ராப் இசையால் சமூக பிரச்னைகளைப் பேச முடியும்! - பரவும் ராப், ஹிப்-ஹாப் இசைக்குழுக்கள்
swadesi சமூகப் பிரச்னைகளை தீர்க்கும் இசை ! இன்று திரைப்படங்கள் சமூக பிரச்னைகள் பற்றி பேசுவது குறைந்துவிட்டது . அரிதாகவே சில முதுகெலும்பு உள்ள இயக்குநர்கள் பிரச்னைகளை சந்தித்து படங்களை வெளியிடுகிறார்கள் . அவையும் பார்க்கப்படுவது மக்கள் கையில்தான் உள்ளது . ஆனால் தனியிசை பாடல்களாக இசைக்கலைஞர்கள் வெளியிடும் பாடல்கள் இணையம் வழியாக எளிதாக மக்களைச் சென்று சேர்கிறது . இதனை இந்தி திரைப்படம் கல்லி பாய் முதன்முதலில் தொடங்கி வைத்தது . இப்படத்தில் இசைக்கலைஞர் டிவைனின் வாழ்க்கை சித்திரிக்கப்பட்டது . மேல்நாட்டுப் பாடல்களை பார்த்தால் அழகான செட் , ஃபெராரி காரில் வந்து தன்னை மறந்து போன காதலியைப் பற்றி பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்கள் . இன்று அதற்கு மாற்றாக சமூக பிரச்னைகளைப் பற்றி பாடத்தொடங்கியிருக்கிறார்கள் . தமிழில் அறிவு அப்படியொரு பணியை செய்துகொண்டிருக்கிறார் . ahmer javed வட இந்தியாவில் தாராவி குடிசையில் பிறந்த வளர்ந்த ராப் பாடகர்கள் இனம் , மத வேறுபாடுகள் , ஏழைகளின் பிரச்னை , பாகுபாடு என்ற பல்வேறு விஷயங்களையும் அனைவரும் அறிய பாடி வருகிறார்கள் . அஹ்மர் ஜாவேத் , அர்ஷத் மாலிக் ஆகியோர் இவ