திராவிட தேசியம் - அண்ணாவின் மூன்று உரைகள்
திராவிட தேசியம் - மாநில சுயாட்சி சிஎன் அண்ணாதுரை திராவிடர் கழக வெளியீடு விலை ரூ.ஆறு இந்த நூல் மொத்தம் மூன்று உரைகளை உள்ளடக்கியது. 1961, 1967, 1969 என மூன்று ஆண்டுகளி்ல் அண்ணா, பொது மேடையில் பேசிய உரைகளை நூலாக தொகுத்திருக்கிறார்கள். தொடக்க காலகட்ட உரையில் திமுக மாநில சுயாட்சியோடு, திராவிட நாடு கோரிக்கையை முன்வைக்கிறது. அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ், திமுகவை பிரிவினைவாத கட்சி என கூறி விமர்சித்தது. திராவிட நாடு கோரிக்கையை ஏன் அண்ணா எழுப்பினார் என்பதற்கான எளிமையான விடைகளை அவரது உரையில் படித்துப் புரிந்துகொள்ளமுடியும், மையத்தில் அதிகார குவிப்பு, வரிவருவாய் பாகுபாடு, மாகாணங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைந்த அதிகாரம், அனைத்திற்கும் ஒன்றிய அரசின் கைகளை எதிர்பார்த்து நிற்கும் அவலம், இந்திமொழி திணிப்பு ஆகியவற்றை அண்ணா உரையில் சுட்டிக்காட்டுகிறார். ஆட்சிக்கு வந்தபிறகு பிரவினைவாத சட்டத்தில் திமுகவின் ஆட்சியை கலைத்துவிடவாய்ப்புள்ளது என்பதால், திராவிட நாடு கோரிக்கை மட்டும் கைவிடப்பட்டது. ஆனால் அதைக் கேட்பதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன என அண்ணா தைரியமாக கூறியிருக்க...