இடுகைகள்

இட ஒதுக்கீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியர்களுக்கு முதல் முன்னுரிமை சாதி, துணைச்சாதிகள்தான், பிறகுதான் நாடு!

படம்
பிரிட்டிஷார் இந்தியாவை ஆளும்போது, ஒரே அரசாக மக்களை ஒன்றாக வைத்திருந்தனர். அவர்கள் 1947ஆம் ஆண்டு வெளியேறியவுடன் நாடு இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாக பிரிந்துவிட்டது. நாகா பழங்குடிகளுக்கு தனி மாநிலம் வழங்கப்பட்டது. தனி மாநில கோரிக்கையை பலரும் கேட்டு வருகிறார்கள். சீக்கியர்கள், காலிஸ்தான் எனும் தனி நாட்டுக்காக போராடி வருகிறார்கள். இந்துமதம், இந்தியர்களுக்கு இடையே பிரிவினையை உருவாக்குகிறது. எனவே நாடு, பல்வேறு பிரிவு, துணைப்பிரிவுகளாக பிரிந்து வருகிறது. இந்தியாவில் இப்போது இந்தியர்கள் என யாருமே இல்லை. இந்தியர்களுக்கு முதல் முன்னுரிமை சாதி, துணைச்சாதிதான். இதற்கெல்லாம் பிறகுதான் நாடு வருகிறது. இந்தியாவுக்கும் வெளிநாட்டினர் இதை எளிதாக அறிந்துகொள்ள முடியும். அமெரிக்காவில் உள்ள இந்துகள் கூட தீண்டாமை, சாதி விதிகள், பிரிவினைகளை கடைபிடிக்கிறார்கள். இந்துகள் அவர்கள் போகும் இடங்களிலெல்லாம் அவர்களது சாதியை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவர்களுக்கு நடக்கும் அநீதி, ஆரியர்கள் தீண்டத்தகாதவர்களுக்கு செய்வதை ஒத்தது. 1947ஆம் ஆண்டுக்குப் பிறகு முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்க...

பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் - சமூகநீதி நாள்

படம்
               சேரன்மாதேவியில் வ வே சு அய்யர் நடத்திய குருகுலம் மாணவர்களிடையே ஏற்படுத்திய பாதிப்பு சாதி பேதத்தை ஏற்படுத்தியது குருகுலத்தை ஒழிக்க பெரியார் கையாண்ட முறை என்ன? தமிழ் மக்கள் அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தச் செய்தார். காங்கிரசிலிருந்து பெரியார் விலக காரணம் வகுப்புவாரி உரிமைக் கொள்கையை ஏற்காமை வைக்கம் போராட்டம் என்பது கோயிலைச் சுற்றி இருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்க உரிமை வேண்டி நடத்தப்பட்ட போராட்டம் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்கள் கண்ணம்மாள் - நாகம்மையார் எங்களது நோக்கம் பதவிக்கோ - பெருமைக்கோ ஆட்சி பீடத்தில் அமரவோ அல்ல. காங்கிரசாரே ஆளட்டும். அவர்களே சட்டசபைக்குப் போகட்டும். ஆனால், வடநாட்டானுக்கு அடிமைப்பட்டிருந்தால் நாங்கள் அவ்வாட்சியை எதிர்த்தே தீருவோம் - தந்தை பெரியார் எப்பொழுது ஒருவனுக்கு அவனுக்கு என்று தனி மதம், தனி சாதி, தனி வகுப்பு என்பதாக பிரிக்கப்பட்ட பின்பு அவன் தனது மதம், தனது சாதி, தனது வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதோ, அயோக்கியத்தனமோ இருக்க முடியும்? -குடி அரசு 8.11.193...

மொழி,சாதி, மத, இன பாகுபாடில்லாத ஆட்சித்தலைவரைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்!

படம்
         இனிப்பு மிட்டாயும் பள்ளி புத்தகங்களும்!  வசந்தகாலத்தில் சில பூக்கள் மலர்வதைப்போலவே, இந்தியாவின் அரசியல் தேர்தல் காலங்களில் மட்டுமே உண்மையான நிறத்துடன் உயிர்ப்பு பெறுகிறது. இந்தியர்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்று அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட அபத்தமான, சர்ச்சைக்குரிய (அ) கொள்கைகளற்ற ஆழ்ந்த அகன்ற அறிவோடு சராசரி வாக்காளனின் மனதை எப்படி வசீகரம் செய்வது என்பது போன்ற விஷயங்களை 2012 உ.பி அரசியல் கட்சிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பகுத்தறிவு, நவீன சிந்தனைமுறைகளைக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் கூட புராதன, பின்னோக்கிய அளவீடுகளைப் பின்பற்றி வாக்காளர் சமூகத்தை தவறான செயல்பாட்டிற்கு பழக்குகிறார்கள்.  அவர்கள் இதனை ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் செய்கிறார்கள் - தேர்தலில் வெற்றிக்காக மட்டுமே. நாடு மற்றும் சமூகத்தின் மீதான தாக்கத்தை நினைவு கொள்ள (அ) மறக்க கால நோக்கில் ஏற்படுத்தும் அளவு, பதவிக்கு அவர்கள் தகுதி பெற வெற்றி உண்மையில் மிக அவசியம்தான். இரண்டு உதாரணங்களை எடுத்துக்கொள்வோம். பெரும் கட்சிகளைச் சார்ந்தவ...

பொதுவாழ்வில் பெண்களை பங்கெடுக்க கற்றுத்தரும் முன்னோடிப் பெண்கள்!

படம்
  ஏஞ்சலிகா அரிபம், அரசியல் செயல்பாட்டாளர் உ.பி. தேர்தலில் பாஜக கட்சி வெல்வதற்கு பெண்கள் தான் முக்கியமான காரணம் என தலைமை மக்கள் சேவகர் திரு. மோடி கூறினார். இப்படி ஆண்கள் சொன்னாலும் உண்மையில் பெண்களுக்கான அரசியல் பங்கேற்பை அதிகளவில் அனுமதிப்பதில்லை. ஆனால் பெண்கள் அதற்காகவெல்லாம் விட்டுக்கொடுக்கவில்லை. அவர்கள் இதற்கென தனி அமைப்பை தொடங்கி பெண்களுக்கும், ஆர்வமுள்ளவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்கள். இதைப்பற்றியதுதான் இக்கட்டுரை.  ஏஞ்செலிகா அரிபம், தேசிய கட்சி ஒன்றில் பெண்கள் பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் தேர்தலில் போட்டியிட இடம் கேட்டுள்ளார். ஆனால் கட்சி அவருக்கு இடம் தராமல் மனதில் மட்டும் இடம் தந்துள்ளது. அதற்காக முதலில் வருத்தப்பட்டாலும், இனி இப்படியே இருந்தால் வேலைக்காகாது என முடிவெடுத்து, பெண்களை அரசியலுக்கு பயிற்றுவிக்கும் ஃபெம்மே ஃபர்ஸ்ட் Femme first என்ற அமைப்பைத் தொடங்கினார். இத்தனைக்கும் அரிபம் பலருக்கும் அறிமுகமாக பெண் என்று கூட யாரும் சொல்லமுடியாது. அவருக்கு தேர்தலில் போட்டியிட கட்சி இடம் மறுத்தபோதுதான் போர்ப்ஸ் இதழில் 30 அண்டர் 30 என்ற பட்டியலில் இடம்பெற்றிருந்...

சாதிரீதியான கணக்கெடுப்பு பயன்களை கொடுக்குமா?

படம்
  மத்திய அரசு சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை எடுக்க வேண்டுமென பீகாரின் நிதிஷ்குமார் குரல் எழுப்பினார். ஆனால் ஒன்றிய அரசு அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. செப்டம்பர் 23 அன்று மகாராஷ்டிர அரசு இதுபற்றி வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. அதாவது,ஒன்றிய அரசு சாதிரீதியான கணக்கெடுப்பை எடுக்க வேண்டுமென மகாராஷ்டிர மாநில அரசு கோரியுள்ளது 2011ஆம் ஆண்டு சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இதுபற்றிய தகவல்கள் வெளிப்படையாக மக்களுக்கு அளிக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த ஜனதாதளம் கட்சி ஒன்றிய அரசு தனது முடிவை பரிசீலனை செய்யவேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கு ஒடிஷாவின் நவீன் பட்நாயக்கும், ஜார்க்கண்டின் ஹேமந்த் சோரன் ஆகியோர் இதனை ஆதரிக்கின்றனர். பாஜக சாதி ரீதியான கணக்கெடுப்பிற்கு முழுக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாநில கட்சிகளின் குரல்களை ஆதரிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.  2011ஆம் ஆண்டு சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் அதுதொடர்பான விவரங்களை ஏன் தர முடியாது, நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடக்கூடாது, சாதிரீதியான கணக்கெடுப்புகளை நடத்துவதற்கான கட்டமைப்பு அர...

அரசு எழுப்பும் தீண்டாமைச்சுவர்! - பணிகளில் காட்டப்படும் தீண்டாமை!

படம்
TNIE அரசு எழுப்பும் தீண்டாமைச்சுவர்!  கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. முகேஷ்குமார் தொடர்ந்த வழக்கில் உத்தர்காண்ட் அரசு, பட்டியலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வு வழங்குவது அடிப்படை உரிமை கிடையாது என்று கூறியுள்ளது. அரசியலமைபச இந்த வழக்கு மட்டுமல்ல; இந்தியாவில் பல்வேறு பட்டியலினத்தவர்களுக்கு அரசு இதுபோன்ற அநீதியை இழைக்கிறது. இது எப்படி என்றால், ஆதி திராவிடர்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள் அரசு பதவியை வகிக்கிறார்கள். அவர்கள் பணி ஓய்வு வரை அவர்களுக்கான பதவி பயன்களை கொடுக்க மறுக்கிறார்கள் இதில் ஊதிய உயர்வு, போனஸ் தொகை போன்றவையும் உள்ளடங்கும். பணி ஓய்வு பெறும்போது, பதவி உயர்வு கடிதம், அதுவரை நிறுத்தியிருந்த ஊதிய தொகை ஆகியவற்றை அரசு வழங்கி மன உளைச்சலை உருவாக்கி வருகிறது. பஞ்சாபைச் சேர்ந்த பொதுநிர்வாகத்துறை ஊழியர் காஜல். இவருக்கு பணி ஓய்வு பெற்ற நாளில் பதவி உயர்வு கடிதம் கிடைத்துள்ளது. அதில் மூத்த பொறியியலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கான பணிநாட்கள் முடிந்துவிட்டன. அவர் வேலை செய்தது சூப்பரிடெண்டாக, ஆனா...

எந்த ரத்தம் உசத்தி?

படம்
மும்பையில் டாக்டர் பாயல் தத்வி, மூத்த மாணவிகளால் அவமானப்படுத்தப்பட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி எப்போதும்போல அரசால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. ஏனெனில் சாதிமுறையை ஆதரிக்கும் அரசு, அதனைப் பயன்படுத்தியே தேர்தலிலும் வென்று அதிகாரத்தைப் பிடித்திருக்கிறது. அரசு எப்படி இதில் மாணவர்களுக்கு உதவப்போகிறது? கல்லூரி வளாகத்தை அனைவருக்குமானதாக எப்படி மாற்றுவது என சுக்காதோ தோரட் கூறுகிறார். தீண்டாமை பாராட்டுவது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்து நோட்டீஸ் ஓட்டுவதோடு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். பேசும் முறை, செயல்பாடுகள் ஆகியவற்றுக்கான நடத்தை நெறிமுறைகளை வகுக்கவேண்டும். புகார் தரும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான விசாரணையில் ஆசிரியர்களும் ஆர்வம் காட்டி உதவ வேண்டும். இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒதுக்கி வைக்க கூடாது. தீண்டாமையை தவறு என வலியுறுத்தும் பாடங்களை பள்ளிகளிலேயே  உருவாக்கி பயிற்றுவிக்க வேண்டும். உயர்கல்வி நிலையங்களில் மூத்த மாணவர்கள் உங்களின் பெயர்களை கவனிப்பார்கள். அதில் ஜாதி இருந்தால் அதிலேயே புரிந்துகொண்டு உங்களை அந்த ஜாதிக்கேற்றபடி தரத்தில் நடத்துவார்...