இடுகைகள்

மொழி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொழி என்பது குழந்தைகளின் தொடக்க ஆண்டுகளில் எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மொழி என்பது குழந்தைகளின் தொடக்க ஆண்டுகளில் எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது? குழந்தைகள் பெற்றோர் வீட்டில் பேசும் மொழியை பழகிக்கொள்கிறது. பிறகு தனது தேவையைக் கூறுகிறது. அதுவரை அந்த குழந்தை கொஞ்சுமொழியில் செய்வது எல்லாமே முயற்சிகள்தான். அதற்கான அர்த்தம் வேறாக உள்ளது என புரிந்துகொள்ளலாம். மொழி என்பது கருத்தை சொல்வதற்கான வாகனம். எனவே மொழி என்பது முக்கியமானதுதான். சொற்கள், வார்த்தைகள் மொழியில் முக்கியமானவைதான். குழந்தையாக இருக்கும்போது சொல்லும் சொல்ல நினைக்கும் சொற்கள், வார்த்தைகள் அந்தளவு முக்கியத்துவம் பெறுவதில்லை.  குழந்தைகள் மொழியை எப்படி பேசி பழகுகின்றன? பிறந்து முதல் இரண்டு மாதங்களில் குழந்தைகள் எழுப்ப முடிவது ஒலியை மட்டுமே. அந்த நிலப்பரப்பு சார்ந்த மொழியைக் கேட்டு அதை நகல் செய்து பேச முயல்வது, குறிப்பிட்ட சொல், வார்த்தையை பிரதிபலிக்க முயல்வது ஆகியவை நான்கு மாதங்களில் நடக்கிறது. முதல் ஆண்டின் இறுதியில் தாய்மொழியின் சிக்கலான சொற்களை, வார்த்தைகளை பேச முயல்கிறது. ஏறத்தாழ இந்த காலகட்டத்தில் பிறர் பேசும் பேச்சுகளிலுள்ள சொற்களை பிரதியெடுப்பது...

சீன மொழியைப் பரப்பும் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டிற்கு வயது 20

படம்
      சீன மொழியைப் பரப்பும் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டிற்கு வயது 20 உலகில் உள்ள நூறு நாடுகளில் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டுகள் செயல்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் புதிதாக பத்து கிளைகள் பெலாரஸ்,. ரஷ்யா, கிரிபட்டி,லெசேதோ, மலேசியா, மெக்சிகோ, நிகரகுவா, ஸ்பெயின், ஹங்கேரி, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அமைக்கப்படவுள்ளன. உலகளவில் சீன மொழி, கலாசாரத்தை பரப்புவதற்கான உருவாக்கப்பட்டவையே கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டுகள். இதன் வழியாக, சீனமொழியை கற்க விரும்புபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டில் சிறப்பாக பணியாற்றி பத்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருபவர்களுக்கு சீன அரசின் கல்வித்துறை வாயிலாக விருதுகள் வழங்கப்பட்டன. இப்படியான வழங்கப்பட்ட விருதுகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 159. பத்தாண்டுகளுக்கு மேலாக கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்டில் பணியாற்றி வரும் இயக்குநர்களின் எண்ணிக்கை 33. 2004ஆம் ஆண்டில் தாஷ்கண்டில் நிறுவப்பட்டதே முதல் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட். தொடக்கத்தில் இதன் மாணவர்களின் எண்ணிக்கை இருநூறு. இப்போது ஊழியர்களின் கடினமான உழைப்பால் எண்ணூறாக மாறியுள்ளது. ...

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் - மொழிபெயர்ப்பில் இணையத்தின் தாக்கம், பல்வேறு பிரச்னைகள் பற்றி கவனம் கொள்ளவேண்டும்!

படம்
      சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் உலகளவில் ஆக்ஸ்போர்ட் பிரஸ் பதிப்பு நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனம், தனது நூல்களை பல்வேறு உலக மொழிகளில் பதிப்பித்து வருகிறது. பழைய இந்தியாவில் முதல் பிரதமரான நேருவால் தொடங்கப்பட்ட சாகித்திய அகாதெமி நிறுவனம், பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் படைப்புகளை மொழிபெயர்த்து வெளியிட்டது. இந்து பேரினவாத அரசியலில் சாகித்திய அகாதெமி, நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆகிய நிறுவனங்கள் சிக்கி, தங்களது ஆக்கப்பூர்வத் திறனை எப்போதோ இழந்துவிட்டன. இணையத்தில் ஆங்கில வழியாக மொழிபெயர்ப்பவர்கள் அதிகம் உள்ளனர். குறிப்பிட்ட மொழியைக் கற்று அதன் வழியாக தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்கள் அல்லது உள்ளூர் மொழியில் மொழிபெயர்ப்பு செய்வது குறைந்துவிட்டது. இதுபோல மொழிபெயர்ப்பை செய்வதை குறிப்பிட்ட மொழியை திணிக்க முயலும் ஒன்றிய அரசு ஊக்குவிப்பதில்லை. தாய்மொழியை வளர்க்க வேண்டுமெனில் குறிப்பிட்ட மாநில அரசுகள்தான களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். தெற்காசியாவில் சால்ட் என்ற மொழிபெயர்ப்பு திட்டம் உருவானது. திட்டமாக இப்படி உருவானாலும் அமைப்பு ரீதியாக ஐஎல்டி கொரியா அல்லது கோத்தே இன்ஸ்டிடியூட...

விழிப்புணர்வோடு உரையாடலுக்கான மொழியைத் தேர்ந்தெடுத்து பேச கற்க வேண்டும்

படம்
                We are dangerous when we are not conscious of our responsibility for how we behave, think, and feel.non violent communication பிறரிடம் பழகும்விதம், சிந்திப்பது, உணர்வது ஆகியவற்றில் விழிப்புணர்வு இல்லாத நிலையில், அபாயகரமானவர்களாக மாறுகிறோம். We can replace language that implies lack of choice with language that acknowledges choice.-non violent communication வாய்ப்புகள் பற்றாக்குறையாக உள்ள மொழியைத் தேர்ந்தெடுப்பதை விடுத்து, வாய்ப்புகளைக் கொண்ட மொழியைத் தேர்ந்தெடுக்கவேண்டும் Our language obscures awareness of personal responsibility.-non violent communication தனிப்பட்ட பொறுப்புணர்வைக் கொண்ட அதை வெளிக்காட்டும் உரையாடல் மொழியைப் பேச பழக வேண்டும் நவீன காலத்தில் உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டால் வருகிற நேரடி பதில் போல யாரும் எந்த பதில்களையும் கூறுவதில்லை. தாங்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளில் கூட அதை ஏற்று பதில் கூற மறுக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். அவரது பள்ளிக்கு மாணவர்கள் குறைவாகவே வருகிறார்கள். அவர்களை அவராகவ...

மொழி என்பது மனிதர்களுக்கே உரிய சிறப்பு அம்சம் - நோம் சாம்ஸ்கி

படம்
  நோம்ஸ் சாம்ஸ்கி மொழியியலாளர், தத்துவவாதி, அறிவுத்திறன் சார்ந்த அறிஞர், சமூக செயல்பாட்டாளர் என சொல்லிக்கொண்டே போகலாம். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் யூதப்பெற்றோருக்குப் பிறந்தார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில்  தத்துவம், மொழியியல் என இரண்டு பாடங்களை படித்தார். முனைவர் பட்டங்களை நிறைவு செய்தார். 1955ஆம் ஆண்டு, எம்ஐடியில் சேர்ந்தவர் 1976இல் அங்கு பேராசிரியரானார்.  நவீன மொழியியல் சிந்தனை மக்களுக்கு பரப்பியதில் முக்கிய பங்காற்றிய ஆளுமை. அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேசுவது, அரசதிகாரத்தை தீவிரமாக எதிர்ப்பது என நோம் சாம்ஸ்கி எதையும் விட்டுவைக்கவில்லை. அதனாலேயே இவரது பெயரைக் கூறினாலே சர்ச்சையும் கூடவே வந்துவிடும். அறிவியல் பங்களிப்புக்காக ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். மொழியியல் அறிஞர் கரோல் ஸ்காட்ஸ் என்பவரை மணந்தார். இவரது மனைவி 2008ஆம் ஆண்டு மரணித்தார்.  முக்கிய படைப்புகள்  1957 சின்டாக்டிக் ஸ்ட்ரக்சர்ஸ்  1965 கார்டீசியன் லிங்குயிஸ்டிக்ஸ் 1968 லாங்குவேஜ் அண்ட் மைண்ட் நோம் சாம்ஸ்கி, மொழி என்பது மனிதர்களுக்கான சிறப்பான அம்சம் என்று கருத்து கூறினார். இதி...

மொழி என்பது உடல் உறுப்பு போன்று வளர்ச்சி பெறக்கூடியது - நோம் சாம்ஸ்கி

படம்
  20ஆம் நூற்றாண்டில் கற்றல் கோட்பாட்டை பி எஃப் ஸ்கின்னர், ஆல்பெர்ட் பண்டுரா என இருவரும் சேர்ந்து உருவாக்கினர். அதில் முக்கியமானது, மொழி மேம்பாடு. மொழியைக் கற்பதில் சூழலுக்கு முக்கியமான பங்குண்டு. ஸ்கின்னர், குழந்தைகள் ஒருவர் பேசும் குரலை முதலில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பிறகு அதை போலசெய்தல் போல பேசுகின்றனர். பேசும் சொற்கள், வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்துகொள்ள முயல்கின்றனர். இதில், குழந்தைகளின் பெற்றோரின் அங்கீகாரம், பாராட்டுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பாராட்டு, அங்கீகாரம் வழியாகவே ஊக்கம் பெற்று புதிய வார்த்தைகளைக் கற்கத் தொடங்குகின்றனர். பண்டுரா, போலச் செய்தலை இன்னும் விரிவாக்கினார். குழந்தைகள், பெற்றோர் பேசுவதை திரும்பக்கூறுவதோடு, அவர்களின் தொனி, பேசும் வாக்கிய அமைப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்கிறார்கள் என்று விளக்கினார்.  மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, மேற்சொன்ன கருத்துகளை, கோட்பாடுகளை தீர்மானமாக மறுத்தார். ஒருவர் மொழியைக் கற்பது, உடலில் பிற உறுப்புகள் மெல்ல வளர்ந்து மேம்பாடு அடைவதைப் போலவே நடைபெறுகிறது. அது பரிணாமவளர்ச்சி சார்ந்தது. அதில் சூழல், பெற்றோர் பங்களிப...

பாரத் ஜிபிடியின் ஹனுமான் - இந்திய மொழிகளில் ஏஐ

படம்
  பாரத் ஜிபிடியின் ஹனுமான் - இந்திய மொழிகளில் ஏஐ ஐஐடி பாம்பே தலைமை தாங்கி வழிகாட்ட ஏழு இந்திய பொறியியல் கழகங்களின் உதவியுடன் பாரத் ஜிபிடி குழுமம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆதரவை வழங்கி வருகிறது. பாரத் ஜிபிடி குழுமம், ஹனுமான் எனும் செயற்கை நுண்ணறிவு மாடலை உருவாக்கி வருகிறது. இந்த பணிக்கு சீதாலட்சுமி ஹெல்த்கேர் நிறுவனம், உதவியையும், பங்களிப்பை வழங்கியுள்ளது.  ஹனுமான் ஹனுமான் என்பது செயற்கை நுண்ணறிவு மாடல். இதை எல்எல்எம் என குறிப்பிடுகிறார்கள். மொத்தம் பதினொரு மொழிகளில் இயங்கவிருக்கிறது. தமிழ், மராத்தி, இந்தி ஆகிய மொழிகள் இதில் அடங்கும். இருபது மொழிகளுக்கு செயல்பாடுகளை விரிவாக்கும் திட்டமும் உள்ளது. மருத்துவம், அரசு நிர்வாகம், கல்வி ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படவிருக்கிறது. இதுதொடர்பாக பாரத் ஜிபிடி குழுமம், வெளியிட்ட வீடியோவில் பல்வேறு மொழிகளில் மக்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது காட்டப்பட்டது.  இப்படி உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு வெறும் உரையாடுவதற்கான பாட் மட்டும் கிடையது. இதைப் பய...

தாய்நாடு திரும்பி அதனோடு பொருந்திக்கொள்ள முடியாமல் தவிப்பவர்களின் வாழ்க்கை!

படம்
    மாயமீட்சி மிலன் குந்தேரா காலச்சுவடு செக் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்று பிழைத்தவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்பி அங்கு வாழமுடியாமல் சூழலுக்கு பொருந்தமுடியாமல் தவிக்கிறார்கள். இதுபற்றிய அனுபவங்களை விவரிக்கிறது மாய மீட்சி நாவல். இரினா, செக் நாட்டைச் சேர்ந்தவள். அவளுக்கு மார்ட்டின் என்பவருடன் அம்மா ஏற்பாட்டின்படி திருமணமாகிறது. திருமணமோ, மணமகனோ இரினாவின் தேர்வல்ல. முழுக்க அம்மாவின் தேர்வு. பிறகு உள்நாட்டில் பொதுவுடமை கட்சி ஆட்சிக்கு வருகிறது. இதனால் இரினாவின் கணவர் மீது ரகசிய போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். அங்கு நிலைமை ஒன்றுதான். ஒன்று, பொதுவுடமை கட்சியில் உறுப்பினராக சொத்துகளை அரசின் வசம் ஒப்படைத்துவிட்டு இருக்குமிடம் தெரியாமல் வாழ்வது. அல்லது கட்சியை எதிர்த்து பேசி அரசை விமர்சித்து சிறைப்படுவது. மார்ட்டின் மூன்றாவதாக நாட்டை   விட்டு வெளியேற முயல்கிறார். அவருடன் இரினாவும் செல்கிறாள்.   பிரான்சில் சென்று வாழும்போது, இரினா அந்த நாட்டு வாழ்க்கைக்கு பழகுகிறாள். பிரெஞ்சு சரளமாக பேச பயில்கிறாள். ஆங்கிலம் அவளுக்கு கடினமாகவே இருக்கிறது. இதற்கிடையில் அவ...

தனது நட்சத்திரங்களை நமது வானத்திற்கும் இடமாற்றும் கவிதைகள் - யூமா வாசுகி கவிதைகள் - யூமா வாசுகி

படம்
  யூமா வாசுகி யூமா வாசுகி கவிதைகள் தன்னறம் வெளியீடு  விலை 300 யூமா வாசுகியின் கவிதைகள் ஆறு நூல்களிலிருந்து பெறப்பட்டு தொகுத்து தனி நூலாக்கப்பட்டிருக்கிறது. நூலின் அட்டைப்படம் வினோத் பாலுச்சாமியின் ஒளிப்படக்கலை மூலம் கண்ணைக் கவருகிறது. ஆலமரத்தின் கீழ் கவிஞர் யூமா வாசுகி நிற்கிறார்.   வேலைவாய்ப்பின்மை, இயலாமை , பசி, மரணம், நோய் பற்றியெல்லாம் எழுதும்போது கவிதைகளில் தனிக்கூர்மை தெரிகிறது. இதெல்லாம் கவிஞரை கடுமையாக பாதித்திருக்கிறதா என்று தெரியவில்லை. தனது மனதில் உள்ள வருத்தங்களை தமிழ்மொழியில் சாணை பிடித்து எழுதியிருக்கிறார். படிக்க படிக்க மனங்களில் ரத்தம் தெறிக்கிறது. வழிகிறது. இந்த நூல் தொகுப்பில் முக்கியமானது என நினைப்பது குழந்தைகள் பற்றிய கவிதைகள்தான். முயலை வீட்டில் வளர்ப்பதாக பொய் சொல்வது, பெண்களைப் பற்றிய ஆச்சரியத்துடன் இருந்து   மகளைப் பெற்றவுடன் கடவுளாக மாறுவது, குழந்தையை ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு மாற்றும்போதுகூட பயந்துவிடாதே   என்று ஆறுதல் கூறுவது, ஓவியங்களை தீட்டும் குழந்தைகளை மலர்க்கூட்டம் என வர்ணிப்பது, பேருந்தில் கையில் கிடைக்கும் கு...

நாய் எழுப்பும் ஒலிக்கு என்ன அர்த்தம்?

படம்
  நாய் எழுப்பும் குரைப்பொலி பற்றிய விளக்கங்கள் இதோ….. தொந்தரவு செய்யாதே வீட்டுக்கு முன் செல்பவர், காலிங்பெல்லை அழுத்துபவர், சைக்கிளில் செல்பவர் என யார் சென்றாலும் ஒலி, ஒளி தென்பட்டாலும் நாய் உடனே குரைக்கத் தொடங்கும். குரைக்கும் தொனி, எதிராளி வீட்டின் கதவுக்கு அண்மையில் இருக்கிறாரா, தூரத்தில் இருக்கிறாரா என்பதைப் பொறுத்து மாறுபடும். கதவை ஒருவர் தட்டி திறக்க முயல்கிறார் என்றால் நாயின் குரைப்பொலி கடுமையாக மாறும். உரிமையாளரை தீர்க்கமாக எச்சரிக்கும் ஒலி இதுவே. வேட்டை மன்னன் தபால்காரர் வீட்டுக்கு வருகிறார் அல்லது நாயின் சக நாயினங்கள் ஒன்றாக இணைந்து மகிழ்ந்து ஒலி எழுப்புகின்றன என்றால் நாய் , இவ்வகையிலான ஒலியை எழுப்புகிறது. குரைப்புக்கும்,, ஊளைக்கும் இடையில் அமைந்த ஒலி. முனகல் ஒலி அப்பப்பா என முனகிக்கொண்டே வயதானவர்கள் கீழே உட்காருகிறார்கள் அல்லவா? அதுபோலவே அமைந்த முனகல் ஒலி. வயதான நாய், ஏதாவது இடத்திற்கு சென்றுவிட்டு வந்து சோபாவில் ஏறி உட்காரும்போது இப்படி முனகும். நீங்கள் நாய் தள்ளிவிட்ட பந்தை எடுக்காமல் கணினியைப் பார்க்கும்போது அல்லது அதற்கு போதிய கவனம் கொடுக்காதபோது சற்று ...

நெருக்கடியான சூழலில் நமக்கு உதவும் காந்தி!

படம்
                      காந்தியை , இந்தியாவில் எப்போது நெருக்கடியான சூழல் வந்தாலும் நினைத்து பார்க்கிறோம் . அவர் எப்படி சூழலை , நிலையைக் கையாண்டிருப்பார் என சிலர் பேசுகிறார்கள் . இடையறாது , தேசிய நாளிதழ்களில் பத்தி எழுதப்படுகிறது . இதற்கு என்ன காரணம் ? நவீன இந்திய சிற்பிகளில் உள்ள பிற தலைவர்களை இப்படி யாரும் எதிர்பார்ப்பதில்லையே ? அதற்கு காரணம் , காந்திக்கு இந்தியா பற்றியும் , மக்கள் பற்றியும் அடிப்படையான உள்ளுணர்வுத்தன்மை இருந்தது . அதனால்தான் காந்தியின் எழுத்துகளைப் படிக்காதவர்கள் கூட அறியும்படி தனது உருவத்தை வடிவமைத்துக்கொண்டார் . தகவல்தொடர்பு வேகமாக இல்லாத காலத்தில் கூட காந்தி என்ற பெயர் அனைத்து இடங்களிலும் பரவியிருந்தது . 1915 ஆம் ஆண்டு காந்தி வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பினார் . அப்போதும் அவருக்கு பிரிட்டிஷார் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை . அதற்கான சக்தியும் அவருக்கு அப்போது உருவாகியிருக்கவில்லை . ஆனால் அதற்கான முயற்சியை அரசியலமைப்பு மூலம் செய்யவேண்டுமென்ற தெளிவு...

குமுதத்தை விற்பனை சிகரத்தில் ஏற்றிய எடிட்டர் எஸ்ஏபி! கடிதங்கள்- கதிரவன்

படம்
            மொழி எனும் தீராந்தி அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நேற்று அநதிமழை இதழ் படித்தேன் . அதில் உடல் எடை பற்றிய கட்டுரைகளை வெளியிட்டிருந்தனர் . உடல் பருமன் என்பதை நாம் எப்படி பார்க்கவேண்டும் , பிறர் அதை எப்படி பார்க்கிறார்கள் என எழுதியிருந்தனர் . இதழை முழுமையாகப் பார்க்கும்போது சுமார்தான் . கழுதை மருத்துவர் ஒருவரின் பணி சார்ந்த அனுபவங்கள் வாசிக்க நன்றாக இருந்தது . நேற்று தீராநதி இதழைப் படிக்க நினைத்தேன் . அருகிலிருந்த கடைகள் எங்கிலும் இதழ் தீர்ந்துவிட்டது அல்லது இல்லை என்றே சொன்னார்கள் . பிறகு அலுவலக சகாவிடம் சொல்லி வாங்கினேன் . லாக்டௌனில் நின்றுபோன பத்திரிகை இப்போது மீண்டும் வருகிறது . இந்தியாவில் நிலவும் மொழிப்பிரச்னை பற்றி காந்தி பேசிய உரைகளைக் கொண்ட நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன் . இந்து , முஸ்லீம் ஒற்றுமைக்காக தேவநாகரி லிபியில் இந்தி படிக்க வலியுறுத்துகிறார் காந்தி . 30 பக்கங்களை படித்திருக்கிறேன் . வெயில் தாக்கம் இன்று சற்று குறைந்து காணப்படுகிறது . உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள் . நன்றி ! அன்பரசு 8.6.202...