இடுகைகள்

தீபாவளிமலர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெயிலை அள்ளிப்பருகுபவனின் கதை! கடிதங்கள்

படம்
          எழுத்தாளர்  ஜெயமோகன்   இனிய தோழர் இரா . முருகானந்தம் அவர்களுக்கு , வணக்கம் . நலமா ? எங்கள் அலுவலகத்தில் தற்போது தீபாவளி மலர் வேலைகள் நடந்து வருகின்றன . கட்டுரைகளை செம்மையாக்கும் பணியைக் கொடுத்திருக்கிறார்கள் . சேலம் கல்லாங்குத்து பஜார் , திண்டுக்கல் - பழநி நடைபாதை , சிவகாசி தீக்குச்சிகள் உள்ளிட்ட கட்டுரைகள் தயாராகி உள்ளன . நிருபர் வெ . நீலகண்டனின் இடத்தை நிரப்புவது கடினமானது . அவர் ஏகப்பட்ட வேலைகளை செய்துகொண்டிருந்தார் . என்னால் முடிந்தளவு வேலை செய்து வருகிறேன் . விகடனில் ஜெயமோகன் எழுதிய வெயிலில் தொற்றிக்கொள்வது கதை , புதுவித புனைவாக ஈர்த்தது . வெயிலை அள்ளிப்பருகும் மனிதர் ஒருவரின் கதை இது . தீராத பகல் , தனது காதலியின் இறப்பு ஆகிய நினைவுகளை பசுமையாக வைத்திருக்க வெளிச்சத்தின் போதையை நாடி விமானத்திலேயே திரியும் மனிதரின் வாழ்க்கை ஆச்சரியப்படுத்தியது . குங்குமத்தில் வரும் முகங்களின் தேசம் தொடர் , நூலாக வெளியாகும்போது முக்கியமான நூலாக இருக்கும் . இந்திய நிலப்பரப்பு , மனிதர்கள் , புழுதி , நீர் , உணர்வுகள் என மாயம் நிகழ்த்தும் எழுத்து . பேச்சு மற