இடுகைகள்

போதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போதை கார்டெல் குழுவை அழிக்க கைகோர்க்கும் இரு நண்பர்களின் போராட்டக்கதை!

படம்
  சிட்டி ஆஃப் சாவோஸ்  சீன தொடர் 24 எபிசோடுகள் ஐக்யூஇ ஆப் கலின்சியா என்ற  நாடு உள்ளது. அதில் புகழ்பெற்ற நகரம் லாங்புக். இங்கு போதைப்பொருட்கள் கார்டெல்கள் வலுவாக உள்ளன. அதில் முக்கியமான கார்டெல், செவன்ஸ்டார் சொசைட்டி. இந்த அமைப்பு, ஆர்எக்ஸ் 45 என்ற போதைமருந்தை தயாரித்து மறைமுகமாக விற்று லாபம் பார்த்து வருகிறது. நேரடியாக செய்யும் வியாபாரங்கள் தனி. குளியலறை, கடை, மதுபானம் விற்பது, வணிக வளாகங்கள், கிளப்புகள், சூதாட்ட மையங்கள்  என ஏராளமானவை நடைபெறுகிறது.  சீனவீரர், இந்த போதைப்பொருள் மாஃபியாவை ஒழிக்க கலின்சியா வருகிறார். அதற்காக அவர் வேண்டுமென்றே குற்றம் ஒன்றில் சிக்கிக்கொண்டு லாங்புக் கடல் சிறைக்கு செல்கிறார். அங்கு, யு யோங்ஜி என்ற செவன்ஸ்டார் சொசைட்டியின் துணைத்தலைவர் சிறைவைக்கப்பட்டிருக்கிறார். அவரைக் கொல்பவர்களை இடைமறித்துக் கொன்று அந்த மனிதனுக்கு நெருக்கமாகி போதை மாஃபியாவில் சேருகிறார். கூடவே, தீவின் சிறையில் இருந்த வார்டன் லாவோ பாயும் சேருகிறார். இவர், யு யோங்ஜியின் பள்ளிக்கால நண்பர்.  சீன வீரர் லூஜா, தன்னைப் பற்றிய ரகசியங்களை லாவோ பாயிடம் வெளிப்படையாக சொல்லிவிடுகிறார். பாய்க்கு தனது தம

இங்கு ஒரு நல்ல விஷயம் நடந்தால் அதன் பின்னால் இரண்டு மோசமான கெட்ட விஷயங்கள் இருக்கும்!

படம்
  sly stone ஸ்லை ஸ்டோன்  அமெரிக்க இசைக்கலைஞர்  ஸ்டோன் அண்மையில் தனது எண்பது வயதில் சுயசரிதை ஒன்றை எழுதியிருக்கிறார். அதைப்பற்றி அவரிடம் பேசினோம்  தற்போதைய வாழ்க்கையை எப்படி உணர்கிறீர்கள்? மனம் என்பதைப் பொறுத்தவரை நலமாகவே இருக்கிறேன். ஆனால் உடல்தான் சரியான நிலையில் இல்லை. எனது நுரையீரலில், பிற உறுப்புகளில் சில பிரச்னைகள் உள்ளன. இந்த ஆண்டில் காது கேட்கும் கருவியை வாங்கி அணியும்வரை ஒருவர் பேசுவது கேட்காமல்தான் இருந்தது.  நீங்கள் எழுதியுள்ள சுயசரிதையில், சில்வெஸ்டர் ஸ்டீவர்ட் திரும்ப வந்து ஸ்லை ஸ்டோனின் கதையை கூறியுள்ளதாக கூறியுள்ளீர்களே? மக்கள் என்னைப் பார்த்து எனக்குள் இரண்டு மனிதர்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள். நான் மறுவாழ்வு முகாமில் இருந்தபோது அங்கிருந்த மருத்துவர் உனக்குள் உள்ள சில்வெஸ்டர் சந்திப்புகளை விரும்புகிறான். ஆனால் ஸ்லை அதை தவிர்க்கிறான் என்று கூறினார். என் அப்பாவும் இரண்டு மனிதர்களுக்கு என தனி நாட்கள் உண்டு என்று கூறினார். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. நான் ஒரே மாதிரியான மனிதராகவே இருக்கிறேன். மக்கள் சிலவகை கடந்தகால கதைகளை கேட்க விரும்புகிறார்கள் என்றொரு மூடநம்பிக்கை உ

மதுவில் கலக்கப்பட்ட விஷம் - மனைவியா, தோழியா -யார் கொலையாளி?

படம்
  அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்தவர் கேசி மெக்பெர்சன் பொமெராய். இவரை சுருக்கமாக கேசி என அழைக்கலாம். மருந்துகள் விற்கும் விற்பனைப் பிரதிநிதி. இவர் செய்யும் வேலையை அவரே சொன்னால்தான் தெரியும். ஏனெனில் பார்க்க திரைப்பட நடிகர் போல தோற்றம் கொண்டவர். அதனால் சில ஆண்டுகள் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறார். அவர் பார்பரா என்ற பெண்ணை மணந்துகொண்டார். உண்மையில் கேசிக்கும், பார்பராவுக்கும் எந்தவிதத்திலும் கணவன் மனைவி   என்ற பொருத்தமே கிடையாது. பார்க்கும் யாரும் மனதில்   நொடியில் இந்த உண்மையை உணர்வார்கள். ஆனால் சட்டப்பூர்வமாக தம்பதிகளாக வாழ்ந்தனர். கேசிக்கு கடல் நீரில் சர்ஃபிங் செய்வதில் நிறைய ஆர்வம் உண்டு. எனவே, தனது மனைவியுடன் அங்குலியாவில் தனியாக வீடு வாடகைக்குப் பார்த்துக்கொண்டு சென்றுவிட்டார். அருகிலேயே கடலும் இருக்கையில் அவருக்கு மகிழ்ச்சி எல்லையற்றதாக இருந்தது. ஆனால் எல்லாமே டிசம்பர் 2018ஆம் ஆண்டோடு சரி. அதில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடித்த மதுவில் விஷம் கலக்கப்பட்டு இருக்க கேசியும், அவரது பள்ளி   கால நண்பர் காலெப் கில்லெரியும் இறந்து போனார்கள்.

டார்க் வெப்பில் இயங்கும் குற்றவாளிகளை, மக்கள் விடுதலைப் படை வெற்றிகொள்ளும் கதை! மை டியர் கார்டியன்

படம்
  மை டியர் கார்டியன் சி டிராமா 40 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   மக்கள் விடுதலைப்படையின் பிரிவில் இயங்கும் சிறப்பு படையின் அருமை பெருமைகளை பேசும் டிவி தொடர். மேலே சொன்னதுதான் தொடரின் அடிப்படை. எனவே, மற்ற விஷயங்களையெல்லாம் அப்படியே அமுக்கி விடுகிறார்கள். குறிப்பாக உள்நாட்டு காவல்துறையின் செயல்பாட்டையெல்லாம் தாண்டியது மக்கள் விடுதலைப்படை என காட்டுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசம் என்பதை உறுதிமொழி எடுக்கும் காட்சியில் காட்டுகிறார்கள். சீனாவில் ஒரே அரசியல்கட்சிதான் உள்ளது. அதுதான ஆளுங்கட்சி அரசை வழிநடத்துகிறது. லியாங் மூ ஷி, சிறப்பு பிரிவு ராணுவ வீரர்.கேப்டனாக உள்ளவரின் குழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் போதை தயாரிப்பு குழு ஒன்றை உள்நாட்டு காவல்துறையோடு சேர்ந்து வேட்டையாடுகிறது. அதில் ஓல்ட் மாஸ்டர் என்ற முக்கிய குற்றவாளி தப்பி விடுகிறார். அவரிடம் வேலை செய்த சாதாரண மக்கள் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்படுகிறார்கள். இதில் ஜூ ரான் என்ற பள்ளிச்சிறுவன், போதைப்பொருள் வியாபாரியான அப்பாவை காப்பாற்றும் முயற்சியில் இறந்துபோகிறான். அவனது அப்பாவும், போதை தொழில் செய்யும் முதலாளி

கார்டெல்கள் ஆளும் மெக்சிகோ தேசம்! - தினசரி கொல்லப்படும் அப்பாவி மக்கள்!

படம்
  மெக்சிகோ அதிபர் ஆம்லோ கார்டெல்கள் ஆட்சி செய்யும் மெக்சிகோ தேசம் மெக்சிகோ நாட்டை இடதுசாரி பாப்புலிச தலைவர் ஆண்ட்ரேஸ் மானுவேல் லோபஸ் ஆப்ரடார் ஆள்கிறார். இப்படி கூறுவது பெயரளவில்தான். உண்மையில் மெக்சிகோவை   ஆள்வது போதைப்பொருட்களை விற்கும் கார்டெல் குழுக்கள்தான். அதிபரான ஆம்லோ ஆட்சிக்கு வரும்போது தினசரி 89 கொலைகள் நடந்துவந்தன. இப்போது அந்த எண்ணிக்கை கூடி 96 ஆக மாறியிருக்கிறது. ஆட்சி மாற காட்சியும் மாறியிருக்கிறது. என்னதான் நடக்கிறது? இடதுசாரி தலைவரின் ஒற்றைத்திட்டம் கூட நடைமுறைக்கு வரவில்லை. அணுவளவு பயனும் தரவில்லை என்பதே உண்மை. கார்டெல்களில் வேலை செய்யும் நெருக்கடி சூழலில் தள்ளப்பட்ட 2.3 மில்லியன் இளைஞர்களுக்கு   வேலைவாய்ப்பு திறன்களை அளிப்பதாக அதிபர் ஆம்லோ கூறினார். கொலைக்குற்றங்களைக் குறைக்க அறுபதாயிரம் பேர் கொண்ட தேசிய காவல்படையை உருவாக்குவதாக வாக்களித்தார். ஆனால், தேசிய காவல்படை மத்திய அமெரிக்க அகதிகளை தேடி வேட்டையாடி வருவதால், கொலைக்குற்றங்களை தடுக்கமுடியவில்லை. அதேசமயம் நாட்டில் நடைபெறும் கொலைக்குற்றங்களும் கூடி வருகின்றன. அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இயலாமையில் த

காதலியின் துரோகத்தை சந்தித்து அதை திருப்பி அடிக்கும் ஜூனியர் டான்ஸ் மாஸ்டர்! கோவிந்தா நாம் மேரா...

படம்
  கோவிந்தா நாம் மேரா - விக்கி கௌசல், பூமி, கியாரா கோவிந்தா நாம் மேரா -இந்தி  கோவிந்தா நாம் மேரா இந்தி விக்கி கௌசல், கியாரா அத்வானி, பூமி பட்னாகர், ஷாயாஜி ஷிண்டே கோவிந்தா, சினிமாவில் டான்ஸ் மாஸ்டராகும் நோக்கத்தில் ஜூனியர் டான்சராக வேலை செய்கிறார். அந்த குழுவில் அவருக்கு காதலி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் சுக்கு. இருவரது நோக்கமும் ஒன்றுதான். தனியாக டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்து பணம் சம்பாதித்து கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் விஷயங்கள், கோவிந்தாவின் மனைவி. அடுத்து அவன் தங்கியுள்ள வீடு. சண்டை பயிற்சியாளரான அப்பாவுக்கும், ஜூனியர் டான்ஸ் மாஸ்டரான அம்மாவுக்கும் பிறந்த பிள்ளை கோவிந்தா. இரண்டாவது திருமணம். சட்டரீதியாக பதிவு செய்யப்படாத திருமணம். இதனால் முதல் மனைவி, அவரின் பிள்ளை இருவரும் சேர்ந்து   வழக்கு போட்டு, கோவிந்தாவின் வீட்டை வாங்க நினைக்கிறார்கள். அந்த வீடு, கோவிந்தாவின் அப்பா   மனைவிக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்தது. கல்யாணம் செய்த மனைவி ‘’இரண்டு கோடி பணம் கொடுத்தால், உன்னை விவாகரத்து செய்கிறேன். நான் உன்னை கல்யாணம் செய்ய டௌரி கொடுத்தேன் இல்லையா அதைக் கொட

உதவாக்கரை பங்குகளை விற்று சாதனை படைத்த மனிதனின் எழுச்சியும், வீழ்ச்சியும் - தி வோல்ஃப் ஆப் வால்ஸ்ட்ரீட்

படம்
  வோல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட் லியனார்டோ டிகாப்ரியோ, மார்க்கரேட் ராபி இயக்கம் மார்ட்டின் ஸ்கார்சி அமெரிக்காவில் வால்ஸ்ட்ரீட் எனும் பங்குச்சந்தை நிறுவனம் பற்றி அறிந்திருப்பீர்கள். அதுதான் உலகளவில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் இடம். அங்கு வேலைக்கு வரும் பெல்ஃபோர்ட் என்ற மனிதன், பங்குச்சந்தை உலகில் மிகப்பெரும் மனிதராக எப்படி உருவானார் என்பதே படத்தின் கதை. படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது என்றாலும் சொல்வதற்கு அத்தனை விஷயங்கள் உள்ளன. டிகாப்ரியோ பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். படத்தில் நிறைய முக்கியமான காட்சிகள் உள்ளன. அதில் அவர் முதன்முதலில் பங்குச்சந்தை பங்குகளை விற்க வாடிக்கையாளர்களுக்கு போன் செய்ய தன்னை எப்படி தயார் செய்துகொள்ளவேண்டும் என கற்றுக்கொள்ளும் காட்சி. இங்குதான் போதைப்பொருட்களை பயன்படுத்த கற்கிறார். அவர் வாழ்வின் இறுதிவரையில் போதைப்பொருட்களை பயன்படுத்தி தனது வாழ்க்கையின் உயரம் தொட்டு கீழே விழவும் இதே பழக்கம்தான் வழித்தடமாக அமைகிறது. பங்குகளை விலைபேசி விற்கும் அலுவலகத்தில் வேலை செய்கிறார். ஆனால் அங்கு அவர் வேலை செய்து பெரிதாக சாதிக்க முடியாத சூழல்.

இருள் மனிதர்களின் கொந்தளிப்பான வாழ்க்கை - உப்பு நாய்கள் - லஷ்மி சரவணக்குமார் - எதிர் வெளியீடு

படம்
  உப்பு நாய்கள்  லஷ்மி சரவணக்குமார்  எதிர் வெளியீடு  மின்னூல்  இந்த நாவல் சென்னையில் இருளான, நிழல் வேலைகளை செய்யும் மனிதர்களைப் பற்றி துல்லியமாக சொல்லிச் செல்கிறது. வாசிப்பவர்களை நிறைய வன்முறை சம்பவங்கள் வாயடைத்து பீதி கொள்ளச்செய்யும். அந்தளவு காட்சிகள் வன்முறையை விவரிக்கின்றன.  நூலுக்கு வண்ணதாசன் முன்னுரை எழுதியிருக்கிறார். ல.ச.குவின் அனைத்து நூல்களையும் படித்துவிடுவதாக கூறியிருக்கிறார். நம்பிக்கையான மனிதர்கள் பற்றி மட்டுமே அதிக சிறுகதைகள் எழுதியுள்ளவர், ல.ச.குவின் கதை பற்றி முன்னுரை எழுதியுள்ளது ஆச்சரியமானது. உண்மையில் அவர் அப்படிப்பட்ட மனிதர்களையும் அறிய நினைப்பது இயல்பானதுதான். மணிரத்னம் எப்படி பாலா படங்களைப் பார்த்து அவரைப் பாராட்டுகிறாரோ அதேபடிதான்.  சென்னையில் சேரி அருகில் வாழ்பவர்களான சம்பத், மணி, சுந்தர் ஆகியோரின் வாழ்க்கைதான் முக்கியமான கதை. இதற்கடுத்து மதுரையில் பிக்பாக்கெட் அடிக்கும் செல்வி, தவுடு அவர்களின் கணவர்கள், விபச்சாரத்தை தொழிலாக செய்யும் முத்துலட்சுமி, ஆந்திரத்தில் வாழ்ந்து வந்து சென்னையில் வாழ்க்கையைத் தொலைக்கும் ஆதம்மா ஆகியோர் வருகிறார்கள்.  நாவலில் சற்று நம்பிக்

ரத்தத்தை பின்தொடரும் கேங்ஸ்டர் குடும்பம்! - தி பவர் 2021- இந்தி

படம்
  தி பவர் - வித்யுத் ஜாம்வால் தி பவர் மகேஷ் மஞ்ரேக்கர் காட் பாதர் படத்தின் தழுவல் என கூறுகிறார்கள். மும்பையில் இருக்கும் அனைத்து  சட்டவிரோத செயல்களையும் வணிகத்தையும் தாக்கூர் குடும்பத்தினர் செய்கிறார்கள். இவர்களுக்கும் முறைகேடான வணிக சிண்டிகேட்டிற்கும் உள்ள சண்டையும், பழிவாங்கும் சம்பவங்களும்தான் கதை.  சிண்டிகேட்டில் உள்ள ராணா, மும்பையில் நிழல் உலக ராஜாவாக இருக்கும் காளிதாசை நேரடியாக எதிர்க்க முடியாமல் மறைமுகமாக எதிர்க்க நினைக்கிறார். இதற்காக அவர் செய்யும் செயல்கள்தான் கதையை நகர்த்துகின்றன.  கதை தொடங்கும்போது, காளிதாசின் மருமகன் தனது மாமனார் காளிதாசின் பொறுப்புக்கு வர ஆசைப்படுகிறார். இதைப்பற்றி பேசும்போது, காளிதாஸ் அங்கே வருகிறார். ரஞ்சித்தை அமைதிபடுத்தி அவருக்கு கோவாவில் ஹோட்டல் பிசினஸ் உள்ளது. அதைப்பார், நானும் உன்கூட வருகிறேன் என்கிறார். பிறகு கதை அப்படியே பின்னோக்கி செல்கிறது.  காளிதாசின் மகன்கள் ராம்தாஸ், தேவிதாஸ், மகள் ரத்னா. இதில் ராம்தாஸின் மனைவியின் தம்பியைத்தான் ரத்னாவுக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள், அவர்தான் ரஞ்சித். மாமனாரின் வீட்டிலேயே டேரா போட்டு அவரது இடத்திற்க

கொச்சி பின்னணியில் ரோமியோ ஜூலியட் கதை! - ரொமான்டிக் - தெலுங்கு

படம்
  ரொமான்டிக் ரொமான்டிக்  தெலுங்கு  இயக்குநர் அனில் பதூரி கதை, திரைக்கதை, தயாரிப்பு, வசனம் - ஆல் இன் ஆல் அனைத்துமே பூரி ஜெகன்னாத்.  கோவாவில் உள்ள போதைப்பொருள் கும்பலின் தலைவன் வாஸ்கோவுக்கும், இன்ஸ்பெக்டர் ஒருவரின் தங்கை மோனிகாவுக்குமான காதல், இன்ன பிற பிரச்னைகளும்தான் கதை.  படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தவுடனே பலரும் கேத்திகா சர்மா மீது மையல் கொண்டு படத்தை எப்போது புக் செய்யலாம் என ஸ்மார்ட்போனில் ஐநாக்ஸ் ஆப்பை தேடுவார்கள். ஆனால் அவசரப்படாதீர்கள்.  ரொமான்டிக் - ஆகாஷ் பூரி, கேத்திகா சர்மா ரோமியோ ஜூலியட் ரகத்தில்தான் முடிகிறது,. ட்ரெய்லரில் உள்ள காட்சிகள் மட்டுமே முழுமையாக படத்தில் தேறுகிற சில காட்சிகள். எனவே பணத்தை வீணடிக்காதீர்கள்.  படத்தைப் பார்க்க வைக்கத் தூண்டுவது ஒரே ஒருவர்தான் அது கேத்திகா சர்மாதான். அவரது அழகான உடலும் அதனை மேயும் கேமரா கோணங்களும்தான் படத்தை அழகாக்குகிறது. படத்தில் வேறு ஒன்றும் இல்லை.  கோவாவில் இரண்டு போதைக் கடத்தல் கும்பல்கள், அதில் ஒன்றில் வாஸ்கோ சேருகிறார்.வேலை மோசம் என்றாலும் லட்சியம் பெரிது. குடிசையில் வாழும் தனது மக்களை வீடுகட்டி வாழ வைப்பதுதான் நோக்கம். அதற்காகவ

தனது தவறுகளுக்கான விளைவை எதிர்கொள்ளும் பாப் பிஸ்வாஸ்! - பாப் பிஸ்வாஸ் - இந்தி

படம்
  பாப் பிஸ்வாஸ்  சுஜய் கோஸ் ஜீ5  பாப் பிஸ்வாஸ், என்பவர் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கோமாவிலிருந்து எழுகிறார். அவருக்கு தனக்கு மனைவி இருக்கிறார். டீனேஜ் பெண் ஒருவர், பள்ளி செல்லும் சிறுவன் என இருவர் பிள்ளைகள் என்பதே அவருக்கு நினைவில் இல்லை. உண்மையில் அவர் யார், எதனால் அவருக்கு பழைய விஷயங்கள் மறந்து போயின் என்ற விஷயங்களை ரத்தம் தெறிக்க நாம் தெரிந்துகொள்வதுதான் பாப் பிஸ்வாஸின் முக்கியமான கதை.  2012 இல் வெளியான கஹானி படத்தில் வரும் பாத்திரம்தான் பாப் பிஸ்வாஸ். அவரைப் பற்றிய ஸ்பின் ஆப் படம்தான் பாப் பிஸ்வாஸ். இவர் எப்படி காவல்துறைக்கு ஆதரவாக கொலைகாரராக மாறினார் என்பதை படம் பேசுகிறது. அப்பாவியாக இருக்கும் அபிஷேக் எப்படி கொலை செய்யும் ஆளாக மாறுகிறார் என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை யாருக்கும் எந்த பிரச்னையும் தராத  மனிதர். ஆனால் அவர்களுக்கு தெரியாத வாழ்க்கையில் அவர் கூலிக்கொலைகாரர். அதுவும் போதைமருந்தான ப்ளூ மாத்திரையை விற்கும் கும்பலுக்கும் காவல்துறைக்குமான சம்பந்தம் தெரியாதவர். அந்த விவகாரம் தெரிந்தபிறகு அவரது வாழ்க்கையில் இழப்புகள்தான் கூடுகின்றன.  அவருக்கு பின

உலக நாடுகள் ஆப்கானிஸ்தானில் நடத்தும் அரசியல் விளையாட்டு

படம்
  அரசியல் விளையாட்டு ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை அங்கு பெரும்பாலான மக்கள் பழங்குடிகள் என்பதால் போர் என்பது எப்போதும் அங்கு நின்றது கிடையாது. நிற்கவும் போவதில்லை. இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா என அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தானை வளைத்து போட முயன்றுகொண்டே இருக்கின்றன.இதனை நேரடியாக, மறைமுகமாக என இரண்டு வகையாகவும் கூறலாம்.  இப்போது அதைப் பற்றி சில தகவல்களைப் பார்ப்போம்.  அமெரிக்கா அமெரிக்க மக்களைப் பொறுத்தவரை இனி அவர்களின் வரிப்பணம் போருக்கு என்று செலவிடப்படாது. அந்நாட்டின் பொருளாதார நிலைமை இப்போது சரியில்லை. இந்த வகையில் அமெரிக்க அதிபர், அடுத்த ஆபரேஷன் நமக்குத்தான் என்று சொல்லி பின்வாங்கியது நல்ல விஷயம்தான். அமெரிக்காவை தளமாக கொண்டு தீவிரவாதிகள் இயங்கிய நிலை இனி இருக்காது என அமெரிக்கா நம்புகிறது. இதனை ஆப்கானிஸ்தானை சுற்றியுள்ள நாடுகளே கூட நம்பாது. உலகின் சூப்பர் போலீஸ் நாடான அமெரிக்கா, இதனை நம்புகிறது. அதோடு அதன் பெருமைமிக்க அந்தஸ்து இருபது ஆண்டு போரில் தோற்று பின்வாங்கியதோடு முடிவுக்கு வந்துவிட்டது. பின்லேடனை அழித்தது மட்டுமே சாதனை என அமெரிக்கா சொல்லிக்கொள்ளலாம்.

மைக்ரோடோஸ் அளவில் எல்எஸ்டி பயன்படுத்தலாமா?

படம்
  ஹெராயின், கஞ்சா, கோகைன் ஆகியவற்றை மைக்ரோடோஸ் அளவில் கொஞ்சமாக எடுத்துக்கொண்டால் மனநிலை மகிழ்ச்சியாகும், உற்சாகம், ஊக்கம் கிடைக்கும் என பலரும் பேசிவருகிறார்கள். உலகில் பல்வேறு நாடுகளில் போதைப்பொருட்களை சட்டரீதியாக பயன்படுத்தவும் தடை நீங்கி வருகிறது. உண்மையில் குறிப்பிட்டளவு போதைப்பொருட்களை பயன்படுத்தினால்  நன்மை கிடைக்குமா என்று  பார்ப்போம்.  1960களில் சிலோசைபின் என்ற போதைப்பொருள், எல்எஸ்டி ஆகியவை ஹிப்பிகளிடையே பிரபலமாக இருந்தன. உளவியலாளர் டிமோத்தி டியரி என்ற உளவியல் ஆய்வாளர், ஹார்வர்டில் பணிபுரிந்து வந்தார். இவரது தனது மாணவர்களுக்கு 2 ஆண்டுகளாக சிலோசைபின் மருந்தைக்  கொடுத்து சோதித்து வந்தார்.  எல்எஸ்டியை மைக்ரோடோஸாக பயன்படுத்தினால் அதன் 6 முதல் 25 மைக்ரோகிராமாக இருக்கவேண்டும். இதனை முழுமையான அளவில் பயன்படுத்தினால் 100 முதல் 150 மைக்ரோகிராம் அளவில் பயன்படுத்தலாம்.  ரெட்டிட் சேனலில் மைக்ரோடோஸ் பயன்படுத்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,61,000. அமெரிக்க அரசின் எப்டிஏ அங்கீகாரம் இல்லாமல் 9 கிராம் எல்எஸ்டி வைத்திருந்தால்  அவருக்கு ஆயிரம் டாலர் அபராதம் கட்டவேண்டும். இல்லையென்றால் ஓராண்டு சிற

அம்னீசியா பலவீனத்துடன் துரோகத்தை களையெடுக்கும் குற்றவியல் அதிகாரி! ரீபார்ன் - சீன தொடர்

படம்
            ரீபார்ன் சீனத்தொடர் 28 எபிசோடுகள் நகரில் உள்ள புகழ்பெற்ற குற்றக்குழுவை ஒழித்துக்கட்டும் முயற்சியில் சிலர் செய்யும் துரோகத்தால் தனது சகாக்களை போலீஸ் அதிகாரி இழக்கிறார் . உண்மையில் அந்த துரோகத்தின் பின்னணி என்ன என்பதை கண்டுபிடித்து அவர்களை அழிப்பதே கதை . பொதுவாக உடலில் நோய் , ஊனம் கொண்ட நாயகர்களை தொடரில் படத்தில் நடிக்கவைப்பது பார்வையாளர்களிடையே எப்படி இவர் வெல்வார் என எதிர்பார்ப்பை உருவாக்கும் . இந்த தொடரில் நாயகனுக்கு அம்னீசியா பிரச்னை உள்ளது . தலையில் தோட்டா பாய்ந்து அதன் சில்லுகள் மூளையில் தேங்கி நிற்கின்றன . ஆபரேஷன் கூட செய்யமுடியாத நிலை . முழங்காலில் தோட்டா பாய்ந்ததில் தினசரி காலில் பதினைந்து மில்லி சீழை அகற்றிக்கொண்டே இருக்கவேண்டும் . இந்த சிக்கல்களோடு குற்றவியல் பிரிவின் துணைத்தலைவராக குழுவை வழிநடத்தும் பொறுப்பு இருக்கிறது . என்கவுண்டர் சம்பவத்தில் தனது அத்தனை சகாக்களையும் பலி கொடுத்துவிட்டு கோமாவிலிருந்து எழுந்து வருபவரை பலரும் கைதட்டி வரவேற்று பதவி உயர்வு கொடுக்கின்றனர் . அதில் உரையாற்ற சொல்லும்போது , தனது விருதை து