குருவைக் கொல்ல கையில் வாளெடுக்கும் சீடன் - முதல் யுத்தம் -பாலகுமாரன்
ஜிபி முதல் யுத்தம் பாலகுமாரன். சேரதேசத்தில் இருந்து அருண்மொழிப்பட்டன் சோழதேசத்திற்கு குதிரையில் வரும்போது கதை தொடங்குகிறது. காந்தளூர்க் கடிகைச்சாலையில் ஐந்து ஆண்டுகள் போர்ப்பயிற்சியும், ஓராண்டு ஆசிரியப் பயிற்சியும் முடித்துவிட்டு தஞ்சைக்கு வருகிறான். உபதளபதி தகுதியில் அவனுக்கு பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவனுக்கு அதைவிட அவனது காதலி சுந்தரியைப் பார்த்துவிட்டு தன் அம்மாவைப் பார்க்கவேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் வாழ்வில் நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைத்துவிடுகிறதா என்ன? இதற்கான விஷயங்கள் அவனது குரு குஞ்சன் நம்பூதிரியிடமிருந்தே கிடைத்துவிடுகிறது. அவன் கையில் வெள்ளிக்கேயூரம் கட்டப்பட்டு வெளியேறும்போது, நாம் அனைவரும் விதியின் கைப்பாவைகள். நீயும் நானும் கையில் வாளோடு எதிரெதிராக நிற்கும் சூழல் இருந்தால் என் உடலை அங்கஹீனம் செய்யாமல் நெஞ்சில் வாளைப் பாய்ச்சி கொன்றுவிடு என்று கேட்டுக்கொள்கிறார். முதலில் நமக்கு இதைப்ப்படிக்கும்போது அதிர்ச்சியாக இருந்தாலும், அடுத்த சில பகுதிகளைப் படிக்கும்போது, அந்த வார்த்தை எதிர்காலத்தை ஏறத்தாழ கணித்தபடியே குரு கூறியிருக்கிறார் என்று உணர