இடுகைகள்

எல்கர் பரிஷத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறையில் கொல்லப்பட்ட ஸ்டேன்சாமி!

படம்
ஸ்டேன்சாமி, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டு மத்திய அரசின் அமைப்புகளால் கைது செய்யப்பட்டார். மும்பையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் தனது 84 வயதில் காலமாகியுள்ளார். பல்வேறு நோய்களால் வதைபட்டு தவித்தவருக்கு தேவையான உதவிகளை அரசு அளிக்காமல் அலைகழித்த விவகாரங்கள் இப்போது வெளியாகத் தொடங்கியுள்ளன.  பாதிரியாரான ஸ்டேன் சாமி, பழங்குடி மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வந்தவர். நோய்களால் அவதிப்பட்டு வந்தவரை விசாரணை என அலைகழித்து சிறையில் தள்ளி தேவையான வசதிகளைக் கூட செய்து தராமல் மத்திய அரசு படுகொலை செய்துள்ளது. மனித உரிமைகளுக்காக போராடியவர், சிறையில் இறந்துபோனது பல நூற்றாண்டுகளுக்கு இந்தியாவின்  கௌரவத்திற்கும் மதிப்புகளுக்கும் பாதகமான செய்தியாகவே வரலாற்றில் இடம்பெறும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புலனாய்வு முகமை, மும்பை உயர்நீதிமன்றம் என அரசு அமைப்புகள் தனி மனிதருக்கு எதிராக அநீதி இழைத்துள்ளதாகவே அனைத்து ஊடகங்களும் இப்போது கூறிவருகின்றன.  தீவிரவாத தடுப்புச்சட்டம் என்ற பெயரில் ஸ்டேன்சாமி எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு இற