இடுகைகள்

க்ரௌடு பண்டிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

க்ரௌடு பண்டிங் அவசியமா - அத்துமீறலா?

படம்
நோயாளிகளைக் காப்பாற்றும் மக்கள் பங்களிப்பு! நோயாளிகளைக் காப்பாற்றுங்கள் என பல்வேறு செய்தித்தளங்கள், நாளிதழ்களில் விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். நீங்களும் கூட உண்மையை உறுதி செய்து சிலருக்கு பணம் அனுப்பி வைத்திருப்பீர்கள். தற்போது இப்படி பணமற்ற நோயாளிகளுக்கு சிகிச்சைகளுக்கான பணம் திரட்டும் வலைத்தளங்கள் தோன்றியுள்ளன. இம்பேக்ட் குரு, கீட்டோ, மிலாப் ஆகிய வலைத்தளங்கள் இம்முறையில் செயல்படுகின்றன. இதில் எப்படி பணத்தைப் பெறுவது? உங்கள் உறவினருக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்த விபரம்,சிகிச்சை செலவு ஆகியவற்றை சுருக்கமாக எழுதவேண்டும். நிதி உதவி தேவை என கோர வேண்டும். அவ்வளவேதான். அவசர உதவி என்றால் அதனையும் குறிப்பிட்டால் நல்லது. இதில் மேற்சொன்ன வலைத்தளங்கள் ஏன் ஈடுபடுகின்றன. திரட்டப்படும் நிதியில் அவர்களுக்கு பங்கு 5- 10 சதவீதம். இதில் அரசு நேரடியாக தலையிடுவதில்லை என்பதால் கமிஷன் தொகைகளுக்கா க போலியாக ஒரு செய்தி உருவாக்கப்பட்டாலும் யாரும் அதனை கேள்வி கேட்க முடியாது. நோயாளியின் நோய் விவரங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் இதில் வெளிப்படைத்தன்மை குறைவு. வர்