'ம்' ஷோபா சக்தி: நூல்வெளி2
நூல்வெளி -2 ப்ராட்லி ஜேம்ஸ் ம் ஷோபா சக்தி இந்த நூலின் வேறுபாடு என்னவென்றால் நூல் அட்டையிலேயே அது அச்சான இடம், வடிவமைத்தவர் ஆகிய விவரங்களை அச்சிட்டு களேபர கவனத்தை ஈர்க்க முயற்சித்திருக்கிறார்கள். இந்த நாவல் இலங்கையில் பாதிரியாருக்கு படிக்கும் ஏர்னஸ்ட் நேசகுமாரன் என்பவரின் இயக்கம், அதில் ஈடுபட்டதால் சிதைவடையும் அவரது மொத்த வாழ்வு என உண்மைச்சம்பவங்களோடு இணைந்து பயணப்படுகிறது கதை இது. தொடக்கம் ஒரு அதிர்ச்சியான விஷயத்தோடு தொடங்குகிறது. பிறேமினியின் மகள் நிறமி அரசு மருத்துவமனையில் தன் கர்ப்பத்தை கலைக்க அமர்ந்திருக்கிறாள். அது யாரால் உண்டானது என்பதை அவள் தெரிவிக்க மறுக்கிறாள். அது யாரால் உண்டானது என பலரும் யோசிக்க, அவளது தந்தை ஏர்னஸ்ட் நேசகுமாரனும் யோசிக்கிறார் என்று அதன்வழியே அவரது வாழ்க்கை நம்முன் விரிகிறது. இதில் நிறமி பிறப்பது