இடுகைகள்

திறன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திசை கண்டறிவதில் தடுமாற்றம் ஏன்?

படம்
      திசை கண்டறிவதில் தடுமாற்றம் ஏன் ? ஆதிகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடி சமூகமாக இருந்தபோது உணவுக்கான தேடுதலை முடித்துவிட்டு குகைக்கு திரும்பி வரு வதில் பிரச்னைகள் எழவில்லை . அப்போது , மக்கள் தாம் கடந்து சென்ற வழித்தடத்தை மறந்துவிடவில்லை . அப்படி மறந்தால் உயிரை இழக்க வேண்டி வரும் . இன்று முன்பை விட வசதிகள் கூடி யுள்ளது . புதிய இடங்களுக்கு சென்று வர , செயற்கைக்கோளோடு இணைந்த வரைபட வசதிகள் உள்ளன . அவற்றைப் பயன்படுத்தியும் கூட மக்கள் வழிதவறி விபத்துகளை சந்தித்து வருகிறார்கள் . கிராமங்களில் வாயிருக்க வழி கிடைக்காமலா போகப்போகிறது என்பார்கள் . ஆனால் இன்று , மக்கள் பிறருடன் உரையாடுவதை விட தொழில்நுட்பத்துடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார்கள் . புதிய இடங்களுக்கு செல்வது என்றால் காரிலோ , இருசக்கர வாகனங்களோ உடனே அலைபேசியில் உள்ள வரைபட வசதியை சொடுக்கி இயக்குகிறார்கள் . அதில் கூறும் பரிந்துரைகளை மாறாமல் பின்பற்றுகிறார்கள் . இந்த வசதி பெரும்பாலான நேரம் சரியாக வழி காட்டுகிறதுதான் . மறுக்க முடியாது . ஆனால் சில சமயங்களில் தவறாக வழிகாட்டி விபத்து ஏ...

ஜனநாயகத்தை வளர்க்க, அரசு அமைப்புகள் சட்டத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தவேண்டும்!

படம்
      நேர்காணல் பொருளாதார ஆய்வாளர் டாரன் ஆஸ்மொக்லு சில நாடுகள் தோற்றுப்போகையில் சில நாடுகள் வளம் பெறுவது எப்படி? அனைத்து நாடுகளும் வெற்றிபெறுவதற்கு தேவையான பொருளாதார, சமூக காரணங்கள் உள்ளன.இவற்றை ஒருங்கிணைக்க தேர்ந்தெடுக்கும் அமைப்புகள் திறன் பெற்றவையாக இருக்கவேண்டும். இந்த அமைப்புகள் அரசியல் ரீதியாக, சமூகரீதியாக, பொருளாத ரீதியாக சிறப்பானவையாக இருத்தல் அவசியம். வெற்றிபெற்ற நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள் அனைத்து மக்களுக்கும் சரியான வாய்ப்புகளை உரிமைகளை சமத்துவமாக பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். அரசு அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டு வரும். இந்த அமைப்புகள் பலவீனமான மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களை பாதுகாக்கவும் முயலும். அதேசமயம் பெரு, பன்னாட்டு நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தும். கிளர்ச்சி, அதிகாரத்தை கேள்வி கேட்பது சில நாடுகளை வளப்படுத்தும் என பொருளாதார வரலாற்று அறிஞர் ஜோயல் மொக்யிர் கூறியிருக்கிறார். இக்கருத்தை ஏற்கிறீர்களா? ஒரு நாட்டின் வளர்ச்சியில் கிளர்ச்சி, அதிகாரத்தை கேள்வி கேட்பது முக்கியம் என்ற ஜோயலின் கருத்தை நான் ஏற்கிறேன். இந்த கிளர்ச்சிப் போராட்டம் என்பது சமந...

குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்பாடு - ஜீன் பியாஜெட்டின் ஆய்வு

படம்
  காலத்திற்கேற்ப குழந்தைகளின் அறிவுத்திறன் எப்படி மாறுகிறது, குறிப்பிட்ட வயது வரும்போது ஏற்படும் மாற்றங்கள் என்ன, மனநிலை மேம்பாடு ஆகியவற்றை பற்றி உளவியலாளர் ஜீன் பியாஜெட் ஆராய்ச்சி செய்தார். குழந்தைகள் இயல்பாகவே சுதந்திரமாக இயங்கி வேண்டும் விஷயங்களைக் கற்றுக்கொள்பவர்கள் என ஜீன் நம்பினார். அவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் குறிப்பிட்ட சூழலை அமைத்துக்கொண்டு வழிகாட்டினால் போதுமானது என கருதினார். கல்வி என்பது ஆண், பெண் என இருபாலினத்தவருக்கும் புதிய விஷயங்களை செய்வதற்கான திறனை தருவதே ஆகும் என்று கூறினார்.  குழந்தைகள் தங்களுக்கு இயற்கையாக உள்ள ஐம்புலன்கள் மூலம் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இதில் படைப்புத்திறன், கற்பனைத்திறன் ஆகியவையும் உள்ளடங்கும். ஒன்றை உணர்வது, அதை தேடுவது, மேம்பாடு அடைவது, தேர்ச்சி பெறுவது என குழந்தைகளின் அறிவுத்திறன் வளர்கிறது. 1920ஆம் ஆண்டு, ஆல்பிரட் பைனட், குழந்தைகளின் அறிவுத்திறனுக்கான அளவீட்டை உருவாக்கினார். இவர் கேள்விகளுக்கான பதிலை மட்டுமே எதிர்பார்த்தார். அதை அடிப்படையாக நினைத்தார். ஆனால், அந்த பதில்கள் குழந்தைகளைப...

மனிதர்கள் இல்லாத சூழலில் உயிர்பிழைத்து வாழுமா நாய்கள்?

படம்
  மனிதர்கள் இல்லாத உலகம் ஓடிடிகளில், இணையத்தில் உள்ள மனிதர்கள் பலரும், உலகம் அழியும் சூழலில் மனிதர்கள் எப்படி பிழைப்பது என யோசித்து வருகிறார்கள். இதைப்பற்றி நாவல், சிறுகதை, குறும்படம், வெப்தொடர், திரைப்படம் என படைப்புகளை   எடுத்துவருகிறார்கள். நோயோ அல்லது அணு ஆயுதங்கள் கொண்ட போராலோ மக்கள் பேரழிவை சந்தித்து மீண்டும் உலகில் வாழத் தொடங்குவதுதான் கதை. இந்த மையப்பொருளை அப்படியே மனிதர்கள் இல்லாத உலகில் விலங்குகள் குறிப்பாக நாய்களை வைத்து யோசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும்? பல்லாண்டுகளுக்கு முன்னரே வீட்டு விலங்கான நாய், மீண்டும் காட்டுக்குத் திரும்பி உணவுக்காக வேட்டையாட முடியுமா, மனிதர்கள் துணையில்லாமல் தன்னைக் காத்துக்கொள்ளுமா என்ற கேள்வி முக்கியமானது. இதே கேள்வியை பூங்காக்களில் உள்ள மனிதர்களைக் கேட்டால், அது சாத்தியமே இல்லை என்று கூறி காரணங்களை அடுக்குவார்கள். ஆனால், அது அவர்கள் பார்வைக் கோணத்தில் சரியாக இருக்கலாம். முழுக்க உண்மையல்ல.   தொடக்கத்தில் சில நாய் இனங்கள் இப்படி தடுமாறினாலும், விரைவில் சூழலுக்கு ஏற்ப தன்னை பொருத்திக்கொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள...

கண்டுபிடிப்புகளில் ஆய்வுகளில் இந்தியர்கள் பின்தங்குவதற்கான காரணங்கள் - சேட்டன் பகத்

படம்
  சாம் ஆல்ட்மேன், துணை நிறுவனர் ஓப்பன் ஏஐ இந்தியர்கள் தமக்குத்தாமே பெருமை பட்டுக்கொள்ளக்கூடியவர்கள். ஆனால். இந்த மனப்பான்மை நம்மில் பெரும்பாலானோர்க்கு பாதகத்தையே அதை நாம் தொடக்கத்திலேயே அறிவதில்லை. அண்மையில் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் துணை நிறுவனர் சாம் ஆல்ட்மேன், இந்தியாவுக்கு வந்தார். அவரிடம் இந்திய ஸ்டார்ட்அப்கள் பத்து மில்லியன் டாலர் செலவில் சாட் ஜிபிடியைப் போல ஏஐ மாடலை உருவாக்க முடியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. ‘’பத்து மில்லியன் டாலர் செலவில் அப்படி மாடலை இந்தியா உருவாக்க முடியாது. இன்றளவும் அப்படி உருவாக்கிவிடவில்லை. அப்படி உருவாக்கினால் கூட அது சாட் ஜிபிடியோடு போட்டியிடமுடியாது’’ என்று கூறினார். உடனே அவருக்கு சவால் விட்டு ட்விட்டர், லிங்க்டு இன் தளங்களில் பதிவுகள் இடப்பட்டன. ‘’சாமின் சவாலை ஏற்றுக்கொண்டோம்’’.’’ செய்துமுடிப்போம்’’ என பகிரங்க சவால்கள் விடப்பட்டன. பிறகு, நிலவரம் கலவரமாவதை உணர்ந்த சாம், பத்து மில்லியன் டாலர்கள் என்ற செலவில் சாட் ஜிபிடி உருவாக்க முடியாது என்ற கருத்தில் தான் பேசியதாக கூறினார். இந்தியாவில் பொருளாதார முன்னேற்றத்திற்காக சேவைத்துறையில் புகழ்பெற்ற நிறு...

கிரியேட்டிவிட்டியை அடையாளம் காண்பது எப்படி? - சில அறிவுறுத்தல்கள்....

படம்
  புதுமைத்திறன் உலகம் கிரியேட்டிவிட்டியை உருவாக்கிட பிறருக்கு தெரியாத கலை வடிவம் ஏதும் கிடையாது என எழுத்தாளர் ரிக் ரூபின் கூறுகிறார். இவர் இதுபற்றி, தி கிரியேட்டிவ் ஆக்ட் – எ வே ஆஃப் பீயிங் என்ற நூலை எழுதியிருக்கிறார்.’’ நீங்கள் கிரியேட்டிவிட்டியை நாடகம் போல எடுத்துக்கொண்டு முன்னேறி செல்லுங்கள். நிஜ உலகைப் போலவே அனைத்து விஷயங்களையும் உருவாக்குங்கள். அது சிறியதாக அல்லது   வினோதமாக கூட இருக்கலாம். புதிய பரிசோதனை முயற்சிகளை செய்து பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் உருவாக்கியதை காட்ட நினைத்தால் உலகில் அதை வெளியிடலாம்.’’ என்பது இவரது கருத்து. தனி பார்வை ‘’உங்களுக்கென தனி பார்வையை உருவாக்கிக்கொள்ளுங்கள்’’ என ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ் கூறுகிறார். இவர் 50 திரைப்படங்களைப் பார்த்து அதன் வழியாக தனக்கான கிரியேட்டிவிட்டி பாதையை உருவாக்கிக்கொண்டார். தன்னை வழிநடத்திய திரைப்படங்களாக எ பியூட்டிஃபுல் மைண்ட் தொடங்கி 1917 என்ற திரைப்படங்கள் வரை குறிப்பிடுகிறார்.’’யாரையும் நகல் செய்யாதீர்கள்’’ என்றும் குறிப்பிட மறக்கவில்லை. ஆற்றலின் பிரதிபலிப்பு ‘’நான் திரைப்படங்களுக்கான நடிகர...

பாதாள உலகில் வாழும் புதிய அரிய உயிரினங்கள்!

படம்
  பூமிக்கு அடியில் வாழும் உயிரினங்கள்!  இயற்கைச்சூழல் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ வாய்ப்பு அளிக்கிறது. ஹவாய் தீவில் உள்ள எரிமலை குழாய்களில் வாழும் உயிரினங்கள் பற்றி அறிந்தால் உங்களுக்கு இப்படி வியப்பு ஏற்படலாம். இங்கு நிலத்திற்கு கீழே வெளுத்த கண் பார்வையற்ற நிறைய உயிரினங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எரிமலைகள் ஹவாய் தீவு நெடுக அமைந்துள்ளன. இருளான வெளிச்சமில்லாத சூழலையும் சமாளித்து வௌவால், எலி தவிர நிறைய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சியை ஹவாய் பல்கலைக்கழக  ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர்.  பிக் ஐலேண்ட் எனும் இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் அறிவியலுக்கு புதிய உயிரினங்கள் (Planthoppers,Omnivores,Milipedes) தெரிய வந்துள்ளன. கடந்த மார்ச் மாதம், ஆராய்ச்சி குழுவினர் எரிமலைக்குழாயில் மேலும் ஆய்வு செய்ய ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. “இங்கு நாங்கள் ஆராய்ச்சி செய்யும்போது ஒவ்வொருமுறையும் புதிய உயிரினங்கள் கண்டறியப்படுகின்றன. அவை புதிய உயிரினங்கள் அல்லது அறிந்த உயிரனத்தின் புதிய வகையாகவே இருப்பது ஆச்சரியம்” என்றார் ஹவாய...

கனவுகளின் மீது கவனம் குவிக்கும் மேற்கு நாடுகள்! - கற்றதும் பெற்றதும் என்ன?

படம்
  கனவுகளின் ஆராய்ச்சி! கனவுகளை தானே கட்டமைக்கும் லூசிட் முறையில் கற்றலையும் புதுமைத்திறனையும் அதிகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை செய்து வருகின்றனர்.  விண்வெளிக்கு சுற்றுலா சென்றுவருவது, சூரியனுக்கு விண்கலங்களை அனுப்புவது வரையில் முடியாத விஷயங்களே விஞ்ஞானிகளுக்கு கிடையாது. ஆனால் அவர்களையும் குழப்ப வைக்கும் விஷயம், கனவுகள்தான். நம் அனைவருக்கும் தூங்கும்போது வரும் கனவுகளைத் தான் இங்கு சொல்லுகிறோம். இந்த கனவுகள் அன்றாட நிகழ்ச்சிகள் அல்லது நிறைவேறாத ஆசைகளை அடிப்படையாக கொண்டிருக்கலாம். இவற்றை ஆய்வு செய்து உண்மையான துல்லியத்துடன் கனவுகளை பார்க்க அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர்.  பொதுவாக ஒருவர் கனவுகண்டு காலையில் எழுந்தால் 90 சதவீதம் மறந்துவிடவே வாய்ப்பு அதிகம். அப்படியும் அதனை கூறினால் அதில் நிறைய தவறுகள் இருக்கும். துல்லியமான தன்மை இருக்காது. கனவுகளை நாமே திட்டமிட்டு உருவாக்கினால் எப்படியிருக்கும்? கனவு காணும்போதுகூட நாம் கனவில்தான் இருக்கிறோம் என்ற விழிப்புணர்வையும், அதில்  வரும் சம்பவங்களையும் கூட நம்மால் உருவாக்க முடிந்தால் அதை லூசிட் கனவுகள் என்று கூறல...

நோயிலிருந்து ஒருவரைக் காப்பாற்ற ஒரு டோஸ் தடுப்பூசி போதும்!

படம்
                      ஒரு டோஸ் போதும் ! இங்கிலாந்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான அமைப்பின் தலைவர் கேட் பிங்காம் , ஒரு முறை தடுப்பூசியை உடலில் செலுத்திக்கொண்டால் போதும் . அதுவே பெருந்தொற்றிலிருந்து ஒருவரைக் காப்பாற்றும் என்று கூறினார் . மருத்துவர் பால் ஸ்டோபில்ஸ் ஒருமுறை செலுத்திக்கொள்ளும் தடுப்பூசியை அவசியமானது என்று கூறியதோடு , இரண்டாவது பூஸ்டர் ஷாட்டை போட்டுக்கொள்வது கொரோனாவிலிருந்து ஒருவரைக் காக்கும் என்று கூறினார் . இருமுறை தடுப்பூசியை போடவேண்டுமென்று கூறிவந்த இந்தியா , இப்போது தடுப்பூசி இல்லாத நெருக்கடியில் ஒரு டோஸ் மட்டும்தான் மக்களுக்கு வழங்கி வருகிறது . மருத்துவமனைகளிலும் கூட இரண்டாவது டோஸை இல்லையென்று சொல்லிவரும் நிலை உள்ளது . ட்விட்டரில் இதுதொடர்பாக விவாதங்கள் நடந்தன . இறுதியாக நிதி ஆயோக்கின் உறுப்பினரான டாக்டர் விகே பால் கோவிஷீல்டு மருந்து மக்களுக்கு இரண்டு டோஸாக வழங்கப்படுவது உறுதி . அதில் மாற்றமில்லை என்று கூறியிருக்கிறார் . இங்கிலாந்தில் முதலில் தடுப்பூசியை ஒருமுறை மட்டுமே வழங்க ஏற்பாடானது . ...

புதிய மொழிகளைக் கற்றால்தான் கணினி உலகில் வேலைவாய்ப்புகளை பெற முடியும்! - பழைய மொழிகளால் ஏற்படும் பாதிப்புகள்

படம்
  காலாவதியாகி வரும் கணினி மொழிகள் ! கணினி உலகில் ஆயிரக்கணக்கான புதிய புரோகிராமிங் மொழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன . அவற்றைப் பயன்படுத்துவதில் அரசு , தனியார் நிறுவனங்களிடையே தயக்கம் நிலவுகிறது . இன்று உலகம் முழுவதும் வேலைவாய்ப்புகள் அலுவலகம் என்பதைக் கடந்து வீடு நோக்கி நகர்ந்து வருகின்றன . அதேசமயம் கணினி புரோகிராம்கள் எழுதப்படும் மொழி என்பது பெரியளவு மாறுதலுக்கு உட்படவில்லை . கணினி புரோகிராம்களை நாம் மேம்படுத்தாதபோது அரசு அமைப்புகள் , மருத்துவமனைகள் , தனியார் நிறுவனங்கள் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது . குறிப்பிட்ட கணிதங்களை செய்யவும் , தகவல்களை உள்ளிடவும் மட்டுமே புரோகிராமிங் மொழிகளை பயன்படுத்தினால் அதில் முன்னேற்றம் காண்பது கடினம் . ’’ புதிய மொழிகளைக் கற்று செயல்படுத்துவதற்கான இடம் டெக் உலகில் நிறையவே உள்ளது’’ என்கிறார் எம்ஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான பார்பரா லிஸ்கோவ் . டெக் நிறுவனங்களில் கூகுள் , கோ எனும் புரோகிராமிங் மொழியை மேம்படுத்தி வருகிறது . ஒரு கணினி மொழி பிரபலமாக அதற்கென பயன்பாடுகள் , தேவைகள் உருவாக்கப்படுவது ...

குழந்தைகளுக்கு சரி, தவறு தெரியுமா? - மிஸ்டர் ரோனி பதில்

படம்
மிஸ்டர் ரோனி டிம்மர் ஸ்விட்சுகள் மின்சாரத்தை அதிகம் சேமிக்கின்றனவா?  திருகும் இந்த வகை ஸ்விட்சுகள் எளிதாக இயக்க முடிவது இதன் சிறப்பம்சம். ஆனால் இதனால், மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்று கூறமுடியாது. இதனை அணை நீரை சேமித்திருப்பது போல புரிந்துகொள்ளலாம். இதனால் மின்சாரம் சேமிப்பது போல தோன்றலாம். ஆனால் பிற ஸ்விட்சுகளைப் போலவே இதுவும் செயல்படுகிறது. 2 குழந்தைகள் பிறக்கும்போதே சரி, தவறு என்பதைப் புரிந்துகொண்டு பிறக்கிறார்களா? உளவியலாளர்கள் குழந்தைகள் வளர வளர வெளிப்புறச்சூழலைப் பெற்று அறிவை வளர்த்துக்கொண்டு சரி தவறுகளைப் புரிந்துகொள்கின்றனர் என்று முடிவுக்கு வந்தனர். ஆனால் உண்மையில் குழந்தைகள் பிறக்கும்போதே சரி, தவறு என்ற விஷயங்களை புரிந்துகொள்கிறார்கள் என்று தற்போது சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 2010ஆம் ஆண்டு அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றிய ஆராய்ச்சி ஒன்றை செய்தனர். இதில் பிறந்து மூன்று மாதங்களான குழந்தைகள் மலைத்தொடர் வடிவிலான உருவத்தை உருவாக்குகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சில எழுத்துகளையும் அடையாளம் கண்டுபிடிக்க...

வேகமாக வாசிப்பது என்பது உண்மையா?

படம்
தெரிஞ்சுக்கோ! எனக்குத் தெரிந்த நண்பர் இதழியில் துறையில் பணியாற்றுகிறார். மாதம் அறுபது எழுபது நூல்களை படித்து முடிப்பவர். அவர் எப்படி படிக்கிறார் என்பதை நான் எவ்வளவு முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அப்படி வாசிப்பது பற்றியும், அவரது அறிவுத்திறன் பற்றியும் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. அவர் படித்த விஷயங்களை நிறைய முறை அவரது நிறுவனத்தில் அமல்படுத்தி சாதித்திருக்கிறார். எப்படி இப்படி சிலரால் மட்டும்  வேகமாக படிக்க முடிகிறது. இயல்பிலேயே வாசிக்கும் பழக்கம் கொண்டவர்கள் நிறைய படிக்கும் முடிவெடுப்பது முக்கியம். அப்போதுதான் படிக்கும் வேகம் கைகூடும். அதற்காக மூளை இயல்பாக குறிப்பிட்ட வார்த்தைகளை நினைவகத்தில் பதிவு செய்து வைத்திருக்கும். இதனால் குறிப்பிட்ட வார்த்தைகளை முழுமையாக படிக்காமலேயே உங்களுக்கு அதுதான் என தெரிந்துவிடும். பின் எதற்கு, அதனைப் படிக்கவேண்டும்? இதனை சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். சிலர் இப்படி வேகமாக படிப்பவர்கள் ஒன்றும் விவேகானந்தர் போல கிடையாது என்று வாதிடுகிறார்கள். உலகளவில் கல்லூரி படிக்கும் மாணவர்கள் நிமிடத்திற்கு 200 முதல் 400 வரையிலான வார்...

கைதிகளுக்கு மறுவாழ்க்கை தருகிறது பின்லாந்து!

படம்
சிறைவாசிகளுக்கு ஏ.ஐ. பயிற்சி! செய்தி: பின்லாந்து நாட்டிலுள்ள சிறைக்கைதிகளுக்கு அரசு, செயற்கை நுண்ணறிவு பற்றிய பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகளுக்கு தயார் செய்கிறது. பின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் ஏ.ஐ. பற்றிய முன்மாதிரி பாடத்திட்டத்தை தயாரித்தது. இதன் நோக்கம், செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை மக்களுக்கு ஏற்படுத்துவதே ஆகும். அம்முயற்சிக்காகத்தான் சிறைவாசிகளுக்கு டேப்லட், கணினிகளை கொடுத்து பயிற்சி அளித்து வருகின்றனர். தகவல் யுகத்தில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான கணினி திறன் திட்டமாக அமையவேண்டும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. இந்த நோக்கத்தின்படி மாணவர்களுக்கான திட்டமாகவே ஏ.ஐ.பயிற்சி முறை உருவானது. குற்றத்துறை மேலாளரான பியா புலாலகாவின் முயற்சியால் அரசு, ஏ.ஐ. பயிற்சிகளை சிறைக்கைதிகளுக்கு வழங்க இசைந்துள்ளது. “இப்பாடத்திட்டத்தை ரியாக்டர் என்ற நிறுவனம் செயல்படுத்தியது. கைதிகளின் முகவரிகளை கருப்பு பட்டியலில் வைத்திருப்பதால், இணைய இணைப்பு பெறுவதில் சிக்கல் இருந்தது. சிறை முகவரியில் அவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி வசதி உட்பட செய்துகொடுத்திருக்கிறோம். சிறையிலிருந்து வ...