இடுகைகள்

ஆனந்த் எல் ராய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆணவக்கொலையால் மீளமுடியாத கற்பனையில் சிக்கும் மனைவியை மீட்கும் கணவன்! அட்ரங்கி ரே - ஆனந்த் எல் ராய்

படம்
  அட்ரங்கி ரே - கலாட்டா கல்யாணம் அட்ரங்கி ரே - கலாட்டா கல்யாணம் ஆனந்த் எல் ராய் ஏ.ஆர். ரஹ்மான் டிஸ்னி  கட்டாய கல்யாணம் செய்து வைக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த விசு, தனது மனைவியை மெல்ல விரும்பத் தொடங்குகிறான். ஆனால் அவள் வேறு ஒருவரை விரும்புகிறாள். அதுயார், அந்த காதலை நிறைவேற்ற விசு உதவினானா என்பதுதான் படத்தின் கதை.  பீகார் பையன் வேண்டாம் வேறு யாராவது ஒரு பையனை பிடித்து வைத்து கல்யாணம் பண்ணிக் கொடுத்துடலாம் என குடும்பமே முடிவு செய்து ரிங்குவை தயார் செய்கிறார்கள். உணவில் மயக்க மருந்து கொடுத்து அவளை கல்யாணத்திற்கு தயார்படுத்துகிறார்கள். அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளையாக மருத்துவ மாணவர் மதுசூதனை பார்க்கிறார்கள். ஆனால் இருட்டில் தவறுதலாக விசு(தனுஷ்) பிடித்துக்கொண்டு வந்து கல்யாணம் செய்விக்கிறார்கள். மணப்பெண்ணுக்கு மயக்க மருந்து என்றால் மாப்பிள்ளைக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கிறார்கள். இதனால அவர் சிரித்துக்கொண்டே வேறுவழியின்றி கல்யாணம் செய்கிறார்.  இன்னொரு விஷயம், மருத்துவ மாணவராக விசு தனது துறைத் தலைவரின் மகளை கல்யாணம் செய்யும் நிலையில் இருக்கிறார். இதற்கான நிச்சயம் ஒருவாரத்தில் நடக்கவிருக்கும்போ

சூப்பர் ஜீரோ ஹீரோவான கதை!

படம்
studioflicks ஜீரோ ஆனந்த் எல் ராய் மனு ஆனந்த் அஜய் - அதுல் தனிஷ்க் பக்ஷி Steemit சூப்பர் ஜீரோவாக இருப்பவர் எப்படி பலருக்கும் இன்ஸ்பிரேஷன் மனிதராக மாறுகிறார், சூழல்கள் எப்படி அவரை மாற்றுகின்றன என்பதுதான் ஜீரோவின் கதை. மீரட்டில் வாழும்  ஜெகஜால குள்ள மனிதர். தன் அப்பாவின் தவறினால் மரபணு பிரச்னை ஏற்பட்டுவிட்டது என புகார் சொல்லி அப்பாவிடம் அடிவாங்குவதில் தொடங்குகிறது ஷாருக்கானின் நடிப்பு. சூப்பர் ஸ்டார் அண்டர்வேரோடு தெருவில் ஓடுவதை நினைத்துப் பாருங்கள். அசரவேயில்லை. அப்படியே ஷாருக்கான் செய்கிறார். அவருக்கு உயரம் கூட பிரச்னையில்லை. தனக்கு காதலி தேவை, குறிப்பாக மனைவி என தேடுதலில் இருக்கும்போது வானியலாளர் ஆஃபியா பிந்தரை சந்திக்கிறார். செரிபெரல் பால்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணை நடனம், இயல்பான பேச்சு என பேசி படுக்கை வரை வந்துவிடுகிறார். ஆனால் அப்போது பபிதா குமாரி மீதான காதல் தலைதூக்க, கல்யாணத்தைக் கூட தூக்கிப்போட்டுவிட்டு  பபிதாகுமாரியிடம் வந்துவிடுகிறார். அவர், தன் காதலனை இழந்த கோபதாபத்தில் இருக்கிறார். இருவரும் உண்மையான அன்பு என்றால் என்ன என விவாதம் நடத்துகின்றனர்.