கொலைகார மகனைப் பற்றி புரிந்துகொள்ளத் தொடங்கிய தந்தையின் கதை!
ஒருவரின் மனதில் பிறர் மீது ஏற்படும் வன்மம் கொலை செய்வதற்கு ஏற்றதாக எப்படி மாறுகிறது என்பதை உளவியலாளர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். அதற்கென சில கோட்பாடுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். கற்பனை தனக்குப் பிடித்தது போல கற்பனைகளை ஒருவர் கற்பனை செய்துகொள்வது, இதன் மூலம் மகிழ்ச்சி அடைவது. தனிமையில் இருப்பது நினைவுகளில் இருந்து தனிமையில் இருப்பது. தனக்கு பிடிக்காத உணர்வுகள், நினைவுகளில் இருந்து ஒருவர் தனியாக இருப்பது. அதுவேறு இதுவேறு இரட்டை சிந்தனைகள் என்று சொல்வார்கள். தனது சிந்தனை, ஆசை, கோபம் என அனைத்தையும் தனித்தனியே பிரித்து வைத்துக்கொண்டு வாழ்வது. எப்போதும் பகல் கனவு கண்டுகொண்டே இருப்பது, தனியாக இருப்பது, கூச்ச சுபாவம் கொண்டவர்களாக பயந்த இயல்புடையவர்களாக இருப்பதெல்லாம் அவர்களின் மனநிலையை பாதிக்கிறது. இவர்கள் வெகு நாட்களாக கற்பனை கொண்ட விஷயங்களை நிஜத்தில் செய்துபார்க்க நினைத்தால், அங்குதான் குற்றங்கள் நடக்கின்றன. இதை டெட் பண்டி கூட கூறியிருக்கிறார். கற்பனை விஷயங்களை மனதில் தனி இடத்தில் வைத்திருக்கிறேன் என்றார். இப்படி பெருகும் கற்பனைகளை ஒருவர் தனது மனதில் அடக்கி வைக்கும்போது