இடுகைகள்

சூயிங்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பருவகாலங்களால் நம் உடல்நிலையில் நோய்கள் ஏற்படுகின்றன என்பது உண்மையா? பொய்யா?

படம்
                1. உடல் வலிக்கும் , பருவ காலங்களுக்கும் தொடர்பிருக்கிறது . ரியல் : வீட்டில் உள்ள உங்கள் தாத்தா , பாட்டி ஆகியோர் மழை , வெயில் , பனி பல்வேறு பருவக்காலங்களிலும் முதுகுவலி , மூட்டுவலி என்று புலம்பிக்கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள் . வலிக்கான ஆதார காரணம் பருவகாலமல்ல . உடலில் ஏற்படும் வலியை அது ஊக்கப்படுத்தலாம் . உடலில் வலியை அது உருவாக்குவதில்லை என்பதே ஆஸ்திரேலிய ஆய்வாளர்களின் அறிக்கை சொல்கிற தகவல் . முதுகுவலி , மூட்டுவலி ஏற்படுவதற்கான முதன்மையான காரணத்தைக் கண்டுபிடித்து சரிசெய்தால் , அவர்கள் பருவகாலங்களை குறைசொல்ல வேண்டியிருக்காது . அரிதாக குறிப்பிட்ட பருவச்சூழல் , மூளையிலுள்ள செரடோனின் சுரப்பை அதிகரிக்கிறது . இதனால் சென்சிடிவ்வான உடலைக் கொண்டவர்களுக்கு ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவது உண்டு . 2. கிராஷ் டெஸ்ட்டுகளில் பயன்படுத்தப்படும் மாடல்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன . ரியல் : கார்களில் ஏற்படும் விபத்துகளில் மனிதர்களின் இறப்பைக் குறைக்க டம்மி மாடல்கள் உதவுகின்றன . இவற்றைப் பயன்படுத்தி கார் தயாரிப்பு நிறுவனங்கள் சோதனைகள

சூயிங்கம் வயிற்றில் செரிக்குமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி சூயிங்கத்தை செரிமானம் செய்ய எத்தனை நாட்கள் தேவைப்படும்? சூயிங்கத்தில் செரிமானம் செய்ய வயிறு பெரும்பாலும் சிரமப்படாது. அதில் பெரும்பாலும், இனிப்பு மற்றும சோயாபீன் கலவைகள் இருக்கும். ஈரமான குடலில் சூயிங்கம் ஒட்டாது. பெரும்பாலும் மலத்தின் வழியாக வெளியே வந்துவிடும். சிறுவர்கள் சூயிங்கம்மை நிறைய விழுங்கிவிடும்போது செரிமானக்கோளாறு ஏற்படும். இதன் விளைவாக, ஆபரேஷன் செய்த அதனை அகற்றும சூழல் ஏற்படலாம். நன்றி - பிபிசி 

சூயிங்கம் உடலில் தங்கி விடுமா?

படம்
பிபிசி சூயிங்கம் நம் உடலில் தங்கிவிடுவது உண்மையா? நிச்சயம் இல்லை. பிளாஸ்டிக், சோயா ஆகிய பொருட்களிலான சூயிங்கம் நிச்சயம் வயிற்றுக்குள் போனால் செரிக்காது. ஆனால் அது வயிற்றுக்குள் அப்படி இருக்க முடியாது. காரணம், நம் செரிமான அமைப்பு அப்படி. மூன்று நாட்களுக்குள் மலம் வழியாக வெளியே வந்துவிடும். அதுதான் சூயிங்கம்மின் லிமிட்.  நன்றி: பிபிசி