"மாற்றம் சாத்தியம்தான்" - பிரீத்தி ஹெர்மன் சாதித்தது எப்படி?
மக்களோடு உழைத்தால் மாற்றம் சாத்தியம்தான் ! - ச . அன்பரசு தன் பதினெட்டு வயது வரை கம்ப்யூட்டரைத் தொடாத , லைப்ரரி வாசல் மிதிக்காத பெண் இன்று உலகளாவிய தொண்டு நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா ? அதுவும் அப்பெண் தமிழ்நாட்டின் கூடலூரைச் சேர்ந்தவர் என்பது சூப்பர் ஸ்பெஷல் . ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சேஞ்ச் . ஆர்க் தன்னார்வ அமைப்பில் இணைந்த பிரீத்தி ஹெர்மனின் கடின உழைப்பு இன்று அமைப்பின் நிர்வாக இயக்குநராக அவரை உயர்த்தியுள்ளது . " சமூகத்தில் மக்களின் வாழ்வுக்கு தடையாக இருந்த பிரச்னைகளைத் தீர்க்க முயன்றபோது , சில பிரச்னைகளுக்கு மட்டுமே வழி கிடைத்தது . மக்களின் கரங்களை ஒன்றாக கோர்த்துத்தான் தினசரி வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வுகளை காணமுடியும் என்ற முடிவுக்கு வந்தபோதுதான் , எனது நண்பர்கள் சேஞ்ச் . ஆர்க் அமைப்பை பரிந்துரைத்தனர் " என்கிறார் 34 வயதாகும் சமூகப்போராளியான பிரீத்தி ஹெர்மன் . தன் பதினொரு வயதில் இவர் பார்த்த திரைப்படத்தில் வல்லுறுவுக்குள்ளான பெண் தன் குடும்ப கௌரவத்திற்காக தற்கொலை செய்துகொள்வதை பார்த்து பயந்து போனார்