர்கள் படிக்கப் போகிறார்