இடுகைகள்

கட்டுமானம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதுயுக தலைவர்கள் - எதிர்காலத்திற்கு ஏற்ற கட்டுமானங்கள்

படம்
            next generation leaders -time அரைன் ஆப்ராமியன் கட்டுமானக் கலைஞர் லெபனான் நாட்டின் பெய்ரூட்டில் உள்ள கட்டுமானக் கலைஞர். ஆர்மேனிய இனத்தைச் சேர்ந்தவரான இவர், பெய்ரூட்டின் கிழக்குப்பகுதியில் தங்கி வாழ்ந்தபோது வீடுகள் குறுகியதாக இருந்தன. வசிக்கவே இடமில்லாதபோது விளையாட இடம் எங்கு கிடைக்கப்போகிறது? அரைன் குடும்பமாக தங்கியிருந்த இடத்தில், பூங்காக்களோ, விளையாட்டு மைதானமோ ஏதுமில்லை. இதுவே அவர் பின்னாளில் உருவாக்கிய கட்டுமானங்களில் திறந்தவெளிகள் அதிகம் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். அரைனின் அம்மாவுக்கு அறிவியல் திரைப்படங்கள் என்றால் அந்தளவு இஷ்டமாம். எனவே, அனிமேஷன், எழுத்துகள், ஓவியங்கள் என பலவற்றிலிருந்து கட்டுமான கலைக்கான ஐடியாக்களை பிடித்து வருகிறார். அரைனின் கட்டுமானங்களில் உள்ள சிறப்பம்சம், அவை எதிர்காலத்திற்கான சிக்கல்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்படுவை என்பதுதான். ஒருமுறை சகாரா பாலைவனத்தில் அருகில் உள்ள குளம் ஒன்றில் உள்ள உப்பு, களிமண், கனிமங்கள் கொண்டே கட்டுமானம் ஒன்றை உருவாக்கித் தர கூறியிருக்கிறார்கள். அதையும் செய்து சாதித்திருக்கிறார். ஏற்கெனவ...

நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு திரும்பி வந்து சுற்றுலாவை வளர்க்கும் இளைஞர்கள்!

படம்
            கிராமங்களில் வளரும் சுற்றுலா சீனாவில் ஆறு லட்சத்திற்கும் அதிகமாக தனித்துவ கலாசார, உணவு, பண்பாட்டு தன்மை கொண்ட கிராமங்கள் உள்ளன. அவற்றைப் பார்க்க உலகமெங்கும் உள்ள பயணிகள் ஆர்வமாக வந்து குவிகின்றனர். இதை சீனாவில் வளர்ந்து வரும் இளம் தொழில்முனைவோரும், இளைஞர்களும் ஊக்கப்படுத்தி வருகிறார்கள். சுற்றுலாவை மேம்படுத்த சீன அரசும், உள்ளூர் நிர்வாகமும் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவில் உள்ள எட்டு கிராமங்களை சிறந்த சுற்றுலா கிராமங்கள் என சர்வதேச சுற்றுலா அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது. இந்த அமைப்பு, ஐ.நாவுடையது. எடுத்துக்காட்டாக ஷிதி கிராமத்தைப் பார்ப்போம். இந்த கிராமத்தில் பட்டுப்புழு வளர்ப்பு, தேயிலைப் பயிர் ஆகியவை முக்கியமான தொழில்கள். 1986ஆம் ஆண்டு, சுற்றுலா துறை மேம்பட்டது. கிராமத்தில் உள்ள வரலாற்று கட்டுமானங்கள், ஹூய்சூ கலாசாரம் ஆகியவை பிரசாரம் செய்யப்பட, உலக நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் சீனாவுக்கு வருகை தரத் தொடங்கினர். தொடக்கத்தில் உள்ளூர் மக்கள் சுற்றுலா வணிகத்தை கையாண்டாலும் பின்னாளில் 2013க்குப் பிறகு சுற்றுலாவுக்கென தனி ந...

யானைகள் கணக்கெடுப்பு - தள்ளிப்போகும் காரணம்!

படம்
               2022-23ஆம் ஆண்டுக்கான யானைகளின் கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அடுத்த ஆண்டு வெளியிடப்படக்கூடும். இப்போது, ஊடகங்களில் அரசின் அறிக்கையில் உள்ள தகவல்கள் மெல்ல வெளியே வந்துள்ளன. அதுவும் சூழலுக்கோ, நமக்கோ நல்ல செய்தியை சொல்வதாக இல்லை. கிழக்கு, மத்திய, தென் பகுதி இந்தியாவில் யானைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. மேற்குவங்கம் - தெற்கு 84 %, ஜார்க்கண்ட் 64%, ஒடிஷா 54%, கேரளம் 51% என யானைகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது. வளர்ச்சி திட்டங்கள், சுரங்கம் தோண்டுவது, கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவையே யானைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வர காரணம். யானைகளின் எண்ணிக்கையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுத்து வருகின்றனர். தொண்ணூறுகளில் இருந்து இந்த செயல்பாடு நிற்காமல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. புதிய கணக்கிடும் முறையாக டிஎன்ஏ ஆவணப்படுத்துதல் பயன்படுகிறது. இந்த முறையில் கணக்கீடு மட்டுமே செய்யப்படுகிறது. வேறு எந்த ஆலோசனைகளும் கூறப்படுவதில்லை. 2002ஆம் ஆண்டு வரை நேரடியாக யானைகளைப் பார்த்து கணக்கீடு செய்...

கட்டுமானங்களுக்கு குப்பைகேள போதும்!

படம்
  கட்டுமானங்களுக்கு குப்பைகளே போதும்!  கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரியில் சூழலுக்கு உகந்த வகையில் வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்கள். இந்த வீட்டை அங்குள்ள மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். இதில் பயன்படுத்தும் பொருட்கள் , பலவும் குப்பைக்கிடங்கில் இருந்து பெறப்பட்டவை.  இந்த வீட்டுக்கு உரிமையாளர் அபிஷேக், பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார்.  இவருக்கு சூழலை மாசுபடுத்தாதபடி வீட்டைக் கட்டும் ஐடியாவைக் கூறியது பொறியாளர் வினு கோபால்.  அதனை வடிவமைத்தவர் கேரளத்தைச் சேர்ந்த பவாஸ் தென்கிலன். வினு கோபால், குப்பைச் சுவர் (Debris wall ) என்ற நுட்பத்தை காப்புரிமை செய்து வைத்துள்ளார். இதன்படி, 2007ஆம் ஆண்டு முதல் கட்டடங்களை வடிவமைத்து வருகிறார். இவர், உருவாக்கும் கட்டடங்கள் அனைத்துமே பிறர் தூக்கியெறிந்த குப்பைகளாலானவை.   கட்டுமானப் பொருட்களை 5 கி.மீ. தொலைவுக்குள் உள்ள குவாரி, கட்டுமான இடங்கள் ஆகியவற்றிலிருந்து கழிவுப்பொருட்களிலிருந்து பெறுகிறார்.  அதை சேகரித்து வீடுகளை கட்டிவருகிறது வினுவின் குழு. இந்த வகையில்  தூக்கியெறியப்பட்ட ...

மக்களை புன்னகைக்க செய்ய நினைத்தேன்! பாலகிருஷ்ண தோஷி, கட்டுமானக் கலைஞர்

படம்
பி.வி. பாலகிருஷ்ணா தோஷி கட்டுமான கலைஞர்  பிரைட்ஸ்கர் பிரைஸ் என்ற கட்டுமான கலையின் நோபல் என்று அழைக்கப்படும் பரிசைப் பெற்றிருக்கிறீர்கள். இதோடு ராயல் கோல்டு மெடல் பரிசும் கிடைத்துள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ரிபா அமைப்புடன் எனது தொடர்பு பல்லாண்டுகளாக இருந்து வருகிறது. கட்டுமானக் கல்வியை படித்தபோதிலிருந்து எனக்கு அந்த அமைப்புடன் நல்ல உறவு உண்டு.  நான் ரிபா அமைப்பின் நூலகத்தை பயன்படுத்தி வந்தேன். அங்கு படித்த நூல்களைப் பற்றிய நினைவுகள் எனக்கு இன்றும் இருக்கிறது.  அவை சிறப்பானவை. லே கார்பசியர் ரிபா தங்கமெடல் விருதை வாங்கும்போது நான் அவருடன் தான் இருந்தேன்.  லே கார்பசியரை எப்படி உங்களது குரு என்று சொல்லுகிறீர்கள்? ஒரு இடத்தில் வெளிச்சம் எப்படி இருக்கவேண்டும், அமைப்பு, மேசைகளின் இடம் பற்றியெல்லாம் விளக்கியிருக்கிறார். இதைப்பற்றி எழுதிய தாள் எனது மேசை டிராயரில் இப்போதும் உள்ளது. பின்னாளில் தான் அவர் வரைந்து வைத்த இடம் உண்மையில் கிடையாது என்றும், தாளில் மட்டும் தான் உருவானது என தெரிந்தது. ஆனால் அவரது கிரியேட்டிவிட்டி என்னை ஆச்சரியப்படுத்தியது என்று தனியாக கூறவேண்ட...

கண்ணாடிக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் மர இழை நுட்பம்!

படம்
  கண்ணாடிக்கு மாற்றாக பசுமைத் தீர்வு! அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கண்ணாடியைப் போன்ற  ஒளி ஊடுருவும்  தன்மையில்  இருக்கும் மர இழைகளை  உருவாக்கியுள்ளனர்.  தற்போது, நவீனமாக கட்டும் கட்டடங்களுக்கு மெருகூட்டுவதாக கண்ணாடியே பயன்படுகிறது. இதனை ஜன்னல்களுக்கு மட்டுமல்லாமல் கட்டடம் முழுக்கவே பயன்படுத்தி புதுமையாக கட்டுமானங்களை உருவாக்கி வருகின்றனர். அழகாக இருந்தாலும் ஆற்றல் அதிகமாக செலவழித்து உருவாக்கப்படுவதும், எளிதாக மறுசுழற்சி செய்யமுடியாத தன்மையும் இதன் முக்கியமான பாதக அம்சங்கள்.  அமெரிக்காவிலுள்ள மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தீர்வை மரத்திலிருந்து கண்டுபிடித்துள்ளனர். கண்ணாடியைப் போன்றே  ஒளி ஊடுருவும் மர இழைகளை  சோதனையில் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சோதனை மூலம் இயற்கைச் சூழலுக்கு பாதிப்பு வராதபடி மர இழைகளை பக்குவப்படுத்தி கண்ணாடி போலாக்கி வீடுகளில் பொருத்த முடியும். கண்ணாடியில் ஒளி ஊடுருவும். ஆனால் மரத்தில் ஒளி ஊடுருவமுடியாதே அதனை எப்படி கண்ணாடியாக பயன்படுத்துவது என பலரும் நினைப்பார்கள். இதற்கு முக்கிய...