இடுகைகள்

சீர்திருத்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அய்யா வைகுண்டரின் சமூக சீர்திருத்த செயல்பாடு - மாட்டுச்சாண மூளைகளின் அவதூறு ஏன்?

படம்
  மத நல்லிணக்கத்தை உடைக்கும் மாட்டுச்சாண மூளைகள் மக்களின் மனதில் அன்பை விதைப்பதை விட வெறுப்பை வளர்ப்பது எளிது, அதிலும், உங்கள் வாழ்க்கை நாசமாக போனதற்கு காரணம், இந்த சாதிக்காரன், மதக்காரன் என்ற பழிபோட்டுவிட்டு எளிதாக அந்த சண்டையில் லாபம் பார்க்கலாம். காவிக்கட்சி ஆட்சியில் உள்ள இடங்களில் கலவரங்கள், புல்டோசர் நீதி, பலாத்காரம், மானபங்கம், தீண்டாமை இதெல்லாம் சகஜம். வேதகால இந்தியா, புதிய இந்தியாவாக மெதுவாக உருவாக்கப்பட்டு வருகிறது. குற்றங்கள் இருப்பது புதிதல்ல. ஏற்கெனவே இவையெல்லாம் சிறியளவில் அங்கு இருப்பவைதான். பிழைப்புவாதிகள், அதை தூண்டிவிட்டு தேர்தலில் வென்று வருகிறார்கள். காவிக்கட்சி, ஆட்சியில் இல்லாத இடங்களில் கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதில் முக்கியமானது, பன்மைத்துவ சமூகத்தை, மதங்களை ஒற்றைத்தன்மை கொண்டதாக, ஒரே மதமாக மாற்றுவது. இதற்கு காவிக்கட்சி பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்துகிறது. அதில் ஒன்றுதான், ஆளுநர் என்பது.  அண்மையில் சமூக சீர்திருத்தவாதியான அய்யா வைகுண்டரின் 192ஆவது பிறந்தநாள் விழாவில், அழியும் சனாதன தர்மத்தை காக்க மறுபிறப்பு எடுத்து வந்த விஷ

இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பதன் காரணம்.....

படம்
      இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பது ஏன்? காலநிலை மாற்றம் மற்றும் மத்திய, மாநில அரசின் விவசாய கொள்கைகளால் வேளாண்மை பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் நிதிச்சுமை அதிகரித்து வருகிறது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத பல நூறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2022ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலத்தின், மராத்வாடா பகுதியில் மட்டும் அறுநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இதுபற்றிய தகவலை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களிலுள்ள பயிர்கள் அதீத மழைப்பொழிவால் அழிந்ததால், பெருமளவு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக காரணம் கூறப்படுகிறது. வேளாண்மை வல்லுநர்கள், தற்கொலையால் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள். 2021ஆம் ஆண்டு வரையில் அடுத்தடுத்து ஆட்சியமைத்த மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தன. ஆனாலும் கூட மராத்வாடாவின் எட்டு மாவட்டங்களில் தற்கொலை செய்து இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 80

இனவெறிக்கு எதிராகவும், சமூகநீதிக்காகவும் உழைத்தவர் - மிச்செல் பாச்லெட்

படம்
      1,000 × 667             மிச்செல் பாச்லெட் சிலி நாட்டில் இரண்டு முறை அதிபராக இருந்து பல்வேறு சீர்திருத்தங்கள் செய்தவர். அண்மையில் ஐ.நா அமைபின் மனித உரிமை அமைப்பில் இருந்து பதவி ஓய்வு பெற்றார். தனது பணிக்காலம் முடியும் முன்னர் சீனாவின் ஷின்ஜியாங் நகரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களைப் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மிச்செலின் பதவிக்காலம் அதிகாரப்பூர்வமாக நிறைவு பெறும் சில நிமிடங்கள் முன்னதாகத்தான் அவர் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகிறது. மிசெல் சிலி நாட்டின் அரசியல்வாதி என்பதோடு, எதிர்ப்புகளைப் பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்படாமல் செயல்படும் அதிகாரியும். கூட. அப்படித்தான் 2020ஆம் ஆண்டு இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மக்கள் அரசால் பாகுபாடாக பிரிக்கப்பட்டு அவர்கள் துயரப்படக்கூடாது என்ற அக்கறையும் கரிசனையும் இருந்ததே வழக்கு தொடுக்க காரணம். இதற்கு இந்திய அரசியல்வாதிகள் இதெல்லாம் எங்கள் உள்நாட்டு விவகாரம் என சப்பைக்கட்டு கட்டி பேசினார்கள். மி

திரைப்பட இயக்குநர் எடுக்கும் புனர்ஜென்ம அவதாரம்! ஷியாம் சிங்கா ராய் - தெலுங்கு

படம்
  ஷியாம் சிங்கா ராய் -தெலுங்கு ஷியாம் சிங்கா ராய் தெலுங்கு ராகுல் சாங்கிருத்தியன் சானு வர்க்கீஸ் மிக்கி ஜே மேயர்  நாளைய இயக்குநராகும் ஆசையில் உள்ளவர், வாசு. எப்படியோ தனது குறும்படத்திற்கு கீர்த்தி என்று வெளிநாடு சென்று படிக்கும் ஆசையில் உள்ள பெண்ணை சரிகட்டி நடிக்க வைத்துவிடுகிறார். பிறகு கிடைக்கும் திரைப்பட வாய்ப்பிலும் வெல்கிறார். அந்த  படத்தை இந்தி மொழியில் உருவாக்க முயலும்போது தான் பிரச்னை தொடங்குகிறது. வாசு மீது கொல்கத்தாவை சேர்ந்த எஸ்ஆர் பதிப்பகம் கதை திருட்டு என வழக்கு போடுகிறது.  உண்மையில் வாசு கதையை திருடினாரா இல்லையா என்பதுதான் படமே... படம் புனர்ஜென்மம், ஹிப்னோதெரபி என நிறைய விஷயங்களைப் பேசுகிறது. எல்லாவற்றையும் விட படத்தில் கவருவது கல்கத்தாவில் சீர்திருத்தக்காரராக வரும் ராய் தான். அவர் பேசும் விஷயங்கள் அக்காலத்திற்கு மட்டுமல்ல, இப்போதும் முக்கியமானதாக இருக்கிறது. இப்போதும் தொன்மை இந்தியாவை நோக்கி செல்வதால் இப்படிப்பட்ட ராய்கள் தேவைப்படலாம்.  படத்தின் கதை நவீன காலம் 2021, 1969 என இரண்டு காலகட்டமாக உள்ளது. அதற்கேற்ப படக்குழு உழைத்திருக்கிறார்கள்.  படத்தை இரண்டு பாத்திரங்களிலும்

வலிமையான சீர்திருத்தங்களை முன்னெடுத்த இந்திரா காந்தி! - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  இந்திராகாந்தி பதில் சொல்லுங்க ப்ரோ? இந்திராகாந்தியை ஏன் வலிமையான தலைவர் என்று சொல்லுகிறார்கள்? இந்திரா பிரியதர்ஷின் காந்தியின் குடும்பமே, அரசியலில் ஈடுபட்டவர்கள்தான். அவரது தாத்தா மோதிலால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இந்தியாவின் முதல் பிரதமரான நேருவும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர். மனைவி கமலா மரணப்படுக்கையில் இருக்கும்போது கூட மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்து வெளிவரலாம் என்ற வாய்ப்பையும் மறுத்தவர். தனது மகள் இந்திராவுக்கு அவர் எழுதிய கடிதங்கள் முக்கியமானவை. அதில் உலக வரலாறையே கூறியிருப்பார்.  1917ஆம் ஆண்டு நவ.19 அன்று இந்திரா பிறந்தார். சிறுவயதிலிருந்தே இந்தியாவில் நடைபெறும் விஷயங்களை அவர் கவனித்து வந்தார். தனது ஐந்தாவது வயதில் மேட் இன் இங்கிலாந்து தயாரிப்பு பொம்மையை நெருப்பிட்டு எரித்தார். 1921ஆம் ஆண்டான அன்று, சுதேசி இயக்கம் தீவிரமாக இருந்தது. தனது பனிரெண்டாவது வயதில் வானர சேனை ஒன்றைத் தொடங்கி, அதில் மாணவர்களை இணைத்தார். இவர்களின் வேலை, சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கு ரகசிய செய்திகளை கொண்டுபோய் கொடுப்பது, நோட்டீஸ்களை சுவரில் ஒட்டுவது, தேசியக்கொடிகளை தயாரித

மாணவர்களை மேம்படுத்தும் கல்வி சீர்திருத்தங்கள்!

படம்
  மாணவர்களை மேம்படுத்தும்  கல்வி சீர்திருத்தங்கள்!  ஆந்திரப் பிரதேச அரசு கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை, மேம்பாடுகளை் செய்து வருகிறது.   ஆந்திர அரசு, மாநிலத்திலுள்ள 62 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 80 லட்சம் மாணவர்களுக்கான (தனியார் பள்ளி உட்பட) கல்வியில் கவனம் செலுத்தி பிரமிக்க வைக்கிறது. பள்ளிக்கான பாடத்திட்டங்களை உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களோடு ஆலோசித்து உருவாக்குவது, பயிற்றுமொழியை ஆங்கிலமாக்குவது, அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, மதிய உணவுத்திட்டத்தை விரிவுபடுத்துவது என பரபரப்பாக ஆந்திர அரசு செயற்பட்டு வருகிறது.  பயிற்றுமொழியாக தெலுங்கிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறுவது அங்கு, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இம்முயற்சி மாணவர்கள் உலகளவில் தம் அறிவை விரிவுப்படுத்திக்கொள்ள உதவும் என்கிறது ஆந்திர அரசு. ”அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக உருவாக்குவதே அரசின் லட்சியம். புதிய சீர்திருத்தங்கள் மூலம் இளைஞர்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் எளிதாக கிடைக்கும்” என்கிறார் ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சரான அடிமுலப்பு சுரேஷ்.  ஆந்திர அரசு, மாணவர்களுக்கு ம

சீர்திருத்தங்கள் தேவை என முதலில் அறிக்கை வெளியிட்டது விவசாய சங்கங்கள்தான்! - பியூஷ் கோயல்

படம்
          பியூஷ் கோயல்- indian express            உணவு மற்றும் வாடிக்கையாளர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு எந்த உத்தரவாதமும் தராத நிலையில் விவசாய சட்டம் எப்படி அவர்களுக்கு அதிகளவு வருமானத்தை உருவாக்கித்தரும் ? தனியாரிடம் பொருட்களை விற்கவேண்டும் என்ற அவசியம் இல்லை . அரசிடமும் கூட குறைந்த பட்ச கொள்முதல் விலைக்குட்பட்டு பொருட்களை விற்கலாம் . தனியார் நிறுவனங்களோடு அரசும் விற்பனையில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வசீகரமான விலைகளை கொடுத்து பொருட்களை விற்க வைக்கலாம் . விவசாயிகள் மின்சார மசோதாவையும் கூட திரும்ப பெற கூறிவருகிறார்களே ? அவர்கள் கூறும் பல்வேறு விஷயங்களை அரசு கவனத்துடன் கேட்க தயாராகவே உள்ளது . அவர்கள் திரும்ப பெறும் மின்சார மசோதா இன்னும் தயாரிப்பு நிலையில்தான் உள்ளது . சட்டமாக இன்னும் மக்களவையில் நிறைவேறவில்லை . இந்த சட்டம் அமலானாலும் கூட விவசாயிகள் தாங்கள் செலுத்தும் மின்சாரக்கட்டணம் பெரியளவில் மாற்றப்படமாட்டாது . அறுவடைக்கழிவுகளை விவசாயிகள் எரித்தால் அவர

பட்ஜெட்டை தீர்மானிக்கும் நிதி அமைச்சக குழு! - ஐவர் குழு இவர்கள்தான்

படம்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2020 - தீர்மானிப்பவர்கள் இவர்கள்தான். எதிர்வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலாகவிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை இரண்டாம் முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கையை உருவாக்குவதில் முக்கியமான பங்களிப்பை அளிக்கும் அதிகாரிகள் சிலரைப் பார்ப்போம். ராஜீவ்குமார்,  நிதித்துறை செயலர்  நிதியமைச்சகத்தின் முக்கியமான அதிகாரி. பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்கும் சர்ச்சைக்குரிய சீர்த்திருத்தங்களை உருவாக்கி முன்மொழிந்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. வாராக்கடன் பாதிப்பைக் குறைத்து வங்கிகள் தொழில்துறைக்கு கடன்களை வழங்குவதற்கான முயற்சிகளுக்கான பரிந்துரைகளை இவர் நிதி அமைச்சருக்கு வழங்குகிறார். வங்கித்துறையின் பின்னணியில் இருந்து கடன்களை வழங்க வைத்து மக்களின் நுகர்வு மூலம் பொருளாதாரத்தை மீட்கும் முக்கிய முயற்சியை இவர் செய்து வருகிறார். அதானு சக்ரபொர்த்தி,  பொருளாதார விவகாரங்கள் துறை செயலர். பொதுத்துறை பங்குகளை விற்கும் திறனில் அதானு வல்லுநர். மத்திய அரசு 1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை இ