இடுகைகள்

வெறுப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏழைக்குழந்தையின் உயிரைக் காக்க குரல் கொடுத்து அவலமான அலுவலக அரசியலில் சிக்கிக்கொள்ளும் குழந்தைநல மருத்துவர்!

படம்
   hi venus (ஜஸ்ட் வித் யூ)  சீன டிராமா 24 எபிசோடுகள் பிரசிடென்ட் லூ, டாக்டர் யே என இருவருக்குள்ளும் நடக்கும் காதல் கசமுசாக்கள்தான் கதை. படத்தின் நாயகன் லூ போன்று தோற்றம் இருந்தாலும், கதை முழுக்க டாக்டர் யே வைச் சுற்றியே நடக்கிறது. வறுமையான பின்னணியில் பிறந்தவள். அவளது அப்பா, கடன் பிரச்னையில் மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். அவளது அம்மா இன்னொருவரை மணந்துகொள்கிறாள்.  யே சிலான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறாள். தனித்து விடப்பட்டவளான அவள், அந்த நிலைக்கு காரணம், தற்கொலை செய்துகொண்ட அப்பாதான் என நினைத்துக்கொண்டு மனம் முழுக்க கோபம் கொள்கிறாள். எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்கிறாள். பல்வேறு வேலைகளை செய்து காசு சேர்த்து வைத்து குழந்தைகளுக்கான மருத்துவராக மாறுகிறாள்.  நேர்மையான வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட மருத்துவர்தான் யே சில்லான் எனவே, நிறைய பிரச்னைகளை சந்திக்க நேருகிறது. ஒரு ஏழைக்குழந்தைக்காக டீன் சூ என்பவருடன் மோதி, தனது பணியை இழந்து தாவோயூன் என்ற கிராமத்தில் உள்ள இலவச மருத்துவமனைக்கு செல்லும்படி சூழலாகிறது. மருத்துவமனை அரசியலால் சதுரங்க காய் போல வெட்டப்பட்டாலும் அவள்

தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளிடம் உருவாகும் அதீத வெறுப்பு - என்ன காரணம்? எப்படி தீர்ப்பது?

படம்
  ஒரு குழந்தை கைவிடப்பட்டு ஆதரவின்றி தெருவில் நிற்கிறது. அல்லது காப்பகத்தில் வளர்கிறது. அந்த குழந்தைக்கு பெற்றோரின் அன்பு, வழிகாட்டுதல் கிடைத்தால் பெரிய சாதனைகளை படைப்பார்கள் என சிலருக்கு தெரிகிறது. இப்படித்தான் பிள்ளைகளை  தத்தெடுப்பது தொடங்குகிறது. இப்படி தத்து வழங்கப்பட்ட பிள்ளைகள், புதிய வீட்டில் மகிழ்ச்சியுடன் ஏற்கப்படுவார்களா, இல்லையா என்பது முக்கியமான கேள்வி. பெரும்பாலும் குழந்தைகளை வெறுக்காமல் இருக்க வளர்ப்பு பெற்றோர் முயல்கிறார்கள். சகித்துக்க்கொள்ள பார்க்கிறார்கள். குழந்தைகளோ வெறுக்கப்பட்டால்தான் அன்பு கிடைக்கும் என புரிந்துகொள்கிறார்கள். இதைபற்றி டொனால்ட் வின்னிகாட் என்ற உளவியலாளர் ஆராய்ச்சி செய்தார். தாய், பிள்ளை என இருவருக்குமான உறவு, குழந்தைகளின் மேம்பாடு ஆகியவற்றை  முக்கிய அம்சங்களாக கருதி ஆய்வு செய்தார்.  இவர் சிக்மண்ட் ஃப்ராய்ட், மெலானியா கிளெய்ன் ஆகியோரின் கொள்கை,ஆய்வு மீது பெரும் பற்றுதல் கொண்டவர். தன்னுணர்வற்ற மனநிலையில் ஒருவர் கொண்டுள்ள எண்ணங்கள், உணர்வுகள் பற்றி ஆய்வுசெய்தார். இரண்டாம் உலகப்போரில் வீடுகளை இழந்த உறவுகளை இழந்த சிறுவர்கள் பற்றி ஆராய்ந்தார். இவர்கள் பல

தீயசக்தி வாட்களை உருவாக்கும் குருவுடன் மோதும் சீடன்! தி சீலர்

படம்
  தி சீலர் - ஜே டிராமா தி சீலர் ஜே டிராமா ராக்குட்டன் விக்கி ஆப்   நகரில் சில மனிதர்கள் திடீரென ஒரு வாளால் தாக்கப்பட்டு   வீழ்கிறார்கள். அப்படி விழுந்து   எழுந்தால கையில் வாளின் கைபிடி உள்ளது. அதை கையில் இறுக்கிப்பிடித்தால் கருப்பு நிற புகை வெளிவரும் தீயசக்தி வாள் உருவாகிறது. அதை பயன்படுத்துபவரின் உருவம் சாதாரண மக்களின் கண்களுக்கு தெரியாது. இந்த வாள், வெறுப்பை, கசப்பை, வலியை, வேதனையை செரித்து வளர்கிறது மனதில நினைத்துப் பார்க்க முடியாத கோபத்தை, வலியை, பழிவாங்கும் வெறியை வைத்திருப்பவர்கள் இந்த தீய சக்தி வாளை பயன்படுத்தி தங்கள் வாழ்வைக் கெடுத்தவர்களைக் கொல்கிறார்கள். இதை தடுப்பவன்தான் காக்கேறு எனும் நாயகன். தி சீலர் தொடரின் பெரும் பலமே வாள் சண்டைக் காட்சிகள்தான். எதிரியிடம் வாள் இருக்கும். நாயகனிடம் வாளை மூடி உறையிடுவதற்கான வாளுறை மாத்திரமே உண்டு. அதை வைத்து அவர் எப்படி சண்டையிடுகிறார், எதிரிகளை வெல்கிறார் என்பதே கதை. தீயசக்தியை அடக்கும் இனக்குழு தொன்மைக்காலத்தில் இருந்து இருக்கிறது. இவர்கள், தனி இனக்குழுவாக சமூகத்தைக் காக்க அமைதியாக இயங்கி வருகிறார்கள். காக்கேறு, தீயசக்தி வாள

கடவுளின் ஆணைக்கு இணங்கி பெண்களை கொலை செய்தவர் - ஹார்வி லூயிஸ்

படம்
  ஹார்வி லூயிஸ் பெண்களைக் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி. சட்டம் சீர்திருத்தம் செய்யப்பட்ட காலத்தில் அதன் பயனை அனுபவித்தார். இப்படி சட்ட ரீதியாக பயன் பெற்றவர் அதைப் பயன்படுத்தி திருந்தியிருக்கலாம். ஆனால், ஹார்வி அப்படி ஏதும் செய்யவில்லை. 1951ஆம் ஆண்டு மரணதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த பிறகு   1960ஆம் ஆண்டு,   பிணை வழங்கப்பட்டது. ஹார்வியைப் பொறுத்தவரை சிறைக்கு முன்னும் பிறகும் எந்த மாற்றமும் இல்லை. கொள்ளை, கொலை, தாக்குதல் என்றுதான் வாழ்ந்தார். இதற்காக, 1965ஆம் ஆண்டு பதினைந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நல்லவிதமாக நடந்துகொண்டதற்காக தண்டனை குறைக்கப்பட்டு   1969ஆம் ஆண்டு விடுதலையானார். தண்டனைகள், சிறை என்பதெல்லாம் ஹார்வி விஷயத்தில் எதிர்மறையாகவே மாறிப்போனது. சமூகத்தையும், அதில் இடம்பெற்ற பெண்களையும் கடுமையாக வெறுக்கத் தொடங்கினார். இரண்டு முறை விதவைப் பெண்களை திருமணம் செய்தார். ஆனால் யாரிடமும் நெருக்கமாக இல்லை. அவர் பாட்டிற்கு காரை எடுத்துக்கொண்டு தனியாக சுற்றி வந்துகொண்டிருந்தார். இதனால் ஹாரியின் திருமண

வெறுப்பை, குரோதத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி சித்திரங்கள்! கொமோரா - லஷ்மி சரவணக்குமார்

படம்
  கொமோரா நாவல் கொமோரா - லஷ்மி சரவணக்குமார் கொமோரா லஷ்மி சரவணக்குமார் கிழக்கு பதிப்பகம்   வாழ்க்கையில் துயரம், அவமானம், துரோகம் ஆகியவற்றை மட்டுமே சந்தித்து வளர்ந்த கதிர் என்ற இளைஞனின் வாழ்க்கைப்பாடே கதையின் முக்கியமான மையம். கம்போடியாவில் நடைபெற்ற கம்யூனிச படுகொலைகளை பின்னணியாக வைத்து நாவல் எழுதப்பட்டுள்ளது. அங்கு வேலை செய்துவரும் கோவிந்தசாமி, உணவகம் ஒன்றை நடத்துகிறார். ஆனால் கம்போடிய உள்நாட்டு புரட்சிப்படை போரில் வெற்றிபெற, வெளிநாட்டு மக்கள் அனைவரும் விசாரணை என்ற பெயரில் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதில் இருந்து தப்பி மீண்டு வரும் அழகர்சாமி என்ற சிறுவன் என்னவானான், அவனது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பது கிளைக்கதை. நாவலில் கதை நடைபெறும் இடம், நிகழ்ச்சி எல்லாமே முன் பின்னாக அமைந்துள்ளது. ஆனால் படித்து முடித்தபிறகு அனைத்துமே மனதில் கோவையாக கோத்துக்கொள்ளலாம். நாவலில் வரும் பல்வேறு விஷயங்கள் வாசிப்பவர்களை தீவிரமாக அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. கதிர், கிறிஸ்துவ விடுதியில் வல்லுறவு செய்யப்படுவது, பசியால் கோழி திருடி கடுமையாக அடிக்கப்படுவது, அப்பாவால் வல்லுறவு செய்யப்பட

வன்மமாக மாறும் வெறுப்பு - கடிதங்கள் - கதிரவன்

படம்
  3.4.2022 மயிலாப்பூர் அன்புள்ள கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  ரொம்ப நாட்களுக்குப் பிறகு நான் உங்களிடம் பேசி இருக்கிறேன். மகிழ்ச்சி. தம்பியின் திருமணம் சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன். நாளிதழ் வேலைகள் தொடங்கிவிட்டன. இம்முறை துறை சார்ந்த வல்லுநர்களை தேடி எழுத வைக்க இருக்கிறேன். முயற்சி பலிதமாகுமா என்று தெரியவில்லை. கஷ்டம்தான். முயல்கிறேன். இன்று சக்தி சாரின் அறைக்குச் சென்றேன். வடபழனி. கேம்பஸ் என்ற ஹோட்டலில் புட்டும் கடலைக்கறியும் வாங்கிக் கொடுத்தார். டீப் வாட்டர். பவர் ஆஃப் டாக் என்ற இரு படங்களைப் பார்த்தேன். டீப் வாட்டர், மனைவி மீது கொலைவெறி பாசம் கொண்ட கணவரின் அதீத செயல்பாடுகளைப் பேசுகிறது. குறைந்த வசனங்கள். நிறைந்த உடல்மொழி என படம் எடுத்திருக்கிறார்கள்.  பவர் ஆஃப் டாக் படம், பெண் இயக்குநர் ஜேன் கேம்பியன் எடுத்தது. ஒருவரின் மனதில் உருவாகும் வெறுப்பு எப்படி வன்மமாக மாறி குற்றச்செயல்களுக்கு தூண்டுகோலாகிறது என்பதே படம். இந்து ஆங்கில நாளிதழில் சூழல் பற்றிய கட்டுரைகளை சிறப்பாக எழுதுகிறார்கள். இதை மொழிபெயர்த்து எழுத வேண்டும். எங்கள் நாளிதழ் இனி நூலகங்களில் கிடைக்கும் என்று ஆசிர

இந்தியாவில் பரவும் வெறுப்பெனும் நச்சு! - நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்

படம்
  வெறுப்பு மதவாத பேச்சு வாக்குவங்கி அரசியலுக்காக வெறுப்பு அரசியல் மக்களின் மனதில் செலுத்தப்பட்டு வருகிறது. மதவாத வெறுப்பு இந்தியாவை இதுவரை யாரும் பார்த்திராத முறையில் மாற்றி வருகிறது.  என்னை இந்தியா டுடே ஆசிரியர், பிரிவினை அந்தளவு ஆழமாக இருக்கிறதா என்று கேட்டார். மதவாத வன்முறை, படுகொலைகள், பசு பாதுகாப்பு தாக்குதல்கள் ஆகியவற்றை நான் உடனே நினைவுபடுத்தவில்லை. இப்போது கர்நாடகத்தில் நடைபெறும் ஹிஜாப், ஒலிப்பெருக்கி பிரார்த்தனைகள், ஹலால் முறை இறைச்சி ஆகியவற்றையும் கூட நான் நினைக்கவில்லை. பிரிவினை பாதிப்பை நேரடியாக எனது அனுபவத்தில் உணர்ந்த மூன்று சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.  சசிதரூர் 1 ஜெய்ப்பூரில் நான் தங்கநிற முடிக்கற்றை கொண்ட லெபனான் நாட்டுப் பெண்ணை சந்தித்தேன். அவர் இந்தியாவுக்கு கைவினைப் பொருட்கள் வணிகத்திற்காக 15  ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கிறார். வெளிநாட்டினராக இருந்தாலும் அவரை மக்கள் வரவேற்று பேசுவது வழக்கம். அவரது பெயர் நூர், இதற்கு வெளிச்சம் என்று பொருள். என்ன அழகான பெயர் என்று கூறி பேசியிருக்கின்றனர். ஆனால் இப்போது நூர் என்றால், நீங்கள் முஸ்லீமா என்று முதல் உரையாடலிலேயே வார்த்தையிலே

முஸ்லீம்களின் மீதான வெறுப்பை இயல்பானதாக்குகிறது பாஜக! - மனித உரிமை வழக்குரைஞர் அமான் வதூத்

படம்
  மனித உரிமைகள் வழக்குரைஞர் அமான் வதூத் முஸ்லீம்களை இப்படி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றுவது அரசின் மிகப்பெரிய திட்டம் என்று கூறுகிறீர்களா? ஆமாம். இது பெரிய திட்டத்தின் சிறிய பகுதிதான். இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, பிற மாவட்டங்களிலிருந்து மக்கள் எதற்கு இங்கு வந்து தங்கவேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். இந்திய அரசியலமைப்புச்சட்டம் 19(டி, இ எஃப்) ஆகியவற்றின் படி இந்தியாவில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சென்று குடியேறி வாழலாம். அதற்கான உரிமை அம்மக்களுக்கு உண்டு.  மக்களை வெளியேற்றும்போது நான்கு மசூதிகளை இடித்தார்கள் ஆனால் அங்குள்ள கோவிலை எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறதே உண்மையா? மக்கள் கோவிலின் அருகே குடியிருந்தார்கள் என அரசு வாதிடுகிறது. ஆனால் கோவில் மக்களின் வாழிடத்திலிருந்து தூரமாகவே இருந்தது.  மக்களின் குடியிருப்புகளிலிருந்து அவர்களை வெளியேற்றிய அரசு, அவர்களுக்கான மறுவாழ்வு குடியேற்றங்களை அமைத்து தருவதாக கூறியது. ஆனால் அத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லையே? 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வாழ்ந

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு காரணம் என்ன?

படம்
  இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு அமெரிக்க வர்த்தக மையம் தாக்குதல் மட்டுமே காரணம் அல்ல. அதற்கு முன்னரே இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு இடையே முன்விரோதம் , பகை, வன்மம் என எல்லாமே உண்டு. அதனை ஊக்கப்படுத்தியது தாக்குதல் நடத்திய பத்தொன்பது தீவிரவாதிகள் என்று கூறலாம்.  கிறித்துவம், இஸ்லாம் என்ற இரு மதங்களுமே நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள். இதில் இஸ்லாமைப் பொறுத்தவரை அவர்கள் பிறரிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இதனை இலக்கியவாதிகள் கூட பயன்படுத்தி காபிர்களின் கதைகள் என எழுதுகிறார்கள். இதன் வழியாக அவர்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை.  புர்கா அணிவது, குல்லா அணிவது என தங்களை தனித்தே காட்டிக்கொள்ளும் இஸ்லாமியர்கள் அனைத்து நாடுகளிலும் இணக்கமான தன்மை கொண்டவர்களாக இல்லை. அமெரிக்காவில் இந்த வேறுபாடுகளை துல்லியமாக அடையாளம் காண்கிறார்கள். முஸ்லீம்களின் புனித நூலில் போர் என்பதை இயல்பானதாக ஏற்றுக்கொள்வதால், வன்முறையான குணம் கொண்டவர்கள் என முஸ்லீம்களை அடையாளப்படுத்த தொடங்கினர். 2010ஆம்ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அமெரிக்கர்களில் பாதிப்பேர் முஸ்

வெறுப்பு பேச்சுகளை ஊக்கப்படுத்தும் சமூக வலைத்தளங்கள்! - வணிகத்திற்காக எல்லைமீறும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்திக்கும் வழக்குகள்!

படம்
            சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் வெறுப்புவாதம் ! வெறுப்பு பேச்சுகளை ஊக்குவிப்பதாக எழுந்த புகார்களின் பேரில் ஃபேஸ்புக் , ட்விட்டர் ஆகிய சமூகவலைத்தள நிறுவனங்கள் பல்வேறு வழக்குகளை சந்தித்து வருகின்றன . கடந்த ஆண்டு நவம்பர் 17 அன்று அமெரிக்க செனட் கமிட்டி முன் ஃபேஸ்புக் நிறுவனர் மா்ர்க் , டிவிட்டர் இயக்குநர் ஜேக் டோர்ஸி ஆகியோர் ஆஜராயினர் . அவர்களது நிறுவனத்தில் பகிரப்படும் வெறுப்புவாத செய்திகள் பற்றிய விசாரணையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தினர் . பேச்சு சுதந்திரம் அல்லது வெறுப்பு வாதங்கள் என்று பகிரப்படும் செய்திகளால் நாட்டில் நடைபெறும் பதற்றமான நிகழ்ச்சிகள் காரணமாகவே மேற்கண்ட நிறுவனங்கள் மீது விசாரணை நடைபெற்றது . அமெரிக்காவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டால் அரசியல் நிலை சீரற்றதாகி வருகின்றன . இந்தியாவில் நவம்பர் 21 அன்று கேரள அரசு , 118 ஏ என்ற சமூகவலைத்தள பதிவுகளுக்கா ன தடுப்புச்சட்டத்தை அமல்படுத்தியது . பெண்கள் , குழந்தைகள் இணையத்தில் கேலி , கிண்டல் செய்யப்படுவதைத் தடுக்கும் சட்டம் என மாநில அரசு கூறியது . ஆனால்

கோவிட் -19, வெறுப்பு பேச்சு, இனவெறியை ஜவாகர்லால் நேரு சமாளித்திருப்பாரா? 132ஆவது நேரு பிறந்த தினம் (14.11.2020)

படம்
      நேருவின் 132 ஆவது பிறந்ததினம் , இந்த ஆண்டு கடந்திருக்கிறோம் . நவீன சிற்பிகளில் ஒருவரான நேருவைப் போல நடப்பு ஆண்டில் தூற்றப்பட்டவர் யாரும் கிடையாது . இந்த நேரத்தில் அவரின் செயல்பாடுகளை நினைவுகூர்வோம் . நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் மறைந்தார் . அவரது பல்வேறு நடவடிக்கைகளை இன்று கடுமையாக விமர்சிக்கும் புருஷோத்தம் அகர்வால் அன்று சிறுபையனாக இருந்தவர் . நேருவின் பல்வேறு செயல்பாடுகளை நான் கடுமையாக விமர்சித்து இருக்கிறேன் . ஆனால் இந்திய நாட்டிற்காக தன்னையே வைத்துக்கொண்ட அந்த மனிதனின் நாட்டுப்பற்றை நான் மறக்கவே முடியாத . சீனா செய்த நம்பிக்கை துரோகம் நேருவின் இழப்பிற்கு காரணமாகியது . என்று பேசுகிறார் . அகர்வால் ஹூ இஸ் பாரத்மாதா என்று நூலை எழுதியுள்ளார் . இதில் நேரு , வல்லபாய் படேல் , வாஜ்பாய் ஆகியோரைப் பற்றிய தகவல்களை எழுதியுள்ளார் . உண்மையில் சிறந்த தலைவராக செயல்பட்ட மனிதரை இழந்துள்ளோம் . திறந்த புத்தகமாக இருந்து செயல்பட்டவரும் நானும் பல்வேறு விஷயங்களை கலந்தாலோசித்து இருக்கிறோம் . நேர்மையாக செயல்பட்ட தலைவர் அவர் என வல்லபாய் படேல் நேருவின் 60 ஆவது பிறந்தநாளில் ஆற்றிய உர