இடுகைகள்

ஊனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெறுப்பும் கொலைவெறியும் மனதில் ஊற உருவாகிறான் ஊனக்கால் கொலைகாரன்!

படம்
  ஃபிஸ்ட் டிமோன் ஆஃப் மவுண்ட்குவா  மாங்கா காமிக்ஸ்  ரீட்மாங்காபேட்.காம். மனம் நிறைய வலியும் வேதனையும் மட்டுமே நிறைந்த நாயகனின் கதை.  கொள்ளையர்கள் ஒரு ஊரை வந்து தாக்குகிறார்கள். கொள்ளையடிக்கிறார்கள். அங்குள்ள ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மாவைக் கொல்கிறார்கள். மகனையும் அடித்து உதைத்து குற்றுயிராக்கிவிட்டு அவன் தங்கையைக் கடத்திச்செல்கிறார்கள். அந்த சிறுவனை மவுன்ட் குவாவைச் சேர்ந்த கல்வியாளர் ஹியூன் சோ காப்பாற்றி எடுத்து வளர்க்கிறார். கொள்ளையர்களின் தாக்குதல் காரணமாக அவனுக்கு இடதுகால் ஊனமாக மாறுகிறது. இடதுகால் தொய்ய, வலது காலால் அடியெடுத்து வைத்து நகர்வதுதான் அவனது பாணி. அவனுக்கு சியோயங் என பெயர் வைக்கிறார்.  தற்காப்புக்கலைக்கு கால்கள் முக்கியம். அதுவே பழுதானதால், ஹியூன் சோவின் மாணவனாக இருந்தாலும் நொண்டி, அவமானச்சின்னம், நாய் என மவுன்ட் குவா இனக்குழுவில் அனைவருமே அவனை கேலி செய்கிறார்கள். உனக்கெல்லாம் தற்காப்புக்கலை எதற்கு என இழிவுபடுத்துகிறார்கள். ஆனால், சியோயங்கிற்கு ஒரு கிராமத்தை, அதிலும் தன் குடும்பத்தை அழித்த கொள்ளைக்காரர்களை யாரும் தண்டிக்கவில்லை என்ற ஆத்திரம், ஆதங்கம் உள்ளது. ஒரு கிரா

இரு கைகள் இல்லாமல் காலில் தேர்வு எழுதி ஆங்கில முதுநிலைப்பட்டம் வென்ற பெண்!

படம்
  நெருங்கிய உறவில் திருமணம் செய்வது மருத்துவ அறிவியல் அடிப்படையில் குழந்தைகள் ஊனமாக முக்கிய காரணம் என அறிந்திருப்பீர்கள். ஆனால் கிராமங்களில் இன்றும் சொத்து, உறவு என ஏதோ காரணம் காட்டி பெண்ணை அவளது தாய்மாமனுக்கு திருமணம் செய்வது நடந்து வருகிறது. ஆர்காடு கிராமம் முகையூர் கிராமத்தில் வாழ்ந்த வீரம்மாளின் மகள் மாயாவுக்கும் இப்படித்தான் அவளது மாமாவுடன் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை பிறந்தபோதுதான் திருமணத்தில் கோரமான விளைவு தெரிய வந்தது. பிறந்த குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லை. குழந்தையைப் பார்க்க வந்த உறவினர்கள், குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என கூறியிருக்கிறார்கள். ஆனால் பேத்தியை வீரம்மாள் அப்படியெல்லாம் கைவிடவில்லை. நான் உயிரோடு இருக்கும்வரை பேத்தி என்னோடு இருக்கட்டும் என நினைத்து குழந்தையை துணியில் பொதிந்து தூக்கி வந்துவிட்டார். இப்படி குழந்தை ஊனமாக பிறப்பதற்கு காரணம், உறவுமுறை திருமணம் என உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் கூறியிருக்கிறார். இப்படித்தான் வளர்ந்த பெண் குழந்தை வித்யா ஶ்ரீ இன்று ஆங்கிலப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவராக, அரசு ஆசிரியையாக மு

பச்சை விரியனின் தாக்குதலுக்கு பலியாகும் மக்கள்!

படம்
   பச்சை விரியனின் விஷத் தாக்குதல்! இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பாம்புகளால் மனிதர்கள் கடிபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு, 64 பாம்புகள் வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 15 பாம்பினங்கள் விஷத்தன்மை கொண்டவை. இதில் க்ரீன் பிட் வைப்பர் எனும் பாம்பினத்திலுள்ள பல்வேறு வகை பாம்புகளால் தான் மனிதர்கள் அதிகம் கடிபட்டுள்ளனர். இந்த பாம்பின் விஷத்தை ஹீமோடாக்ஸிக் ( Hemotoxic venom)என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.  கண்ணாடி விரியன், புல் விரியன் ஆகிய பாம்பினங்களை விட க்ரீன் பிட் வைப்பரின் விஷம் கடுமையானதல்ல. காணப்படும் நிலப்பரப்பைப் பொறுத்து பாம்பின் விஷம் மாறுபடுகிறது. மேற்குவங்கம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணப்படும் பாம்புகள் ஒரே இனத்தில் பல்வேறு துணைப் பிரிவுகளைச் சேர்ந்தவை. பாம்புகள் பல்வேறு வகையான விஷத்தன்மைகளைக் கொண்டுள்ளன. ஹீமோ டாக்ஸின் (Hemotoxin) என்பது, சிவப்பு ரத்தசெல்களை அழிக்கிறது. உடலின் இயல்பான ரத்தம் உறைதலைத் தடுக்கிறது. நியூரோடாக்ஸின் (Neurotoxin), மனிதர்களின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. மேலும், சைடோடாக்ஸின் (Cytotoxin), உடலின் செல்களைத் த