தொடுகிறேன்.. வருடுகிறாய்...
தொடுகிறேன்.. வருடுகிறாய்...
எஸ் ஜே சூர்யா போல செய்தாலும் சரி. அப்படி இல்லையென்றாலும் சரி. அடிப்படையில் ஒருவரைத் தொட்டாலே, அவரது தோலின் மென்மை, கடுமை, காய்த்துப்போனது, கன்றிப்போனதை அறியமுடியும். தொடும்போது கைகளிலுள்ள உணர்விகள், அத்தகவலை மூளைக்கு கொண்டு செல்கின்றன. இதற்கு மோட்டார் நியூரான்கள் உதவுகின்றன. அடுத்து என்ன செய்யலாம் என்பதை மூளை மோட்டார் நியூரானுக்கு கூறுகிறது. இந்த தகவல்கள் தசை வழியாக கடத்தப்படுகின்றன.
ஒரு வயது குழந்தை நீருக்கடியில் விடப்பட்டால், அதன் உடலிலுள்ள தசைகள் தானியங்கியாக இயங்கி நுரையீரலுக்குச் செல்லும் நீரைத் தடுக்க முயல்கின்றன. இதை ரெஃப்ளக்ஸ் செயல்பாடு என வரையறுக்கலாம்.
நம்முடைய தோலில் வலியை உணரும் நியூரான்கள் 3 ட்ரில்லியன்களுக்கும் மேல் உண்டு.
மருந்தகங்களில் வாங்கி சாப்பிடும் வலிநிவாரணிகள் தனி. அவையெல்லாம் இன்றியே உடலே வலிநிவாரணி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதை நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதுதான் எண்டார்பின்.
ஒரு பொருளைத் தொட்டால் அது எப்படியிருக்கிறது? மென்மையா, வன்மையான, வழுவழுப்பா, வெப்பமாகவா என தொடுதல் உணர்விகள் மூலம் மூளை அறிகிறது. அதற்கு ஏற்ப அடுத்தகட்ட வேலைகள் நடைபெறுகின்றன.
ஒலியே என் வாசல் வந்தாய்...
காது. அதன் வழியாகத்தான் நாம் ஒலிகளைக் கேட்கிறோம். அதுவே முக்கியமான உறுப்பு கூட. பயணங்களில் காற்று காதுக்குள் வேகமாக புகும்போது ஒருவருக்கு குமட்டல், வாந்தி ஏற்படும். அதைத் தடுக்க காதுக்குள் புகும் காற்றைத் தடுத்தாலே போதுமானது.
காது மூன்று பகுதிகளைக் கொண்டது. ஒன்று,வெளிப்பகுதி, நடுப்பகுதி, உள்பகுதி.
காதில், மெழுகு போன்ற திரவத்தை உருவாக்கும் சுரப்பிகள் 4 ஆயிரம் என்ற அளவில் இயங்குகின்றன. காதிற்குள் செல்லும் தூசு துப்புகளை திரவத்தில் மூழ்கடித்து அதை வெளியேற்றுவதே மெழுகு போன்ற திரவச்சுரப்பிகளின் வேலை. பொதுவாக நீங்கள் காதில் எதையும் நுழைக்க வேண்டியதில்லை. இசை கேட்பது, அல்லது ஒலிகளைக் கேட்டே வேலை செய்கிறீர்கள் என்றால் காதில் சுரக்கும் திரவம் அதிகரிக்கும்.அந்த மெழுகு அதிகமானால், காதில் சத்தம் வரும். அப்போது காதை சுத்தம் செய்தால் போதுமானது. அதற்குள், தேவையில்லாமல் குச்சி, கபடா, கத்தி என எந்த பொருளையும் நுழைக்க தேவையில்லை. எண்ணெய் போன்றவற்றையும் விட வேண்டியதில்லை.
மனிதர்களால் 1400 ஒலிகளை இனம் கண்டு அறியமுடியும்.
காது கேட்கும் திறனை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி உதவுகிறது. செவித்திறன் குறைந்தவர்களுக்கு இது சரி. பிறர் சைகை மொழியைப் பயன்படுத்தலாம். பெரும்பாலும் காது கேட்கும் திறன் அற்றவர்களுக்கு, பேசும் திறனும் இருக்காது.
காதின் நடுப்பகுதியில், மூன்று மெல்லிய குருத்தெலும்புகள் உள்ளன.

கருத்துகள்
கருத்துரையிடுக