இடுகைகள்

காலச்சுவடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மெய்ஞானத்தை தேடும் சீடனுக்கு குரு வைக்கும் பல்வேறு சோதனைகள்- மந்திரவாதியின் சீடன் - இவால்ட் ஃப்ளிஸர்

படம்
  மந்திரவாதியின் சீடன் இவால்ட் ஃப்ளிசர் தமிழில் அசதா காலச்சுவடு பதிப்பகம்   வெளிநாட்டுக்காரரான இவால்ட் இந்தியாவிற்கு ஞானம் தேடிப்பெற வருகிறார். அவருக்கு குருவாக வரும் யோகானந்தர் அவரை எப்படி சோதித்தார், தனது சீடனாக ஏற்றாரா, ஞானம் பெற உதவினாரா என்பதே கதையின் மையம். அசதா,ஆங்கில நூலை தமிழில் மிகச்சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். அதில் எந்த பழுதுமில்லை. ஆனால், இந்த நூல் மனிதர்கள் தேடும் ஞானத்தை, மெய்ப்பொருளை பற்றியது என்பதால் திரும்ப திரும்ப வாக்கியங்களை, இவால்டின் மனவோட்டங்களை படித்தால் மட்டுமே புரியும். இவால்டின் பயணமாகவே மட்டுமே குறுக்கி பார்க்க முடியாதபடி நூல் உருவாக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் நூலை படிக்க சற்று கடினமானது போல தோன்றும். ஆனால், சற்று வாசித்து ஐம்பது பக்கங்களை கடந்துவிட்டால்   பிரச்னை ஏதுமில்லை. நூலை வாசித்தவர்கள் உறுதியாக தாந்த்ரீகத்தைப் பற்றி தேடிப்போவார்கள். உறுதியாக அதற்கான அனைத்து விஷயங்களையும் ஆசிரியர் நூலில் விதைத்திருக்கிறார். மடாலயங்களின் உள்கட்டுமானது, சடங்குகளை முடிந்தளவு விளக்க முயன்றிருக்கிறார். இறுதியாக இவால்ட் தனக்கு கிடைத்த இரண்டு நிமிட உள்ளொ

கலாசாரத்தை இழந்த குற்றவுணர்ச்சி! - தந்தைக்கோர் இடம் - அன்னி எர்னோ - எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி- நாவல்

படம்
    தந்தைக்கோர் இடம் அன்னி எர்னோ பிரெஞ்சிலிருந்து தமிழில் – எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி காலச்சுவடு பதிப்பகம் மூல நூல் – லா பிளேஸ்   2022ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அன்னி எர்னோவின் நூல். பிரான்சில் வாழும் அன்னி, தனது பெற்றோர்,தனது வாழ்க்கை பற்றி எழுதியுள்ள   சுயசரிதைக் கதைதான் தந்தைக்கோர் இடம். நாவல் 74 பக்கங்களைக் கொண்டது. எனவே, வேகமாக வாசிப்பவர்கள் வாசிக்கலாம். ஆனால் முடிந்தவரை நிதானமாக வாசிப்பதே நல்லது. இதன் மூலம் கதையில் வரும் நாயகியின் அப்பா பற்றி முழுமையாக புரிந்துகொள்ள முடியும். பிரான்சிலுள்ள ஒய் எனும் ஊரில் வாழ்பவர், நாயகியின் அப்பா. இவர் தொழிற்சாலைத் தொழிலாளியாக இருந்தவர். அதிக படிப்பறிவு இல்லாதவர். அதனால், ஏற்பட்ட தாழ்வுணர்ச்சி அவருக்கு இறக்கும் நாள்வரை மனதில் உள்ளது. அதன் விளைவாக அவர் என்னென்ன விஷயங்களைச் செய்கிறார். தனது கல்வி கற்ற மகளிடம் எப்படி நடந்துகொள்கிறார், அவரது நண்பர்களை எப்படி வரவேற்கிறார் என்பதைக் கதையில் விவரித்து கூறியிருக்கிறார் எழுத்தாளர் அன்னி எர்னோ. நாவலின் தொடக்கமே, ஆசிரியர் வேலை கிடைத்த மகள், இரண்டு நாட்களுக்குப் பிறகு   இறந்துப

முருகேசன்களின் வாழ்வில் நிறைந்துள்ள பல்வேறு உணர்ச்சிப்போராட்டங்கள் - மாயம் - பெருமாள் முருகன்

படம்
  பெருமாள் முருகன் மாயம் பெருமாள் முருகன் மாயம் - பெருமாள் முருகன் சிறுகதைகள்  காலச்சுவடு நூலின் தலைப்பை முருகேசனின் கதைகள் என்றே கூட சொல்லிவிடலாம். தவறில்லை. அனைத்து கதைகளிலும் நாயகன், கதை நாயகன் முருகேசுதான். பெரும்பான்மையான கதைகள் திருமணமாகும் முயற்சி, திருமணம், திருமணமான பிறகு வாழ்க்கை என திருமணத்தை மையமாக கொண்டுள்ளது.   மொத்தம் இருபது கதைகள், மாயம் என்ற நூல்தொகுப்பில் உள்ளன. பரிகாரம் என்பது, மாயவாத கதை என்றால் இதுமட்டுமே. மற்ற கதைகள் அனைத்துமே எளிமையான வாசகங்களால் அமைந்த கதைகள். அதன் முடிவு கூட பெரியளவு அதிர்ச்சி, மகிழ்ச்சி என முடிவதில்லை. சீரான தன்மையில் உணர்ச்சிகளையும் மெல்ல பரப்பி காவிரி நீர் போல சலசலத்து செல்கிறது. பரிகாரம் கதை, ஜோதிடத்தால் மனதுக்குள் ஏற்பட்ட பதற்றம், பீதி எப்படி ஒருவனை பித்தாக்குகிறது என்பதை கூறுகிறது. இந்தக் கதை அதன் வார்த்தைகள், கதையின் போக்கு என்ற வகையில் ஈர்ப்பானதாக உள்ளது. காதல், காமம், குற்றவுணர்ச்சி, பொறாமை, இரக்கம், விரக்தி ஆகிய உணர்வுகளை இக்கதைகளில் ஆசிரியர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். பெரும்பாலான பாத்திரங்கள் மேற்சொன்ன உணர்ச்சிகளை கதைகளில் வெள

பரவசமான வாசிப்பு இன்பத்தை தரும் ஸோரன்டினா எழுதிய சிறுகதை தொகுப்பு - ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை -எம்.எஸ்.

படம்
  ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை - ஃபெர்னான்டோ ஸோரன்டினோ ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை அர்ஜென்டினா எழுத்தாளர் ஸோரன்டினா தமிழில் எம்எஸ் காலச்சுவடு பதிப்பகம் நூலின் பக்கங்களே 77 தான். எளிமையான கதைகள். அனைத்துமே வாசிக்கும்போது புன்னகை வர வைப்பவைதான். சில நன்றாக சிரிக்க வைக்கின்றன. காலச்சுவடின் எம்.எஸ் அனைத்து கதைகளையும் எளிமையாக மொழிபெயர்த்திருக்கிறார். சரளம் என்பதைத் தாண்டி அர்ஜென்டினா எழுத்தாளரின் பகடியையும் நம்மால் அனுபவித்து ரசித்து படிக்க முடிகிறது. 2003இல் வெளியான காலச்சுவடின் முதல் அயல் இலக்கிய நூல் இதுதான். வெறும் சூசகம், ஹார்ன் இசைப்பவர், வருகை ஆகிய கதைகள் ரசித்து படிக்கும்படியானவை. இப்படி கூறுவதால் இவை மட்டுமே சிறப்பானவை என்று கருதிவிடவேண்டாம். எழுத்தாளரின் விசேஷமான பகடி இக்கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டு இருக்கிறது. வெறும் சூசகம் என்பது சிறிய கதைதான். ஆனால் அதை பயன்படுத்தி ஒரு மனிதர் தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ளும் குணத்தை ஸோரன்டினோ எளிமையாக அதேசமயம் தீர்க்கமாக வெளிப்படுத்தியுள்ளார். அற்பத்தனமாக நடந்துகொண்டு வீட்டு உரிமையாளரை தனது சமையலறையில் நீர் எடுத்து

மனிதர்களின் மனதில் உள்ள அக ஒளியை வெளிக்காட்டும் கதையுலகம் - சித்தன்போக்கு - பிரபஞ்சன்- காலச்சுவடு

படம்
  எழுத்தாளர் பிரபஞ்சன் சித்தன் போக்கு - பிரபஞ்சன்  தொகுப்பு - பெருமாள் முருகன்  காலச்சுவடு பதிப்பகம்  மின்னூல்  எழுத்தாளர் பிரபஞ்சன் மொத்தம் இருபது கதைகள். அத்தனையும் மனிதர்களின் மனிதநேய பக்கங்களைக் காட்டுபவைதான். இதில் பாதுகை, பாண்டிச்சேரி போர்ச்சுகீசியர்களின் நிறவெறியைக் காட்டும் கதை. பெரும்பாலும் இந்த கதையை மாணவர்கள் துணைப்பாட நூலில் படித்திருக்கவே வாய்ப்பு அதிகம்.  பெருமாள் முருகன் தொகுத்துள்ள கதைகள் அனைத்துமே திரும்ப திரும்ப படிக்கலாம் என்ற ஆர்வத்தைத் தூண்டுபவைதான். அனைத்து கதைகளுமே அப்படியான பல்வேறு மனிதநேய அம்சங்களைக் கொண்டுள்ளன. மனிதர்களின் கோபம், கீழ்மையான எண்ணங்களைத் தாண்டிய பிறர் மீதான அக்கறை வெளிப்படும் கதைகள்தான் பிரபஞ்சனின் இத்தொகுப்பின் முக்கியமான தன்மை என்று கூறலாம்.  ஒரு மனுஷி,  குமாரசாமியின் பகல்பொழுது, குருதட்சிணை, தியாகி, ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், ருசி, தபால்காரர் பொண்டாட்டி ஆகிய கதைகள் பிடித்தமானவையாக இருந்தன. இவற்றை திரும்ப திரும்ப படிக்கலாம். அந்தளவு நிறைவான வாசக அனுபவத்தைக் கொடுத்தன. இத்தொகுப்பை வாசிப்பவர்களுக்கு வேறு கதைகள் இப்படியொரு உணர்வைக் கொடுக்கலாம். அத

உறவுச்சிக்கல்களை, ஆழ்மனதை, வினோதமான மனிதர்களை அறிமுகப்படுத்தும் கதைகள் - கச்சேரி - தி.ஜானகிராமன்

படம்
  கச்சேரி - இதுவரை தொகுக்கப்படாத சிறுகதைகள் தி.ஜானகிராமன் காலச்சுவடு பதிப்பகம் இந்த நூலில் மொத்தம் 26 கதைகள் உள்ளன.  இவை அனைத்துமே வாசிப்பை ஊக்குவிக்க கூடியவை. ரசித்தபடியே வாசிக்கலாம். அதில் எந்த பாதகமுமில்லை. இதில் வரும் ஸீடிஎன் =ரபெ 5 ஆர் , கச்சேரி என்ற இரு கதைகளையும் முன்னமே வாசித்திருக்கிறேன்.  ஸிடிஎன் என்பது முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல என்று பேசுபவர்களுக்கானது. இந்த கதை இன்று பசுமாட்டை வைத்து அரசியல் செய்யும் அனைவரையும் கடுமையாக பகடி செய்கிறது. இதில் வரும் கோஸ்வாமி, பசு சாணத்தில் ரயில் வண்டி தயாரிக்க முனைகிறார். எரிபொருளே இல்லாமல் தன்னைத்தானே ஓட்டிக்கொள்ளும் திறன் பெற்றது. இதைப்பற்றி நிருபர் ஒருவருக்கு பேட்டி கொடுப்பது போல அமைந்த கதை, வாசிப்பவர் யாரையும் சிரிக்க வைத்துவிடும்.  கச்சேரி சிறுகதை சிறுவன் ரங்குவுக்கும் கச்சேரி செய்யும் வித்வான் ஒருவருக்குமான அந்நியோன்ய உறவு பற்றியது. எவ்வளவு பெரிய கலைஞர் என்றாலுமே அன்புக்கும் அங்கீகாரத்திற்கும் ஏங்குபவர்கள்தானே? அப்படி வித்வானுக்கு கிடைப்பவன்தான் ரங்கு. நட்பு, அதில் பூக்கும் அன்பை பேசுகிற கதை.  நிலவு - கருமேகம் என்ற கதையை ம

எங்கெங்கோ செல்லும் பயணத்தின் கதை! கடிதங்கள்

படம்
            இனிய தோழர் முருகு அவர்களுக்கு , வணக்கம் . வணக்கம் . இதோ இங்கு இன்னும் வெறித்தனமாக பட்டாசு வெடித்துக்கொண்டே இருக்கிறார்கள் . காற்று மண்டலம் கற்கண்டாக மாறுகிறது என ரேடியோவில் சொல்லுவார்கள் . இங்கு கந்தக மண்டலமாக மாறிவிட்டது . புகை மூட்டத்தில் மூச்சுத் திணறத் தொடங்கிவிட்டது . தினகரன் , விகடன் , இந்து தவிர்த்த தீபாவளி மலர்களில் ஆன்மிகம் தூக்கலாக இருக்கிறது என தினமலர் நாளிதழ் கூறியிருக்கிறது . இந்த ஆண்டு தினகரன் தீபாவளி மலரில் வேலை செய்துள்ளது மகி்ழ்ச்சியாக உள்ளது . வாய்ப்பு கிடைத்தால் நூலை வாங்கிப் பாருங்கள் . குங்குமத்திலிருந்து சென்றுவிட்ட வெ . நீலகண்டன் , கோகுலவாச நவநீதன் ஆகியோரின் இடத்தை முழுமையாக நிரப்ப முடியவில்லை என்பது உண்மை . தீபாவளி மலர் வேலைகளை முடித்தவுடனே அடுத்து பொங்கல் மலருக்கான வேலைகள் இருக்கின்றன . நீங்கள் ஏதாவது புதிதாக படித்தீர்களா ? நான் மாதம்தோறும் காலச்சுவடு , தீராநதி இதழ்களை படித்துவிடுகிறேன் . இனி புதிய நூல்களை விட பழைய புத்தக கடைகளில் நூல்களை வாங்கலாம் என நினைத்துள்ளேன் . பயணம் ஒன்று போதாது - தீபன் எழுதிய நூல்தான் அண்மையில் ப

தவிர்க்கமுடியாத திருடனின் கதை! - திருடன் மணியன் பிள்ளை

படம்
திருடன் மணியன்பிள்ளை ஜி.ஆர். இந்துகோபன் தமிழில்: குளச்சல் மு.யூசுப் காலச்சுவடு நடிகர், பாடலாசிரியர், கல்வித்தந்தை, எழுத்தாளர், அரசியல்வாதி என பலரும் சுயசரிதை எழுதியிருக்கிறார்கள். அதில் பலவற்றை நாமும் படித்திருப்போம். ஆனால் இந்த காலகட்டத்தில்தான் பாலியல் தொழிலாளி, திருடன் ஆகியோரின் சுயசரிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கேரளத்தைச் சேர்ந்த மணியன்பிள்ளை நாயர் குடும்பத்தில் பிறந்த திருடர். அவரின் திருட்டு, அவர் சந்தித்த மனிதர்கள், அவரைக் காதலித்த பெண்கள், போலீஸ்காரர்கள், சிறை அனுபவம், தொழிலதிபராக மாறியது, மறுவாழ்வு காலகட்டம் என நினைத்துப் பார்க்க முடியாத பல்வேறு உணர்ச்சிகளை வாசிப்பவரின் மனதில் எழச்செய்யும் படைப்பு. எழுத்தாளரின் திறன், மணியன் பிள்ளையின் வாழ்க்கையை அழுந்தச்சொல்ல உதவியிருக்கிறது. மணியன் பிள்ளையின் தந்தை மதுவருந்தி குடிநோயால் இறந்துவிட பசியால் துடிப்பவருக்கு அவரின் நாயர் ஜாதியே எமனாகும் அவலம் கண்களில் நீர்கட்டவைக்கிறது. அவரின் தந்தைக்கு சேரும்படியான சொத்தை சதி செய்து அபகரிக்க குடும்பமே அந்த இடத்தில் வாழ முடியாமல் வேறிடம் நோக்கி போகும் காட்சி