சமூக விதிகளை மதிக்காத சைக்கோபாத் கொலையாளிகள்!
சமூகத்தில் விதிகள், நெறிமுறைகளை பின்பற்றி நடப்பதற்கு சோசியலைசேஷன் என்று பெயர். இது ஒரு சிக்கலான செயல்முறை. நடைமுறையில் விதிகள் எப்படி கடைபிடிக்கப்படுகின்றன என்பதே முக்கியமானது. அவை என்னென்ன என்று பார்ப்போமா, குழந்தை வளர்ப்பு, பள்ளி, சமூக அனுபவங்கள், மதரீதியான சடங்குகள், விழாக்கள் ஆகியவை இதில் அடங்கும். பொதுவாக ஒருவர் வாழ்ந்த வந்த சமூகத்தின் பண்பாடு அடிப்படையில் எதை செய்யவேண்டும் கூடாது என்பது தெளிவாக மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கும். ஆனால் சைக்கோபாத்களைப் பொறுத்தவரை தனது மனதில் உள்ள சமூக விதிகளை புறக்கணித்து தனது நலன்களுக்கு ஏற்பட ஒரு செயலைச் செய்வார்கள். இவர்களுக்கு குற்ற உணர்ச்சி என்பது அணுவளவும் இருக்காது. சமூக விரோத செயல்களான கொள்ளை, கொலை என எதுவும் இந்த மனநிலையில் சைக்கோபாத்களுக்கு சாத்தியமே. சிறுவயதில் ஒருவர் செய்யும் செயல், அதனால் ஏற்படும் பின்விளைவுகள், தண்டனை ஆகியவை அவரது பிற்கால வாழ்க்கையை மாற்றும். இந்த வகையில், சைக்கோபாத்களுக்கு மனதில் அறவுணர்வு இருக்காது. வங்கியை கொள்ளையடிக்க வேண்டும் என்றால் யோசித்த வேகத்தில் செய்வதற்கு தயாராக இருப்பார்கள். அதனால் என்னாகும், காவல்து