சூரிய வெளிச்சத்தை தடுக்க தடுப்பரணாக அமையும் கண்ணாடி தாள்!

 
















பூமியைக் காக்க விண்வெளியில் தடுப்பு அரண்

உலகை காக்க நிலப்பரப்பில், நீர்ப்பரப்பில் செய்யும் பல்வேறு திட்டங்களுக்கு ஜியோ எஞ்சினியரிங் என்று பெயர். ஆனால் இந்த திட்டங்கள் அங்கேயே நின்றுவிடக் கூடியவை அல்ல. விண்வெளியிலும் இந்த திட்டங்களை செயல்படுத்தலாம் என சில அறிவியலாளர்கள் முயன்றுள்ளனர். இவை கோட்பாடு அளவில் வியப்பு ஏற்படுத்துவனதான். ஆனால் சாத்தியமா என்பதுதான் யோசிக்க வேண்டியதாக உள்ளது.

இன்று பூமியைக் காக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. அதில் முக்கியமானது, சூரியனின் வெப்பத்தை எப்படியாவது பிரதிபலித்து வெப்பத்தையும், புற ஊதாக் கதிர்களையும் தடுப்பது. இந்த வகையில் ஒரு முயற்சியை ஜேம்ஸ்  என்பவர் 1989ஆம் ஆண்டு செய்தார். அதாவது பூமியின் புவி வட்டப்பாதையில் சூரிய வெளிச்சத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிகளை உருவாக்கி பொருத்திவிடுவது…. இதன் மூலம் அந்த சூரிய வெளிச்சம் அப்படியே விண்வெளிக்கு சென்றுவிடும். கதிர்வீச்சும்தான். இதனால் பூமி எளிதாக வெப்பமயமாதல் பாதிப்புக்கு உட்படாது. மக்களும் பாதிப்படைய மாட்டார்கள். கதையின் மையம் என தந்தி அளவுக்கு சுருக்கமாக சொல்லும் விவகாரம்தான். ஆனால் செயல்படுத்துவதுதான் மிக கடினமானது.

1,250 மைல் அகலத்திற்கு கண்ணாடி தாளை உருவாக்கி புவிவட்டப்பாதையில் பொருத்த வேண்டும். இதுதான் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் தடுப்பரணாக , தடையரணாக இருக்கும். இன்று ஜேம்ஸ் சொன்னபடி முயற்சிகளை செய்ய முடியவில்லை என்பதற்கு காரணம், கண்ணாடி தாளுக்கு ஆகும் செலவுதான். இப்போது உருவாக்கி விண்வெளியில் செலுத்தும் செயற்கைக் கோள்கள், ஆய்வுக்கலன் அனைத்திலும் சூரிய வெளிச்சத்தை பிரதிபலிக்கும் அமைப்புகளை உருவாக்கி அனுப்பி வருகின்றனர். ஏனெனில் விண்வெளியில் உள்ள சூரிய வெளிச்சத்தை ஆற்றலை பயன்படுத்தித்தான் செயற்கைக்கோள் அதிக காலம் இயங்க முடியும். அதேசமயம் அங்குள்ள வெப்பத்தை சற்று பிரதிபலித்தால்தான் எந்திரங்கள் இயங்க முடியும். இல்லையென்றால் வெடித்து சிதறி விடும்.

 

இதற்காக எல் எனும் சூரிய, பூமியின் ஈர்ப்பு விசை சற்று சமநிலையாக உள்ள இடத்தைக் கூட கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால் பிரச்னை என்னவென்றால் திடீரென சூரிய ஒளி குறைந்து ஓரிடம் உறைந்தும், ஓரிடத்தில் வெளிச்சமே கிடைக்காத போது என்னாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. எனவே ஜேம்ஸின் திட்டம் பெரியளவுக்கு முன்னேற்றம் காணவில்லை.  பூமிக்கு வரும் ஒட்டுமொத்த சூரிய வெப்பத்தைக் கட்டுப்படுத்தி, குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வெப்பத்தை பிரதிபலிப்பதுதான் திட்ட நோக்கம். நாசா, ஐரோப்பிய ஒன்றிய விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் இதை ஏற்றாலும் பல்வேறு தடைகளால் திட்டம் முன்னேறவில்லை.

இன்று இந்த திட்டம் கைவிடப்பட்டாலும் கூட எதிர்காலத்தில் மீண்டும் கையில் எடுக்கப்படலாம். அந்தளவு வெப்பம் பற்றிய பிரச்னை இப்போது இல்லை. ஆனால் எதிர்காலத்தில் காலநிலை மாற்றம் பிரச்னையாக மாறும்போது  கண்ணாடித் தாளை கையில் எடுப்பார்கள்.

ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்

 

 

 

 


கருத்துகள்