இடுகைகள்

காசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாயும் பொருளாதாரம் - செயலின் நோக்கமும் கிடைக்கும் பரிசும்

படம்
      பாயும் பொருளாதாரம் செயலின் நோக்கமும் கிடைக்கும் பரிசும் பெற்ற தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் சமாளிப்பதை இந்தியாவில் அனைவருமே செய்பவர்கள்தான். இந்திய அணி கோப்பையைத் தவறவிட்டால், மற்ற நாட்டு ஊடகங்கள் போல உதவாக்கரை பயல்கள் என எழுத முடியாது. எனவே, இதயங்களை இந்திய அணி வென்றது என எழுதி ஆறுதல் தேடுவது வழக்கம். அணியில் உள்ளவர்களுக்கு இதனால் எந்த நன்மையும் கிடையாது. அவர்கள் அப்படியே குறைகள் குறையாமல் ஆடுவார்கள். ஒரு ரன்னுக்கு ஓடி வரும்போது கூட ஈகோ பார்த்து இளம் வீரனை அவுட் ஆக்கி கௌரவம் பார்ப்பது இப்படித்தான் உருவாகிறது. அதாவது குணநலன். ஆட்டோவில் ஒரு நகைப்பை கிடைக்கிறது. அதை ஓட்டுநர் வைத்துக்கொள்ள நினைக்கிறார் இதனால் அவருக்கு, வாங்கிய கடனைத் தீர்க்க முடியும், ஆனால், பொருளை தொலைத்தவர் வழக்கு பதிந்தால் காவல்துறையில் மாட்டிக்கொள்ள நேரும், அதேநேரம் பிறர் பொருளை திருடியதால் குற்றவுணர்ச்சி இருக்கும். அடுத்து, அதை உரியவர்களிடம் ஒப்படைப்பது. இந்த வகையில் ஒருவருக்கு நல்ல செயலை செய்தோம் என்ற ஆறுதல் கிடைக்கும். அதற்காக அவர் செய்கிறார் என்றே வைத்துக்கொள்ளலாம். பொருளை இழந்தவருக்கு அப்பொருள...

மக்களை விலைக்கு விற்கும் பச்சோந்தி அரசியல்வாதிகள்

படம்
பசுமைக்கட்சி, அணு ஆயுதங்களை, ராணுவ நடவடிக்கைகளை, போரை எதிர்க்கிறது. ஆனால் கூட்டாட்சி முறையில் பல்வேறு சமரசங்களை செய்ய வேண்டியிருக்கிறது. பாசிச ஆட்சிக்கு எதிராக சமரசமே செய்யமுடியாது. முழுக்க போராடி வெல்லவேண்டும் என்று கூறுவது முன்னோர் வாக்கு. ஆனால் ஆட்சி அமைத்து நிர்வாகத்தில் பங்கேற்ற பசுமைக்கட்சியினர், பல்வேறு நாடுகளில் சூழல் மீதான கவனத்தைக் கொண்டு வந்தாலும் பெரும்பான்மை பலமில்லாத நிலையில் அடிப்படை கருத்துகளை முழுக்க செயல்பாட்டிற்கு கொண்டுவரமுடியவில்லை. பசுமைக்கட்சியினருக்கு மாற்றம் என்பது எளிதாக நடைபெறக்கூடியது அல்ல, எளிதாகவும் நிறைவேறாது என்று தெரிந்திருக்கிறது. மாறுதலுக்கு காலமும் குறைந்துகொண்டிருக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் செயல்ளை மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொள்ளாவிட்டால் எதையும் மாற்றிக்கொள்ளமுடியாது என்ற நிலை கூட வரலாம். வன்முறையைப் பயன்படுத்தி, லஞ்சம் கொடுத்து எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வருவது அசாத்தியம். அதை நிலைக்கும் என்று கூட கூறமுடியாது. கட்சி தொடங்கி, கொள்கைகளை பிரசாரம் செய்து மக்களை ஈர்த்து அரசியல் அதிகாரத்தைப் பெற்று தேர்தலில் வென்று மக்களின் பிரதிநிதிகளாகி கொள்கை...

திரில்லர் படங்களை பார்ப்பது ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும்! - ரீலா? ரியலா?

படம்
    ரியலா ? ரீலா ? 1. திகில் , திரில் திரைப்படங்களைப் பார்க்கும்போது நம் உடலிலுள்ள ரத்தம் உறையும் . ரியல் : திகில் , திரில் நிறைந்த படங்களை இரவில் பார்த்திருப்பீர்கள் . அப்போது உங்களை அறியாமல் இதயத்துடிப்பு அதிகரிக்கும் . வியர்க்கும் . ஆனால் உங்கள் ரத்தத்தில் ஏதாவது மாற்றங்கள் நடந்திருக்கும் என யோசித்திருக்கிறீர்களா ? திரைப்படக்காட்சி வழியாக படத்தோடு ஒன்றிப்போகும்போது , நம் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன . அதன் விளைவாக ரத்தத்தில் உள்ள புரதமான ஃபேக்டர் 7 மாறுதலுக்கு உள்ளாகிறது . இதன் விளைவாக ரத்தம் தற்காலிகமாக ஜெல் போல மாறுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் . படங்கள் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை . பங்கி ஜம்ப் விளையாட்டை மேற்கொள்கிறவர்களுக்கும்கூட உடலில் இந்த மாற்றம் ஏற்படுகிறது என ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர் . ஆபத்து ஏற்படும்போது உடல் தன்னைக் காத்துக்கொள்ளும் வழிமுறைதான் இது . வேறொன்றுமில்லை . 2 . உயரமான கட்டடத்திலிருந்து சில்லறைகளை கீழே வீசி , மனிதர்களின் தலையில் விழுந்தால் அவர் இறந்துவிடுவார் . ரியல் : முட்டாள்கள் தின கண்டுபிடிப்புகளில் இதுவ...

வேலை செய்யுங்க மக்கா! - மயிலாப்பூர் டைம்ஸ்!

படம்
சப்பாத்தியா, அப்பளமா? மயிலாப்பூர் டைம்ஸ்! யாராவது வேலை செய்யறீங்களா? மயிலாப்பூரில் வாழ்ந்து விட்டு சோற்றை பற்றி எழுதாமல் எப்படி இருப்பது? நானும் லஸ்கார்னர் முருகன் கடை , தள்ளுவண்டி சரவணன் கடை, ரெக்ஸ் கடையருகே உள்ள சைவத்திருநீறு வைத்த காசாளர் கடை, அதற்கு எதிரில் உள்ள இளைஞர்கள் கடை, 30 ரூபாய் பிரியாணி கடை , தங்கம் ஹோட்டல் என சாப்பிட்டாயிற்று. ஆனால் கூட திருப்தி வரவில்லை. காரணம், வாங்குகிற காசுக்கான நேர்மை குறைந்து வருவதுதான். மயிலாப்பூரிலுள்ள பஜார் தெருவில் பல்வேறு கடைகள் இருந்தாலும் சில மாதங்களாக புதிய உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. (அ)சைவம் என இரண்டுமே உண்டு. அப்போதுதானே காசு பார்க்க முடியும். ஆனால், அதற்கு உழைக்க வேண்டுமே! புதிய கடை. வெளிச்சம் அதிகமாக இருக்கிறது. அப்போது வேலை குறைவாக நடக்குமே என்று நினைத்தேன். அதேபோல ஆயிற்று. மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. இரண்டு சப்பாத்தி இரவு உணவுக்கு வாங்க வந்தேன். முதலில் கல்லாவில் உட்கார்ந்திருப்பவருக்கு மரியாதை செய்யவேண்டுமே என்று அவரிடம் போனேன். கருப்பு நிறத்தில் பிள்ளையார் போல இருந்தார். லூசு என்றால் கூட அதனால் ...