மனிதர்களைக் கொல்வது வேடிக்கையானது - கார்ல் பன்ஸ்ராம்

 











 

ரகசியமான உலகை உருவாக்கி அதில் தன்னைத்தானே மோகம் கொள்ளும் செயல்களை செய்தல், வாய்ப்பு வரும்போது கொலைகளை செய்வது, கொலைகளை செய்யத் தொடங்கி எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே செல்வது, குற்றங்களிலிருந்து ரகசியமாக தன்னை விடுவிக்கும் வழியைக் கண்டறிவது, சூழலுக்கேற்ப செயல்படுவது, மனதில் உள்ள விரக்தியை தொடர்ச்சியாக மறுசுழற்சி செய்து கோபத்தை ஆறாமல் பார்த்துக்கொள்வது ஆகியவை முக்கியமான உளவியல் அறிகுறிகளாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

கோபத்தை நாம் எங்கு பயன்படுத்துகிறோம், நமது கட்டுப்பாட்டில் உள்ளவர்களின் மீதுதானே, குறிப்பாக சொல்லவேண்டுமெனில் எதிர்க்க முடியாதவர்களின் மீது. அந்த வகையில் விலைமாதுக்கள், நோயாளிகள், குழந்தைகள் கொலையாளிகளின் முக்கியமான இலக்காகிறார்கள். இவர்களை எளிதாக தாக்கி தன் மனதிலுள்ள கோபத்தை, வலியை  அவர்களுக்கு கொலையாளிகள் காட்டுகிறார்கள்.  எளிமையாக இக்கருத்தை கூறவேண்டஉமெனில் பலவீனர்கள் மீது அதிகாரத்தை காட்டி அவர்களை அடிபணியச் செய்தல்.

பெண்களை வல்லுறவு செய்து இன்பம் அனுபவிக்கும் தொடர் கொலைகாரர்கள் தங்களது செயலின் மூலம் மனதிலுள்ள கோபத்தை விரக்தியை வெளிக்காட்டுகிறார்கள். கொலை என்பது இங்கு தவிர்க்க முடியாததாகிறதா என்றால், அப்படியெல்லாம் கிடையாது. வல்லுறவு செய்வதே பிறரை ஆதிக்கம் செய்வதுதானே? கட்டாயப்படுத்தி ஒருவரை இயங்க வைப்பது. பெண்களை இந்த வகையில் பயன்படுத்தியபிறகு உயிரோடு விட்டால் அவர்கள் தன்னை காட்டிக்கொடுத்துவிடுவார்கள் என்பதாலேயே கொலையாளிகள் கொன்றுவிடுகிறார்கள்.

சிறுவயதில் ஏற்பட்ட வல்லுறவு, வன்முறைகளை எதிர்கொண்ட அனுபவங்கள், பிறரால் கடுமையாக கட்டுப்படுத்துதல் ஆகியவை ஒருவரது உளவியலை சிதைக்கிறது. இதனால் அவர்கள் தங்களது உலகை காக்க கொலையை ஆயுதமாக கொள்கிறார்கள். பயம், உயிருக்கு கெஞ்சுதல், அழுகை ஆகியவை கொலையாளிகளுக்கு மெல்ல ரசிக்கும் தன்மையை ஏற்படுத்துகிறது. தான் பிறரை கட்டுப்படுத்தாதபோது அவர்கள் நம்மை கட்டுப்படுத்துவார்கள் என்ற பயம் அவரை செலுத்தும்போது கொலைக்குற்றங்கள் நடக்கின்றன.

இந்த வழக்கில் இருந்து என்னை விடுவித்தால் நீதிபதியையும் ஜூரிகளையும் உறுதியாக கொல்வேன்  என குற்றவாளி கூறுகிறார். இதை எப்படி எதிர்கொள்வது? கார்ல் பன்ஸ்ராம். இவர் குடிபோதையால் காவல்துறையால் பிடிக்கப்பட்டபோது வயது எட்டு. பிறகு, சீர்திருத்தப்பள்ளியில் சக மாணவர்களால் அடி, உதை என மோசமான நிலையில் வாழ்ந்தார். அங்கிருந்த சக கைதி, காவலர்களால் ஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்தப்பட்டார். ஒரு மனிதர் இன்னொரு மனிதனால் மனிதநேயமின்றி நடத்தப்படுவதை அனுபவித்தேன் என தனது டைரிக் குறிப்பில் எழுதி வைத்திருந்தார்.

உலகில் வாழும் மோசமான மனிதன் என தன்னைப் பற்றி எழுதி வைத்திருந்தவர், கார்ல் பன்ஸ்ராம். மொத்தம் இருபத்தொரு பேர்களை கொன்றார். இதில் நூற்றுக்கணக்கான ஆண்களை குதப்புணர்ச்சி செய்தார். கொலை, கொள்ளை, வல்லுறவு, குதப்புணர்ச்சி என்பதுதான் பன்ஸ்ராம் செய்த குற்ற வரிசை. மரணதண்டனை விதிக்கப்பட்டபிறகு தத்துவவாதியான பிரடெரிக் நீட்ஷே நூல்களை படித்துக்கொண்டிருந்தார். மனிதர்களைக் கொல்வது வேடிக்கையானது. உலகில் வாழும் மனித இனத்தையே வெறுக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் அனைவரையும் கொல்வேன் என கூறியவர் பன்ஸ்ராம்.

 

 

 

 

 

 

 

 

 


கருத்துகள்