இடுகைகள்

க்யூபா - மருத்துவர்கள் வெளியேற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரேசிலிலிருந்து வெளியேறும் மருத்துவர்கள்!

படம்
கியூப மருத்துவர்கள் வெளியேற்றம்! பிரேசிலில் நடந்த ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து  கிராமப்புறங்களில் பணியாற்றிவந்த 8 ஆயிரம் மருத்துவர்களை கியூப அரசு திரும்ப பெற்றுள்ளது. பிரேசிலில் அண்மையில் நடந்த தேர்தலில் பொறுப்பேற்ற வலதுசாரி தலைவரான ஜெய்ர் பொல்சொனாரோ, கியூப மருத்துவர்களின் பணியை அச்சுறுத்தும்படியானது என்று கூறினார். இதைத்தொடர்ந்து கியூப அரசு, மருத்துவர்களை திரும்ப பெறும் முடிவை ஹவானாவில் அறிவித்தது. 2013 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் டில்மா ரூசெஃப் மைஸ் மெடிகோஸ் என்ற பெயரில் மருத்துவர்கள் தட்டுப்பாடாக உள்ள கிராமப்புறங்களில் தொடங்கிய திட்டம் இது. பிரேசிலின் உள்நாட்டு மருத்துவர்கள் பெரிய ஆர்வம் காட்டாததால் கிராம மருத்துவப்பணியிடங்களில் கியூப மருத்துவர்கள் பணிபுரிய அழைக்கப்பட்டனர். மாதம் 3,500 டாலர்கள் சம்பளம், உதவித்தொகை, உணவு, தங்கும் வசதி ஆகியவையும்  பிரேசில் அரசால் வழங்கப்பட்டன.  பிரேசில் சுகாதாரத்துறையும் உலகசுகாதார நிறுவனமும்(Pan American health organization) இணைந்து கியூப அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, கியூப அரசுக்கு பிரேசில் பணம் செலுத்திவிட, அவர்கள் மருத்துவர்களை தேர்ந்