மனதில் பெருகும் எல்லையில்லாத வன்முறைக்கான காரணம்!

 










அசுரகுலம்

ரத்த சாட்சி 1.0

ஒருவர் மனதில் தோன்றும் அளவிடமுடியாத வன்முறைக்கு என்ன காரணம்? குறிப்பிட்ட சாதியினரின் ரத்தத்தில் வன்முறை உள்ளது என சிலர் கூறலாம்.ம ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அட்ரியன் ரைன் என்பவரின் தலைமையில் அமைந்த குழுவினர், மூளையில் ஏற்படும் வேதியல் மாற்றங்களை வன்முறைக்கு காரணம் என்று கண்டறிந்தனர். 

இவரின் ஆராய்ச்சியில் வன்முறையாளர்களின் மூளையில் உணர்ச்சிகளை இயக்கும் மூளையின் பகுதியில் நிறைய பகுதி செயல்படாமல் இருப்பது தெரிய வந்தது. இதனால் இந்த மனிதர்கள் செய்யும் செயல்களின் பயமே இருக்காது. ஆக்ரோஷமாக, குறைந்த எதிர்வினையாற்றும் விதமாக செயல்படுவார்கள்.

இவர்களை எளிதாக தூண்டிவிட முடியும். எடுக்கும் முடிவுகளிலும் பொறுமை, நிதானம் இருக்காது. அனைத்துமே அதிரடியாகத்தான் வன்முறையை இலக்காக கொண்டுதான் இயங்குவார்கள். 

கற்பனையின் துணையால் சூழலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்று நம்புபவர்கள் இவர்கள். பிறரை விட சிறப்பான தகுதிகள் கொண்டவர்கள் என நினைத்துக்கொண்டு வன்முறையைக் கையாள்வார்கள். கொலை செய்யாமல் இவர்களால் வாழவே முடியாது என கொலையை வல்லுறவுவை பிராண வாயு போல நினைத்துக் கொண்டு வாழ்வார்கள். வாழ்க்கையில் குறிப்பிட்ட நம்பிக்கையை பின்பற்றிக் கொண்டு வாழ்பவர்கள் பிற மனிதர்களை மிகவும் கீழானவர்களாக நினைக்கத் தொடங்கிவிடுவார்கள் அல்லவா? அதேபோல்தான் இவர்களும் வாழ்வார்கள்.  இந்த கருத்துகளை ஆராய்ச்சியாளர் ஸ்க்ராபெக் என்பவர் கோட்பாடாக வரையறுத்து கூறினார்.

கொலை செய்தால்தான் நிம்மதி என்பதுபோல உணர்வதால் பிறருக்கு, சமூகத்திற்கு தவறாக கருதப்படும் எதுவும் கொலைகாரர்களுக்கு தவறாக தெரியாது. அனைத்தையும் அவர்கள் அவர்களுக்கான உலகில் கருப்பு வெள்ளையில் காண்பார்கள். வல்லுறவு என்பதும் கொலை என்பதும் கொலையாளிகளுக்கு அழுத்தங்களிலிருந்து சுதந்திரம் தருவது போல உள்ளது. அதனால்தான் அதை விரும்பி அனுபவித்து செய்கிறார்கள். சிறுவயதிலேயே சிறு உயிரினங்களைக் கொல்வது, சித்திரவதை செய்வது என வளர்ந்து பரிணாம வளர்ச்சியில் மனிதர்களை சித்திரவதை செய்து கொல்ல ஆரம்பிக்கிறார்கள்.

சிறுவயதில் பலருக்கும் பார்க்கும் ஆட்களை அவர்கள் செய்யும் வேலைகளை தான் செய்யவேண்டுமென நினைப்பார்கள். அந்தவகையில் தொடர் கொலைகளை செய்யவேண்டுமென சிலர் உறுதிமொழி எடுத்து வாழ்கிறார்கள். உலகின் மிக இளம் வயது தொடர் கொலைகாரர்கள் வரிசையில் முதலில் இருப்பது பெண்கள்தான். ஆண்கள் அல்ல.

குடும்பத்திற்குள்ளே கொலை செய்து அதை மறைப்பதில் பெண்கள் சாமர்த்தியசாலிகள். அதை கண்டுபிடிப்பது சிறந்த துப்பறிவாளர்களால் மட்டும்தான் முடியும். அந்த வகையில் மேரி பெல் பற்றி வாசிப்போம். 1968ஆம் ஆண்டு நான்கு வயது மார்ட்டின் ப்ரௌன் என்று சிறுவன் காணாமல் போனான். இரண்டு நாட்களுக்குப் பிறகு மார்ட்டின் பிணமாக கண்டெடுக்கப்பட்டான். அவன் அருகில் நான் கொலையாகிவிட்டேன். ஆனால் நான் திரும்ப வருவேன் என எழுதப்பட்டிருந்தது. பிறகு இரண்டு மாதங்கள் கழித்து பிரையன் ஹோவே என்ற சிறுவன் கொல்லப்பட்டான். இவன் பாலியல் உறுப்புகள் கூர்மையான பொருளால் சேதப்பட்டிருந்தது. வயிற்றில் எம் என்ற எழுத்து எழுதப்பட்டிருந்தது. இதை விசாரித்த போலீஸ் அதிகாரிக்கு இருவர் மீது சந்தேகம் எழுந்தது. மேரி பெல் என்ற பதினொரு வயது சிறுமி, அடுத்து அவளின் தோழியான நார்மா பெல்.  

இரண்டாவது சிறுவனை புதைத்து வைத்திருந்தனர். பிணத்தை எடுத்து வரும்போது மேரி பெல் கைகளை ஒன்றுடன் ஒன்று தேய்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் சிரித்தாள். இதை கவனித்த டாப்சன், நார்மா, மேரிபெல் என இரு தோழிகளையும் விசாரித்தார். அதில் மேரி பெல்தான் கொலைகாரி என அறிந்தார். ஊடகங்கள் உடனே சாத்தானாக பிறந்த சிறுமி என தலைப்பிட்டு எழுத தொடங்கின.

மேரியின் வரலாறு தோண்டியெடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது. அதில் மேரி,விலைமாது ஒருவரின் மகள் என்றும், அவரது தாயால் நிறைய முறை கொல்லப்படும் வாய்ப்பிலிருந்து தப்பித்திருக்கிறார் என்று தெரிந்தது. ஐந்து வயதிலேயே உடலுறவு காட்சிகளை தாயின் அருகிலிருந்து பார்த்திருக்கிறார் என்பதையும் காவல்துறை அறிந்தது. இதுவே மேரிக்கு கொலை செய்யவும் பாலியல்   ரீதியதாக உடல் உறுப்புகளை சிதைக்கவும் தோன்றியிருக்கிறது என முடிவு செய்தனர்.

2

மேரிக்கு குற்ற வரலாறு பின்னணியில் இருந்தது. மோசமான பின்னணியில் இருந்து வந்தவள், இப்படி சிரமம் கொண்டாள் என கூறலாம். ஆனால், கிரைக் பிரைஸ் என்பவரின் வரலாறு இப்படி சாக்கு எதையும் சொல்ல முடியாத இயல்பைக் கொண்டது.

1998ஆம் ஆண்டு ரோட் ஐலேண்டில் வார்விக் என்ற  இடத்தில் வாழ்ந்த கருப்பின குடும்பத்தைச் சேர்ந்தவர் கிரேக் பிரைஸ். பதிமூன்று வயதில் தனது  குற்ற செயல்பாட்டைத் தொடங்கினார். இது அமெரிக்காவில் குற்றச்சாதனை. வயதுக்குத்தான் அந்த பெருமை. ஒரு வயதான பெண்மணியை வீட்டிலேயே வைத்து ஐம்பது முறைக்கு மேல் கத்தியால் குத்தினார் பிரைஸ். இதை இவர்தான் செய்தார் என யாருமே கூறமுடியாது. அந்தளவுக்கு நட்பாகவும் இனிமையாகவும் பழக கூடிய சிறுவன் கிரேக் பிரைஸ். அடுத்து இன்னொருவரின் வீட்டில் ஜன்னல் வழியாக உள்ளே குதித்து ஒரு பெண்மணி அவரின் இரு மகள்களையும் கத்தியால் குத்திக்கொன்றார் பிரைஸ். நூறுக்கும் அதிகமான கத்திக்குத்துகளை காவல்துறை மூவரின் உடலிலும் கண்டு அதிர்ந்தது.

கொலையானவரின் வீட்டில் தன் கையை கத்தியால் அறுத்த காரணத்தால் பிரைசின் ரத்தமும் அங்கு கண்டறியப்பட்டது. ஆனால் கூட அவர்தான் என உறுதிப்படுத்தும்  புத்தி துப்பறிவாளர்களுக்கு இல்லை. ஆனால் தடய அறிவியல் துறையினர் குளிர்பதனப் பெட்டியின் கைபிடியில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அதில்தான் பிரைஸ் மாட்டிக் கொண்டார். இருபது வயது வரை  சிறையில் இருந்தவருக்கு பிறகு ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இந்த காலத்தில் சிறை காவலர்களை அடித்து உதைத்ததால் 25 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.


 

 


கருத்துகள்