இடுகைகள்

நிலவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வட்டவடிவ பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி எதற்காக?

படம்
  பழமொழிகளை நாம் நிறைய இடங்களில் பயன்படுத்துவோம். நிறைய நம்பிக்கைகளை முன்னோர்கள் கூறினார்கள் என அப்படியே பின்பற்றுவோம். அதை ஏன் என கேள்வி கேட்டால்தானே அதன் பின்னணி தெரியும். அப்படி சில விஷயங்களை தேடிப்பார்த்த அனுபவம் இது.  தினசரி 10 ஆயிரம் அடிகள் நடந்தால் உடலுக்கு நல்லது இப்படி கூறுவதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. பொதுவாக வாக்கிங் சென்றால் நல்லது என்ற நிலைக்கு நீரிழிவு நோய் வந்தவர்கள் வந்துவிட்டார்கள். எனவே பத்தாயிரம் அடி என்பது கூட இப்போது போதுமா என்று தெரியாத நிலை. ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வந்த காலம். 1960ஆம் ஆண்டு, மான்போ கெய் என்ற கருவி விற்பனைக்கு வந்தது. இதை பத்தாயிரம் அடி மீட்டர் என்று அழைத்தனர். இக்கருவியை தயாரித்த யமாசா என்ற நிறுவனம் பத்தாயிரம் என்ற எண்ணைக் குறிக்கும் ஜப்பானிய எழுத்தைக் கவனித்தது. அது ஒரு மனிதர் நடப்பது போலவே இருந்ததால்,அதேயே விற்பனைப் பொருளுக்கு பயன்படுத்தியது.  உடல் ஒரே இடத்தில் இருந்தால் அது கெடுதலை உருவாக்கும், எனவே சிறிது நடங்கள், உட்காருங்கள். உடலை பல்வேறு வடிவங்களில் நிலைகளில் மாற்றி உட்கார்ந்து பாருங்கள். இதெல்லாமே உடலுக்கு ப

நிலவுக்குச் சென்று எஸ்பெல் இனக்குழுவைக் காப்பாற்றும் டோராமன் - நோபிடா டீம் - டோராமன் -மூன் எக்ஸ்ப்ளோரேஷன்

படம்
  டோராமன் – நோபிட் குரோனிக்கல் – மூன் எக்ஸ்ப்ளோரேஷன் ஜப்பான் மாங்காஅனிமேஷன் நோபிட் பள்ளி மாணவன். ஒருநாள் நிலவில் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட ரோவர் ஏதோ ஒரு சக்தியால் தாக்கப்பட்டு பழுதாகிறது.. அதைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறான் நோபிட். அதற்கு டோராமன் ரோபோ உதவுகிறது. நோபிட்டும் டோராமன்னும் சேர்ந்து நிலவுக்கு மந்திரக்கதவு மூலம் போகிறார்கள். அங்கு சென்று, களிமண்ணால் முயல்களை உருவாக்கி முயல்களுக்கான உலகத்தை உருவாக்குகிறார்கள். இந்த நேரத்தில் நோபிட்டின் பள்ளியில் லூகா என்ற சிறுவன் சேர்கிறான். எப்போதும் தொப்பி அணிந்தபடியே இருப்பவன் வினோதமான தெரிகிறான். அவன் நோபிட்டின் நிலவு பற்றிய கருத்துகளைக் கேட்டு ஆச்சரியப்படுகிறான். அவன் நிலவு பற்றி செய்யும் ஆராய்ச்சிகளை அறிய நினைக்கிறான். அப்படித்தான் பள்ளி நண்பர்கள் பலரும் சேர்ந்து நோபிட்டின் வீட்டிலுள்ள மந்திரக்கதவு மூலம் நிலவுக்கு செல்கிறார்கள். அங்கு வாழ்பவர்களுக்கும் லூகாவிற்கும் தொடர்பு உள்ளது. இதுபற்றிய கதையை பார்த்து தெ(பு)ரிந்துகொள்ளுங்கள்.   இந்த தமிழ் படத்திற்கு டப்பிங் பேசியவர்கள் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்கள் க

நிலவில் மனிதர்கள் கால் வைத்த வரலாற்று நாள்! - 53ஆவது ஆண்டு

படம்
  ஜூலை 20, 1969 நிலவில் அமெரிக்கர்கள் கால் வைக்கவே இல்லை என நிறைய கான்ஸ்பைரசி தியரிகள் உண்டு. நாம் அதன் வழி சென்றால் இந்த கட்டுரையை எழுத முடியாமல் போய்விடும். எனவே நாம் இடது பக்கம் இண்டிகேட்டர் போட்டு அதேபக்கம் திரும்புவோம்.  நாசாவின் அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவில் அமெரிக்க வீரர்கள் கால் வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது ஜூலை மாதம் 20ஆம் தேதிதான். நீளமான வாக்கியம் அல்லவா? சாதனை அந்தளவு பெரியதுதான். நிலவில் ஆராய்ச்சி செய்து மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுபோய்.. பாருங்கள் இதை எழுதும்போது நமக்கே இதெல்லாம் சாத்தியமா என்று தோன்றுகிறது. எப்போதும் குறைந்த தவறுகளை செய்து நிறைவாக டீல் பேசி முடிக்கும் அமெரிக்கர்கள் என சும்பைப் பயல்களா என்ன? சோவியத் ரஷ்யாவிற்கு முன்னர் நாம் தான் நிலவில் கால் வைத்து அவர்களை முந்த வேண்டும். கேவலப்படுத்தி சிரிக்கவேண்டும் என்பதுதான் நிஜ பிளான்.  நிலவுக்கு செல்லும் பயணக்குழுவின் தலைவர் வேறுயார் நீல் ஆம்ஸ்ட்ராங் தான். அவர் தலைமையில் தான் குழு ஒன்றாக இணைந்தது. இவருக்கு உதவி செய்த மற்றொரு வீரர் எட்வின் ஆல்ட்ரின். அப்போலோ லூனார் மாடுலின் பெயர் ஈகிள். இதன் வழியாக நீல்

வேற்றுகிரகத்திற்கு செல்ல விண்வெளி வீரர்கள் பயிற்சி செய்வது இங்குதான்! - ஐஸ்லாந்து

படம்
  நிலவைப் போன்ற நிலப்பரப்பு கொண்ட நாடு! முழுமையாகவே அப்படி ஒரு நிலப்பரப்பு உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் நிலவு, செவ்வாய் ஆகிய கோள்களில் உள்ள சிக்கலான நிலப்பரப்புகளை ஒத்த நிலப்பரப்பு பூமியில் உண்டு. ஆம், ஐஸ்லாந்து நாட்டில் தான் இப்படிப்பட்ட வினோத நிலப்பரப்பு உள்ளது.  1960ஆம் ஆண்டு அமெரிக்காவில் விண்வெளி அமைப்பான நாசா, அப்போலோ திட்டத்தில் முனைப்பாக இருந்தது. அப்போது விண்வெளி வீரர்களுக்கு, நிலவைப்போன்ற நிலப்பரப்புள்ள தீவு நாடுகளை தேடிக்கொண்டிருந்தது. அப்படித்தான் ஐஸ்லாந்து நாட்டை நாசா விஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்தனர்.  ஐஸ்லாந்தில் வடக்கு கடற்புரத்தில் ஹூசாவிக் (Husavik) எனும் இடம் உள்ளது. இங்கு மீன்பிடிக்கும் மக்கள் 2,300 பேர் வாழ்கின்றனர். நாசா அமைப்பு, 1969ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீர ர்களை அனுப்புவதற்கு முன்னர், வீரர்களுக்கு  சிறப்பாக பயிற்சியளிக்க முடிவெடுத்தது. இதற்காக 32 விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்தனர். இப்படி தேர்வானவர்களில் நிலவில் கால்வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும் உண்டு.  2019ஆம் ஆண்டுதான், மனிதர்கள் நிலவில் கால்வைத்து ஐம்பது ஆண்டுகள் ஆனதை விண்வெளி அறிவி

நிலவில் சுரங்கம்!

படம்
  நிலவில் சுரங்கம் நிலவில் கால்வைத்து சாதனை செய்து இன்று சூரியன் வரை ஆராய சென்றுவிட்டனர். இப்போது மீண்டும் நிலவு மீதான ஆராய்ச்சி மோகம் ஆராய்ச்சியாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. நிலவில் நமக்குத் தேவையான என்ன விஷயங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என பார்ப்போம்.  சிலிகான் நாம் பயன்படுத்தும் போன் திரை முதற்கொண்டு பயன்படும் முக்கியமான வேதிப்பொருள். நிலவில் கிடைக்கும் தூசி துப்புகளை தட்டியெடுத்து சுத்திகரித்தால் சிலிகான் பிரச்னை தீர்ந்துவிடும். இதனைப் பயன்படுத்தி சோலார் பேனல்களை தயாரித்து ஆற்றலைப் பெருக்கலாம்.  அரிய உலோகங்கள் பூமியில் நாம் சுரங்கங்கள் மூலம் சிரமப்பட்டு பெறுவது 17 அரிய உலோகங்கள். இவைதான் போன் முதல் பேட்டரி வரை நாம் பயன்படுத்த உதவுகின்றன. பாஸ்பரஸ் முதல் பொட்டாசியம் வரை நிலவில் கிடைப்பது உறுதியானால், அங்கேயே சென்று தங்குவது சுலபம். பிளாட்டினம் வகையறா உலோகங்கள் கிடைத்தால் ஃபேஸ்மேக்கர் கருவிகளை செய்வது எளிதாகிவிடும்.  நீர் பூமியில் குறைந்து வரும் நீர், நிலவின் துருவப்பகுதிகளில் உள்ளது. 2.9 பில்லியன் மெட்ரிக் டன்கள் நீர், கிடைத்தால் குடிநீராகவும், விவசாயம் செய்யவும் பயன்படுத்தலாம். இதிலிர

நிலங்களில் சுரங்கம் அமைக்க முடியுமா?

படம்
மிஸ்டர் ரோனி பிபிசி  பூமியில் பல்வேறு கனிமங்களை சுரங்கம் அமைத்து தோண்டி விட்டோம். இனி மாசுபாடுகளின் பிரச்னைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் தெருக்களில் நடந்து வருகின்றன. இதனால் வேறு கோளைத் தேடிச்சென்று சுரங்கம் அமைத்து கனிமங்களை பெற ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். அது இரவில் நம்மை குளிர்விக்கும் நிலா என்றால் ஆச்சரியப்படுவீர்கள். நிலவின் தென் முனையில் மனிதர்கள் வாழ்வதற்கான நீராதாரம் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கிறது. மனிதர்கள் இங்கு வாழ நினைத்தால் இப்பகுதியில் காலனிகளை அமைக்கலாம். இங்கு கிடைக்கும் உலோக கனிமங்களும் நம்மை கவர்ந்து ஈர்க்கின்றன. சிலிகான், அலுமினியம், நியோடைமினியம், லாந்தனம், டைட்டானியம் ஆகியவை நிலவில் அதிகளவு உள்ளன. மேலும் தரைப்பரப்பில் ஹீலியம் 3 எனும் ஐசோடோப்பு கிடைக்கிறது. இதனை அணுஉலையில் பயன்படுத்த முடியும். இதனால் பல்வேறு அணுஉலை நிறுவனங்கள் நிலவை தோண்ட ஆர்வமாக முன்வந்துள்ளன. பிபிசி  நிலவில் உள்ள கனிமங்களை பல்வேறு உலக நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் முயற்சிகளை செய்து வருகின்றனர். 1979ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. நிலவை உலக நாட

நிலவுக்குச் செல்லும் தீவிரம் ஏன்?

படம்
சந்திரயான் சிறப்பிதழ்! நிலவுக்குச்செல்ல ஏன் இந்த அவசரம்? அமெரிக்கா அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு சென்று வந்த வரலாற்று நிகழ்ச்சி நடந்து அரைநூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் இன்றும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்குச் செல்ல பேரார்வத்துடன் செயற்பட்டு வருகின்றன. இதற்கு என்ன காரணம்? பூமியைப் போல மற்றொரு மனிதர்கள் வாழும் சூழல் கொண்ட கோளைக் கண்டுபிடிப்பதுதான். இந்தியா நிலவை ஆராய முடிவெடுத்து சந்திரயான் -1 விண்கலனை விண்ணில் செலுத்தியபோது பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின. ஆனால், நிலவின் பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததும்தான் விமர்சகர்கள் அமைதியானார்கள்.  சந்திரயான் 1 இல் வட்டப்பாதையைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் மட்டுமே உண்டு. அமெரிக்கா, ரஷ்யா ஆகியோர் செலவழித்த தொகையில் பாதிக்கும் குறைவாக 386 கோடி ரூபாயை மட்டுமே இந்தியா கொண்டு புதிய கண்டுபிடிப்பை சாதித்தது. சந்திரயான் 2 இல் ஆர்பிட்டர், ரோவர், லேண்டர் ஆகிய சாதனங்களும் இடம்பெற்றுள்ளன. சோவியத் ரஷ்யா 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று லூனா 2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதுவே நிலவுக்குச் சென்ற முதல்

சந்திரயான் ஸ்பெஷல்!- நோக்கம் என்ன?

படம்
சந்திரயான் 2 ஏவப்பட்டதன் நோக்கம்! இஸ்ரோ நிறுவனம், சந்திரயான் 1யை விண்ணுக்கு அனுப்பி நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது உலக நாடுகள் நிலவை ஆராய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன. காரணம், வெப்பமயமாதலால் பூமி பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. பூமியில் நீராதாரம் குறைந்து வருவதும், மக்கள் வாழ்வதற்கான இயற்கை வளங்கள் அரிதாகி வருவதும் முதன்மைக் காரணங்கள். இந்தியா, நிலவை ஆராய சந்திரயான் 2 வை அனுப்பி வைக்க 2018 ஆம் ஆண்டிலிருந்து  முயற்சித்து வருகிறது. ஆனால், தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக சந்திரயான் விண்ணுக்கு ஏவப்படுவது தள்ளி வைக்கப்பட்டு வந்தது. விண்ணில் ஏவப்பட்டு 52 நாட்களுக்குப் பிறகு நிலவின் தரைப்பரப்பில் சந்திரயான் 2 விண்கலம் இறங்கும். நாசா ஆய்வுக்கு அனுப்பிய விண்கலங்கள் ஈக்குவடார் பகுதியில் இறங்கின. சீனாவின் சாங் 4 விண்கலம் தெற்குத் துருவப் பகுதியில் இறங்கி நிலவின் மறுபுறத்தை சோதித்தது. இந்தியாவும் சீனாவின் வழியைப் பின்பற்றவிருக்கிறது. விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2, பதினாறு நாட்கள் பூமியின் வட்டப்பாதையை வலம் வரும்.

நிலவில் ராக்கெட்டுகளை தாக்கும் தூசு மண்டலம்!

படம்
நிலவுக்குச் செல்ல அனைவரும் இன்று தயாராக இருக்கின்றனர். மனிதர்களை அனுப்ப இந்தியா தயாராக இருக்கிறது. நிலவுக்கு மனிதரகள் என்ற கனவு இந்தியாவுக்கு 2022 இல் அது பாகுபலி ராக்கெட்டின் மூலம் நிறைவேறலாம். ஆனால் அதைவிட முக்கியமாக நிலவில் சுற்றிவரும் தூசு மண்டலம் ராக்கெட்டுகளில் கடுமையான கீறல்களை ஏற்படுத்தி வருகிறது. நிலவில் பல்வேறு குப்பைகள், தூசுகள் ஒன்று சேர்ந்த தோட்டாக்களின் வேகத்தில் சுற்றி வந்து கொண்டு இருக்கின்றன. இவை மேகம் போல உள்ளன. இதனை எப்படி சமாளிப்பது என்பதை நாம் கண்டுபிடிக்கும் அவசியம் உள்ளது என்கிறார் இயற்பியலாளர் பில் மெட்ஜர். அப்போலோ 11 விண்வெளி வீர ர்கள் நிலவில் இறங்கும்போது சிக்கல்களை சந்திப்பார்களா என்று ஆராய்ச்சியாளர்களுக்கு பயம் உள்ளுக்குள் இருக்கிறது. இதற்கு வேறெந்த வழியும் இல்லை. தூசுகள் குறைந்த இடத்தில் வலிமையான விண்கலங்களை தயாரித்து அனுப்பி இறங்குவதே ஒரே வழி. நன்றி: ஃப்யூச்சரிசம்

நிலவுச்சாதனை - 50 வது ஆண்டு!

படம்
நிலவில் மனிதர்கள் கால் வைத்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. நாசாவின் பெயர் சொல்லும் வரலாற்றுச் சாதனையில் பிற மனிதர்களின் வல்லுநர்களின் பங்களிப்பும் உள்ளது. உலக வானியல் யூனியன் 1955 ஆம் ஆண்டு கூடியது. வானியலாளர் ஜெரார்டு குய்ப்பர், நிலவுக்கு செல்வதற்கான வழிமுறைகளையும் வரைபடங்களையும் பலரிடமும் இச்சந்திப்பில் கோரினார். ஏனெனில் அப்போது ஓவியமாக வரைந்த படங்கள்தான் நம்மிடம் இருந்தது. இந்த கோரிக்கைக்குப் பிறகுதான் நிலவைக் காண்பதற்கான தொலைநோக்கிகள் தயாரிக்கப்படத் தொடங்கின. டக்சனிலுள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் ஆய்வகத்தை அமைத்த ஜெரார்டு, நிலவை தொலைநோக்கிகள் மூலம் படம்பிடிக்கத் தொடங்கினார். அப்போது தேர்தலில் வென்ற ஜான் எஃப் கென்னடி, நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதே தனது கனவு என்று கூறி நாசாவை ஊக்கமூட்டினார். அதன்பிறகு ஜெரார்டு உழைப்பில் உருவான நிலவின் படங்கள் அரசின் தேசிய சொத்தாயின. இவருக்கு ஆங்கிலேயர் விட்டேகர் ஆராய்ச்சியில் உதவினார். அமெரிக்கா நிலவுக்கு அனுப்பிய ரோபோட்டிக் சர்வேயர் எடுத்த படங்களை விட இவரது தொலைநோக்கி படங்கள் பிரமாதமான தரத்தில் இருந்தன. அப்போலோ திட்டங்கள் தொடங

நிலவுக்கு போகலாமா?

படம்
இஸ்ரோ சந்திரயானைத் தொடர்ந்து அதன் அடுத்த பார்ட்டுக்கு சென்றுவிட்டது. வரும் ஜூலை 15 ஆம் தேதி நிலவுக்கு அடுத்த பயணம் தொடங்குகிறது. சந்திரயான் 1 2008 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இத்திட்ட மதிப்பு 978 கோடி ரூபாய். ஜிஎஸ்எல்வி 3 சந்திரயான் 2 செயற்கைக்கோளை விண்ணில் கொண்டு செல்லவிருக்கிறது. 3.8 டன் எடை கொண்ட செயற்கைக்கோள் இது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செல்லும் இந்த ராக்கெட்டில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய கருவிகள் உண்டு. சந்திரயான் 2 செயற்கைக்கோளை சுமக்கும் ஜிஎஸ்எல்வி 4 டன் எடையைத் தூக்கிச்சுமக்கும் சமர்த்து கொண்டது. இதனை பாகுபலி என்று அழைக்கின்றனர். நிலவில் நிலவும் அசாதாரண சூழல்களைச் சமாளித்து ரோவர் அங்கு சரியாக இறங்குவது சாதனை. அத்தனை தகவல் தொடர்பையும் சரியாக ஒருங்கிணைப்பதும் அடுத்த சாதனை. இதில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட 14 கருவிகளும், நாசாவின் கருவி ஒன்றும் உள்ளது. விக்ரம் எனும் ஆர்பிட்டரில் உள்ள ரோவர் நிலவில் இறங்கி 14 நாட்கள் சோதனை செய்ய உள்ளது. ரோவர் ஆர்பிட்டர் வழியே தகவல்களையும் படங்களையும் அனுப்ப உள்ளது. நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

நிலவுக்கு ரீஎன்ட்ரி அவசியமா?

படம்
நிலவுக்கு மீண்டும் செல்ல அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக நிதி ஒதுக்குவதற்கான மசோதா விரைவில் தயாரிக்கப்பட்டு காங்கிரசில் அளிக்கப்படவுள்ளது. 1972 ஆம் ஆண்டு விண்வெளி வீரர் ஜூன் செர்னன், உள்ளிட்டோர் அடங்கிய குழு நிலவுக்கு சென்றது. அதற்குப்பிறகு அமெரிக்கா வேறு வேறு கோள்களுக்கு விண்கலங்களை அனுப்பியது. தொலைநோக்கிகளை அனுப்பி கண்காணித்ததே ஒழிய நிலவைக் கண்டுகொள்ளவில்லை. அடிக்கடி ஒரே விருந்தினர் வீட்டுக்கு போனால் போரடிக்குமா இல்லையா? ஆனால் ட்ரம்ப் வெள்ளையர்களின் பெருமையை மீட்க வந்த பெருந்தகையல்லவா? எனவே நாம் மீண்டும் நிலவுக்கு போகப்போகிறோம். ரெடியாக இருங்கள். இதற்கான செலவு 1.6 பில்லியன் டாலர்கள். சீக்கிரமாக பட்ஜெட் தயாரியுங்கள் என உத்தரவிட்டு, அறிவிப்பையும் பத்திரிகையாளர்களுக்கு அறிவித்து விட்டார். திட்டத்தின் பெயர் ஆர்ட்டெமிஸ். இது அப்பல்லோவின் சகோதரி பெயர். எதற்கு இப்பெயர் சூட்டியுள்ளனர்? இந்த திட்டத்தில் முதன்முதலாக பெண் ஒருவரையும் இணைத்துக்கொண்டு செல்லவிருக்கின்றனர். 2024 ஆம் ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. ஆனால் இதற்கு மக்களிடையே பெரிய ஆர்வமில்லை. கெ

நிலவில் அமெரிக்கா!

படம்
pinterest\ann sissom ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலவில் அமெரிக்கா காலடி எடுத்து வைக்க இருக்கிறது. நிலவின் மாதிரியை கெத்தாக எடுத்து வந்தவர்கள், அங்கு 96 வகை கழிவுக்குப்பைகளை போட்டுவிட்டு வந்துவிட்டனர். அடுத்தமுறை நிலவுக்குச் செல்லும் அமெரிக்க வீரர்கள் இக்கழிவுகளை திரும்ப பூமிக்கு கொண்டுவரும் முடிவில் உள்ளனர். இதுவரை பனிரெண்டு விண்வெளி வீரர்கள், நிலவுக்கு சென்றுள்ளனர். இதன் விளைவாக 96 கழிவுகளைக் கொண்ட கவர்கள் அங்கு தேங்கிவிட்டன. நாசா இதுவரை ஆறு திட்டங்களின் மூலம் நிலவின் வெவ்வேறு பகுதிகளை ஆராய்ந்துள்ளது. கழிவுகளை மட்டும் நாசா அங்கு விட்டுவரவில்லை. திட்டங்களைச் செய்ய கொண்டு சென்ற கேமரா, சில பொருட்கள், விண்வெளி பொருட்கள் ஆகியவை நிலவிலேயே உள்ளன. நிலவில் தங்கி பணியாற்றும் வீரர்களுக்கு சிறுநீர் கழிக்க, மலம் கழிப்பதற்கான டயாபர் ஆகிய வசதிகளை நாசா செய்து தருகிறது. 2024 ஆம் ஆண்டு நிலவுக்குள் நிலவுக்கு பயணிக்க நாசா தயாராகி வருகிறது. கழிவுகளை இங்கு கொண்டு வந்து என்ன செய்வார்கள் என்று தோன்றுகிறதா?  நிலவிலுள்ள சூழலைக் கணிக்க அவை உதவும் என்பது ஆராய்ச்சியாளர்களின் எண்ணம். நில

நிலவு இல்லாத பூமி?

படம்
bbc ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நிலவு இல்லையென்றால் என்னாகும்? நிலவு பூமியைச் சுற்றி வருகிறது. ஒருவேளை நிலவு இல்லாதபோது, பூமியில் என்ன மாற்றம் நடக்கும்? கடல் அலைகளின் எழுச்சி குறையும். சூரியனின் ஈர்ப்பு விசை மட்டுமே பூமியைப் பாதிக்கும். தினசரி நேரத்தில் 0.002 நொடி வித்தியாசம் ஏற்படும். இப்போது பூமி 23.5 டிகிரி கோணத்தில் உள்ளது. நிலவின் ஈர்ப்புவிசை இதனை இந்த இடத்தில் பொருத்தியுள்ளது. ஆனால் நிலவு இல்லாதபோது, இந்நிலை மாறும். செவ்வாய் 60 டிகிரி கோணத்தில் அதன் வட்டப்பாதையில் சாய்ந்துள்ளது ஈர்ப்புவிசை வலிமையற்ற துணைக்கோள்களால்தான். நன்றி: பிபிசி