இடுகைகள்

செவ்வாய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விலங்குகளின் புத்திசாலித்தனம் பரிணாம வளர்ச்சி பெற்று வளர்ந்து வருகிறதா?

படம்
  பகுதி 2 விலங்குகளின் மனம் எப்படி இயங்குகிறது? மனிதர்கள் ஐம்புலன்கள் வழியாக ஒன்றை அறிந்து அதன் படி செயல்படுவது குறைந்துவிட்டது. காரணம், அவர்கள் ஐம்புலன்களை விட மூளையை பயன்படுத்துகிறார்கள். இதன் வழியாக கருவிகளை உருவாக்க முடிந்தது. தேனீ, தான் பறக்கும் இடத்தில் உள்ள காந்தப்புலத்தை உணர்கிறது. தனது கூட்டை எளிதாக கண்டறிந்து திரும்பச்செல்கிறது. இதை மனிதர்கள் ஜிபிஎஸ் கருவி இல்லாமல் செய்ய முடியாது. கைதிகளை சிறையில் பல்வேறு அறைகளில் அடைத்து வைத்திருப்பார்கள். அதுபோலத்தான் மனிதர்கள், விலங்குகள் ஆகிய இரண்டு இனத்தின் மூளையின் செயல்பாடும் உள்ளது. செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டும் பெரிதும் வேறுபட்டது. 1974ஆம் ஆண்டு தத்துவவாதி தாமஸ் நாகல்,வௌவாலாக இருப்பது எப்படி என புகழ்பெற்ற கட்டுரையை எழுதினார். இவர், அமெரிக்க தத்துவ வல்லுநர்.வௌவால் குகையில், மரத்தில் தொங்கும்போது அதன் மனதில் என்னவிதமாக கற்பனைகள் தோன்றும் என விளக்கி எழுதியிருந்தார். அது மனிதர்களை எப்படி பார்க்கிறது என விளக்கப்பட்டிருந்தது. அறிவியல் ரீதியாக வௌவாலைப் பார்ப்பது வேறு, அதன் வாழ்க்கையை அப்படியே புரிந்துகொண்டு உணர்வது வேறு. இரண்ட

செவ்வாயில் கேட்ட ஒலியை பதிவு செய்யும் நாசாவின் முயற்சி

படம்
  செவ்வாயில் கேட்ட ஒலி! பல்லாண்டுகளாக செவ்வாய் கோளின் தரையில் என்ன ஒலி கேட்கும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வந்தனர். அமெரிக்காவின் நாசா அமைப்பு, இதை ஆராய மார்ஸ் போலார் லேண்டர், பீனிக்ஸ் ஆகிய திட்டங்களை உருவாக்கியது. ஆனால் இவை ஒலியை பதிவு செய்யமுடியாமல் தோல்வியுற்றன. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாசாவின் பர்சீவரன்ஸ் ரோவர் (Perseverance Rover), செவ்வாயில் தரையிறங்கியது.  ரோவரில் உள்ள 2 மைக்ரோபோன்களின் மூலம் செவ்வாயின் தரைப்பரப்பு ஒலி, பதிவு செய்யப்பட்டது. 4 மணி நேரத்திற்கும் கூடுதலாக பதிவான ஒலிக்கோப்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இதன்மூலம், செவ்வாய் கோளில் காற்றில் ஒலி எப்படி பரவுகிறது என்ற தகவல்களை அறிந்துகொண்டனர்.  செவ்வாயில் காற்றின் அழுத்தம் 0.6 கிலோ பாஸ்கல் ஆகும். பூமியை விட செவ்வாயில் காற்றின் அழுத்தம் 200 மடங்கு குறைவு. கரியமில வாயு நிறைந்துள்ள சூழலில் வெப்பநிலை - 63 டிகிரி செல்சியஸாக உள்ளது. செவ்வாயில் குளிர் அதிகம் என்பதால், ஒலி நொடிக்கு 240 மீட்டர் வேகத்தில் செல்கிறது.  பூமியில், ஒலி நொடிக்கு 340 மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. செவ்வாயில் கேட்கும் ஒலி பற்றி

வேற்றுகிரகத்திற்கு செல்ல விண்வெளி வீரர்கள் பயிற்சி செய்வது இங்குதான்! - ஐஸ்லாந்து

படம்
  நிலவைப் போன்ற நிலப்பரப்பு கொண்ட நாடு! முழுமையாகவே அப்படி ஒரு நிலப்பரப்பு உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் நிலவு, செவ்வாய் ஆகிய கோள்களில் உள்ள சிக்கலான நிலப்பரப்புகளை ஒத்த நிலப்பரப்பு பூமியில் உண்டு. ஆம், ஐஸ்லாந்து நாட்டில் தான் இப்படிப்பட்ட வினோத நிலப்பரப்பு உள்ளது.  1960ஆம் ஆண்டு அமெரிக்காவில் விண்வெளி அமைப்பான நாசா, அப்போலோ திட்டத்தில் முனைப்பாக இருந்தது. அப்போது விண்வெளி வீரர்களுக்கு, நிலவைப்போன்ற நிலப்பரப்புள்ள தீவு நாடுகளை தேடிக்கொண்டிருந்தது. அப்படித்தான் ஐஸ்லாந்து நாட்டை நாசா விஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்தனர்.  ஐஸ்லாந்தில் வடக்கு கடற்புரத்தில் ஹூசாவிக் (Husavik) எனும் இடம் உள்ளது. இங்கு மீன்பிடிக்கும் மக்கள் 2,300 பேர் வாழ்கின்றனர். நாசா அமைப்பு, 1969ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீர ர்களை அனுப்புவதற்கு முன்னர், வீரர்களுக்கு  சிறப்பாக பயிற்சியளிக்க முடிவெடுத்தது. இதற்காக 32 விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்தனர். இப்படி தேர்வானவர்களில் நிலவில் கால்வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும் உண்டு.  2019ஆம் ஆண்டுதான், மனிதர்கள் நிலவில் கால்வைத்து ஐம்பது ஆண்டுகள் ஆனதை விண்வெளி அறிவி

செவ்வாயில் புத்தம் புதிய நகரம்!

படம்
  செவ்வாயில் புத்தம் புதிய நகரம்! செவ்வாயில் மக்களை குடியமர்த்துவதற்கான நகரத்தை அமைக்க சீனா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகள் முயன்று வருகின்றன.  அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹோம் விண்கலம் செவ்வாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2117ஆம் ஆண்டில் அங்கு நகரம் அமைப்பதற்கான திட்டத்தை அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதற்குப்பிறகு சீனாவின் தியான்வென் 1 என்ற விண்கலம் செவ்வாய்க்கு அங்குள்ள சூழல்களை ஆராய அனுப்பி வைக்கப்பட்டது. மூன்றாவதாக, அமெரிக்க நாசாவின் பெர்சீவரென்ஸ் ரோவர், செவ்வாயிலுள்ள வேதியியல் பொருட்களைப் பற்றி ஆராய அனுப்பி வைக்கப்பட்டது.  உலக நாடுகளிடையே செவ்வாயை ஆராய்ச்சி செய்வதற்கான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் செவ்வாய் சங்கம் என்ற அமைப்பு, செவ்வாயில் நகரத்தை அமைப்பதற்கான திட்டங்களை அனுப்பி வைக்க கோரியது. இதற்காக, உலக நாடுகளிலிருந்து 175 குழுக்கள் நகர வடிவமைப்பு திட்டங்களை அனுப்பி வைத்துள்ளன. இதில் பங்கேற்ற சோனெட் எனும் குழுவின் திட்டத்தைப் பார்ப்போம். .நுவா நகரம் எனும் இத்திட்டப்படி செவ்வாயில் நிலத்திற்கு கீழே வீடுகள

சீனா 2020

படம்
சீனா 2020 சீனா தொழில்நுட்ப வேகத்தில் முன்னணியில் செல்கிறது. ஏறத்தாழ உலகின் பல்வேறு நாடுகளுக்கு 5 ஜி தொழில்நுட்பத்தை தரும் முதன்மையான இடத்தில் உள்ளது. விண்வெளி ஆய்விலும் பின்தங்கி விடுவார்களா என்ன? நாங்கள் அடுத்த ஆண்டு செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் முடிவில் உழைத்து வருகிறோம் என்கிறார் சீன விண்வெளி மைய இயக்குநரான வாங் சீ. ரஷ்யா, ஐரோப்பியர்கள் தயங்கும் செவ்வாய் திட்டத்திற்கு சீனா வேகமாக தயாராகி தன்னை நிரூபிக்க முந்துகிறது. இது அதன் தொழில்நுட்ப வலிமையை மட்டுமல்ல, வல்லரசு நாடு என்ற தன்மையையும நிரூபித்து அமெரிக்காவை பின்தள்ள உதவக்கூடும். நன்றி: ஃப்யூச்சரிசம்