இடுகைகள்

?#ஏன்?எதற்கு?எப்படி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவு நம்மை விட சிறந்ததா?

படம்
      கிகா மிஸ்டர் ரோனி செயற்கை நுண்ணறிவு நம்மை விட சிறந்ததா? இது பதில் சொல்லுவதற்கு மிக கடினமான கேள்வி. இன்றுவரை செயற்கை நுண்ணறிவு ஆறுவயது சிறுவனின் அறிவை விட அதிகமாக கற்றுக்கொள்ளவில்லை. மனிதர்களின் உதவியின்றி தானியங்கி கார்களை சாலையில் விட்டால் விபத்துகள் ஏற்படும். அதைப்போலத்தான் பாத்திரங்களை கழுவது போன்றவையும் உள்ளது. முன்பை விட இன்று நம்மிடையே ஆற்றல் வாய்ந்த கணினிகள், நிறைய தரவுகள் உள்ளன. கோடிக்கணக்கான அல்காரிதம்கள் உள்ளன. தானியங்கி கார்களை ஓட்டுவதில் செயற்கை நுண்ணறிவு இன்னும் மனிதர்களைப் போல நிபுணத்துவம் பெறவில்லை. ஒரு படத்தில் ஒளிந்துள்ள பூனையின் ஒருபகுதி போன்ற செயல்களை மனிதர்களை விட வேகமாக திறமையாக செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிக்கிறது என்பது உண்மை. மனிதர்களின் உதவியின்றி செயற்கை நுண்ணறிவு எப்படி திறன் பெற்றதாக உருவாகும் என்று தெரியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு உள்ளது. மனிதர்களைப் போன்ற திறன் பெற்ற ஏ.ஐ எதிர்காலத்தில் நம்மோடு போட்டிபோடும்படி உருவாகும் வாய்ப்பு உள்ளது. தினசரி வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறதா? நீங்கள் இணையத்தில் வாங்கும் அனைத்து பொருட்களின்

உள்ளூர் உணவு, உலக உணவு எது சிறப்பானது?

படம்
இன்று நாம் கேஎப்சியில் சிக்கன்களை பக்கெட் ஆபரில் வாங்கி சாப்பிட்டுவிட்டு தாகம் எடுத்தால் கோலா பானங்களை தேடிக்குடிக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அதே சுவையில் இங்கேயும் கோலா பானங்களை தயாரித்து விற்கிறார்கள்., நிலப்பரப்பிற்கான சுவை என்பது இன்று மெல்ல அழிந்துவருகிறது. அதேசமயம் இதற்கு எதிரான உள்ளூர் உணவுகளை சாப்பிட அறிவுறுத்தும் பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த குழுக்களும் உருவாகி வருகின்றனர்.  உள்ளூர் உணவுவகைகளை ஏன் சாப்பிடவேண்டும்? காரணம் குறிப்பிட்ட உணவு வகைகளை தேடி சாப்பிடத் தொடங்கினால் அதனை குறிப்பிட்ட இடத்திலிருந்து கொண்டு வர பல்வேறு சிரமங்கள் உண்டு,. மேலும் சூழல் மாசுபாட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். திருநெல்வேலி அல்வா என்பது அங்குள்ள நீரில் செய்யப்பட்டு சாப்பிடும்போது அதன் சுவை நன்றாக இருக்கும். அதே சுவையில் இங்கு சாப்பிடவேண்டும் என ஆசைப்படுவது தவறான ஒன்று. அதேபோல நேர்த்தியாக இங்கேயே செய்து சாப்பிடலாம். இதுபோல குறிப்பிட்ட உணவுவகைகளுக்கு டிமாண்ட் ஏற்படுவது அங்குள்ள பல்வேறு இயற்கை வள ஆதாரங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே உள்ளளூர் வகை உணவுகள

உணவு வீணாவதை தடுப்பது எப்படி?

படம்
உணவு உற்பத்தி முறைகளிலும் அதனை பயன்படுத்தும் முறைகளிலும் பெருமளவு உணவு வீணாகி வருகிறது. இதைத்தடுக்க உணவுப்பொருட்களை கவனமாக தேவைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். வளர்ந்த வளரும் நாடுகளில் உள்ள குறிப்பிட்ட சதவீத மக்கள் உணவின்றி தவிக்கும்போது மற்றொரு இடத்தில் உணவுப்பொருட்கள் தேவையின்றி வீண்டிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் நமக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களின் இன்றியமையாத தன்மையை நாம் அறியாததே ஆகும். இம்முறையில் உலகெங்கும வீணாகும் உணவுப் பொருட்களிலிருந்து 3 பில்லியன் டன்கள் பசுமை இல்ல வாயு வெளியாகி உலகை வெப்பப்படுத்தி வருகிறது. அதாவது உலகில் 23 சதவீத விவசாய நிலங்களிலிருந்து பெறும் விளைபொருட்கள் பயன்படுத்தப்படாமல் வீண்டிக்கப்படுகின்றன.  மக்களின் உணவுத்தேவைக்காக விளைவிக்கப்படும் மூன்றில் ஒரு பங்கு காய்கறிகள் உணவுகள் வீண்டிக்கப்பட்டு வருகின்றன. இதனை எப்படி தவிர்ப்பது? அருகிலுள்ள காய்கறிகடைகளுக்கு செல்லும்போது தேவையான காய்கறிகளை மட்டும் வாங்குங்கள். உணவு தயாரிக்கும்போது எத்தனை பேர்களுக்கு என திட்டமிட்டு அதனை செய்யுங்கள். முடிந்தவரை ஒட்டுமொத்தமாக காய்கறிகளை வாங்குவதை தவிருங்க

உணவில் தில்லுமுல்லு! - கலப்படத்தின் ஆபத்து

படம்
pixabay பாலில் வேதிப்பொருட்களை கலப்பது, கோதுமை மாவில் சோயா மாவு கலப்பு, எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்பு என கலப்படம் இல்லாத உணவு வணிகம் கிடையாது என்று ஆகிவிட்டது. வணிகத்திற்கு கருணை கிடையாது என்பதால் உணவில் பாரபட்சம் பார்க்காமல் கல், மண், மலிவான எண்ணெய்களை கலந்து விற்கிறார்கள். அனைத்து தில்லுமுல்லுகளையும் செய்துவிட்டு மேட் இன் இந்தியா என்று பிரின்ட் செய்து விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள். சாதாரண உணவில் உள்ள கலப்படத்தைக் கண்டறிய சற்று கூர்மையான நாக்கும் அறிவும் தேவை. 2013ஆம் ஆண்டு உலகளவில் டின்னில் அடைக்கப்பட்ட இறைச்சிப் பொருட்களை சோதனை செய்தனர். அதில் மாட்டு இறைச்சி என்று எழுதப்பட்ட டின்களில் மாட்டிறைச்சிக்கு பதிலாக குதிரை இறைச்சி உள்ளீடு செய்யப்பட்டிருந்தது. கறிகளில் என்ன தீண்டாமனை என அதிலும் கலப்படம் செய்து உலகளவில் மாட்டிறைச்சி உணவுகளுக்கான சந்தையை தில்லாலங்கடி ஆட்கள் குலைத்தனர். பால் பொருட்களில் பலரும் தில்லுமுல்லு வேலைகளைச்செய்கிறார்கள். இன்று உங்கள் கையில் கிடைக்கும் பால் பாக்கெட்டை பால் பண்ணையில் நான்கு நாட்களுக்கு முன்னரே வேதிப்பொருட்களை சேர்த்து குறிப்பிட்ட

சிறந்த வணிகம் எது?

படம்
pixabay உலகம் முழுக்க நடைபெறும் வியாபாரம் பலதரப்பட்டது. முன்னர் பத்திரிகையாளர் சாய்நாத் தனது நூலில் எழுதியுள்ளது போல இடைத்தரகர்கள் விவசாயிகளின் வாழ்க்கையை சூறையாடினர். இதனால் பல விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருளுக்கான விலை கிடைக்காமல் தடுமாறினர். இதனைக் கண்ட அடுத்த தலைமுறையினர் விவசாயத்தை விட்டு வெளியேறினர். இதனை இன்று இணைய நிறுவனங்கள் மாற்றியுள்ளன. வணிக நடைமுறையில் ஃபேர் ட்ரேட் நடைமுறை முக்கியமானது. இதில் குறிப்பிட்ட விவசாய நிறுவனங்கள் விவசாயிகளுக்கு பொருட்களை அளித்து விவசாயத்திற்கு உதவுகின்றன. இதில் கிடைக்கும் லாபத்தை விவசாயியும், நிறுவனமும் பகிர்ந்துகொள்கின்றன. இதில் இடைத்தரகர்களின் பங்கு குறைவு. ஆனால் ஃபேர் ட்ரேட் எனும் வியாபாரத்திற்கான சான்றிதழ் பெற்றால் மட்டுமே இவ்வணிகத்தை செய்ய முடியும். இதற்கு மாற்று இல்லாமல் இல்லை. சந்தையில் அரசுக்கு கட்டணம் செலுத்திவிட்டு நேரடியாக பொருட்களை விற்கிறார்கள் அல்லவா? அதுதான். ஃபேர் ட்ரேட் நடைமுறை உலகளவில் வெற்றி பெறுவதற்கான காரணம், இதன் வலைப்பின்னல் அமைப்புதான். 1. விவசாயிகளுக்கு தேவையான விளைபொருட்கள், உரங்கள் என உதவிகள் அனைத்

இறைச்சி பற்றாக்குறை ஏற்படுமா?

படம்
pixabay இன்று பெரும்பாலான இறைச்சி உணவுகள் நமக்கு பண்ணை விலங்குகளின் மூலமாக கிடைக்கிறது. காய்கறிகள், பருப்புகள், பால் பொருட்கள் மூலம் குறிப்பிட்ட சத்துகள் கிடைத்தாலும் உடலில் அவசிய வளர்ச்சிக்கு தேவையான புரதம் இறைச்சி மூலமே கிடைக்கிறது. இது அறிவியல் உண்மை. சிலர் தீவிரமான அரசியல் கருத்தாக கருத்தியலாக உணவைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இந்த கருத்து கொண்டவர்கள்தான் நடப்பிலும் எதிர்காலத்திலும் இந்தியாவில் மதிய உணவுத்திட்டத்தை வழிநடத்துபவர்களாக உள்ளனர். இப்போதே உணவில் பூண்டு, வெங்காயம் தவிர்த்த உணவுகளை தயாரித்து வழங்கத்தொடங்கிவிட்டனர். இப்போது பண்ணை விலங்குகள் தரும் இறைச்சி உணவு பற்றிய தகவல்களை பார்ப்போம். பொதுவாக கட்டி வைத்து வளர்க்கப்படும் பசு, பன்றி பெரியளவு ஊட்டச்சத்து கொண்டவையாக இருப்பதில்லை. அவை அதன் போக்கில் திரிந்து புற்களையும், பருப்புகளையும், புழுக்களையும் சாப்பிட்டு வளரும்போதுதான் அதன் இறைச்சி நுண்ணூட்டச்சத்துகள் கொண்டதாக மாறுகிறது. சாதாரணமாக வீடுகளில் வளர்க்கப்படும் பன்றிக்கு புற்கள், இலைகள் ஆகியவையே உணவு. இதனால் இதன் இறைச்சியில் ஒமேகா 3 சத்துகள் காணப்படுகின்றன.

பசியில் தவிக்கும் உலகம்!

படம்
pixabay நாம் கடந்த அறுபது ஆண்டுகளாக பசியோடு போராடி வருகிறோம். இந்திய அரசு ரேஷன் கடைகள் மூலம் பல்வேறு உணவுப்பொருட்களை வழங்கினாலும், அவற்றை மக்கள் வாங்க முடியாத அளவுக்கு விலையை சர்வதேச முதலாளிகளோடு செய்துகொண்ட ஒப்பந்தப்படி மாற்றி வருகிறது. அதன் தரத்தை குறைத்து வருகிறது. இதே நேரத்தில் இந்திய உணவுக்கழகம் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து அதனை பாதுகாக்கும் வசதியின்றி வீணாக்கி வரும் செய்திகளையும் படித்திருப்பீர்கள். பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநில மக்கள் இன்னும் கூட ரேஷன் உணவுப்பொருட்கள் கிடைக்காமல் குழந்தைகளை பலிகொடுத்து வரும் செய்திகளை வாரத்திற்கு ஏதேனும் தேசிய நாளிதழ் செய்தி வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 1960களில் மக்களுக்கு சரியானபடி உணவுப்பொருட்களை வழங்கமுடியாத பிரச்னை எழுந்தது. இதனை பால் எல்ரிச்என்ற எழுத்தாளர் 1968ஆம் ஆண்டு எழுதிய தனது தி பாப்புலேசன் பாம் என்ற நூலில் விவரித்துள்ளளார். இந்த நிலையை சமாளிக்கவே, பசுமை புரட்சி உருவானது. இது வேறு ஒன்றும் இல்லை. மாடுகளால் உழுத நிலத்தை ட்ராக்டர் கொண்டு உழுவது, இயற்கை உரங்களைப் பயன்படுத்தாமல் வேதி உரங்களைப் பயன்படுத்துவத

எப்படி சாப்பிடுவது? - டயட் முறைகள்

படம்
pixabay எப்படி சாப்பிடுவது? காலை எட்டுமணி, மதியம் ஒரு மணி, இரவு எட்டுமணி என மூன்று வேளை உணவு சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாகி இருக்கும். ஆனால் இப்படி சாப்பிடவேண்டும் என்று அவசியமில்லை. இந்த சுழற்சியில் அனைவரது உடலும் இயங்குவதில்லை என்பது உங்களுக்கு நோய் வந்தபிறகுதான் தெரியவரும். இரவுப்பணிகளுக்கு செல்பவர்களுக்கு உடல் பருமன் நீரிழிவு பிரச்னைகள் ஏற்படும். என்ன காரணம் தெரியுமா? நாம் ஆதிகாலத்தில் இருந்தே சூரியனை மையமாக கொண்டு வாழ்ந்து பழகிவிட்டோம். இரவு என்பது சிங்கம், புலி போன்றவற்றின் வேட்டைக்காலம். மனிதர்கள் பகலில் வேட்டையாடி உண்டுவிட்டு குகையில் பதுங்கிவிடுவதே வழக்கம். இந்த பழக்கத்தில் இருப்பவர்களுக்கு ஐ.டி பணி, நாளிதழ் பணி என கிடைக்கும்போது அது முதலில் வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் நாளடைவில் உடலில் வளர்சிதை மாற்றம் மாற்றமடையத் தொடங்கும். இதனால் கன்னம் லேஸ் பாக்கெட் போல உப்பலாக தோன்றும். வயிற்றில் பீர் பெல்லி உருவாகும். ஆளே நவரச திலகம் பிரபு போல நடக்கத் தொடங்குவீர்கள். இதெல்லாம் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றின் தொடக்க நிலை ஆகும்.  க

சப்ளிமெண்டுகளை சாப்பிடுவது அவசியமா?

படம்
pixabay சப்ளிமெண்டுகள் நமக்குத் தேவையா?   உணவில் போதிய சத்துகள் உங்களுக்கு கிடைக்காது என எபாங்க் சபாங்க் பானங்கள் வெகு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வருகின்றன. மேலும் அதே நிறுவனங்கள் தனி பிராண்டுகளாக சத்து மாத்திரைகளையும் பிரபல நடிகர்களை வைத்து விளம்பரங்களைச் செய்து வருகின்றன.  உண்மையில் இந்த மாத்திரைகள் நமக்கு தேவைதானா? என நாற்பது வயதுக்குப் பிறகு நமக்குமே தோன்ற ஆரம்பிக்கும். அதைப்பற்றி அறிவோம் வாங்க.  உண்மையில் நமக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் நாம் இயற்கையில் பெறுவது மிகவும் கடினம். சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் பெரும்பாலானவை உலோகங்களை பகுதிப் பொருட்களாக கொண்டவை. முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்று அப்பொருட்களை டப்பா செட்டி கடையில் வாங்கிச் சாப்பிட்டால் விரைவில் உங்கள் அலுவலக நண்பர்கள் மனமகிழ்ச்சியுடன் உங்கள் கல்லறையில் மலர்வளையம் வைத்து விடுவார்கள். எனவே நாம் அவர்கள் அந்த மகிழ்ச்சிக்கு இடம் கொடுக்க கூடாது. உடலை அவ்வப்போது சோதித்து பக்கவிளைவு குறைவான, அடிப்படை விளைவுகள் அதிகமான மருந்துகளை சாப்பிடலாம். காரணம், நாற்பது வயதிற்குப்

பீர் பெல்லிக்கு என்ன கார ணம் அறிவீர்களா?

படம்
பிக்சாபே பீர் பிற மதுபானங்களை குடிக்காத நேர் வகிடு எடுத்து சீவிய நல்லவர்கள் கூட பீர்தானே ஆல்கஹால் குறைவு என கல்பாக எடுத்து அடிப்பார்கள். அந்தளவு நல்லவனா கெட்டவனா என பலருக்கும் புரியாத மதுபானம், பீர். இதனை மனிதர்களே தயாரித்தனர் என்பது நமக்கான பெருமை.  பொதுவாக அனைத்து பானங்களும் எப்படி தயாரிக்கப்படுகின்றன? தானியங்கள் அல்லது பழங்கள்தானே! இதுவும் அப்படித்தான். தானியங்களை சூடான நீரில் ஊறவைத்து அவற்றிலுள்ள சர்க்கரையைப் பெற்று பீர் தயாரிக்கப்படுகிறது. இதில் பல்வேறு பதப்படுத்தும் நிலைகள் உள்ளன.  இன்று காமராஜர் சாலைகளிலுள்ள பேக்கரிகளில் ஃப்ரூட் பீர் ஏகபோகமாக விற்கப்படுகிறது. அதனை அனிமேஷன் படிக்கும் அண்ணாத்தைகள் வாங்கிப் பருகி மகிழ்கின்றனர். இதில் ஆல்கஹாலின் அளவு குறைவு. எனவே டாஸ்மாக்கில் வைக்கப்படவில்லை. அப்படி வந்தாலும் மால்களில் உள்ள எலைட் கடைகளில் நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும். நம் அந்தஸ்து கூட்டத்தில் முட்டிமோதி கெட்டுவிட்டால் என்னாகும்? ஜென்டில்மேனாக பீர் குடித்தாலே வரலாறு நம்மை மறக்காது.  பீரில் ஆன்டி ஆக்சிடன்டுகள், மினரல்கள் பல்வேறு விஷயங்கள் உள்ள

இன்ஸ்டன்ட் காபி ரெடியாவது இப்படித்தான்!

படம்
pixabay காபி எங்களது பத்திரிகை அலுவலகம் உள்ள காம்ப்ளக்சை மணக்க வைப்பது சத்யா காபிக்கடைதான். இத்தனைக்கும் காபி தயாரித்து வழங்கும் கடை அல்ல. காபி பொடியை அரைத்து விற்கும் கடைதான். நூற்றுக்கணக்கு மேலான கடைகள் இருந்தாலும் அந்த கட்டடத்திற்கு அடையாளமாக அந்தக் காபிக்கடை மாறிவிட்டது.    கொஞ்சம் தள்ளி நடந்து வந்தால், மயிலாப்பூரில் டீக்கடைகளுக்கு செம போட்டியாக இருப்பது, லியோ காபி, கிரைண்ட் காபி, கோத்தாஸ் காபி கடைகள்தான். இதில் லியோ காபி, கிரைண்ட் காபி ஆகியவை காபி பொடியோடு காபியையும் தயாரித்து வழங்கத்தொடங்கிவிட்டனர்.  காபிகளில் இரண்டு வகை உண்டு. அராபிகா, ரோபஸ்டா. இதில் அராபிகா விலை அதிகம். மெதுவாக வளரும் காபி இனம். காஃபீன் அளவும் அதிகமாக உள்ளது.  காபிச்சொடி வளர்ந்து காபி கொட்டைகளை அறுவடை செய்வதற்கு ஐந்து ஆண்டுகள் தேவை. பச்சையாக இருக்கும் கொட்டைகளின் மேலோடு சிவப்பாக மாறியபின் அறுவடை தொடங்கும். சிவப்பாக உள்ள மேலோடு வெயிலில் காய வைத்து அகற்றப்படுகிறது. இதிலுள்ள பீன்ஸ் முதலில் பச்சையாகவே இருக்கும். பின் அதனை வறுத்து பக்குவப்படுத்தும்போது அதன் நிறம் கருப்பாக மாறுகிற