இடுகைகள்

ஜூலை 2021 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசுரகுலம் 2 - குற்றங்களின் முன்கதை - சீரியல் கொலைகாரர்களின் நதிமூலத்தை ஆராயும் நூல்!

படம்
        அசுரகுலம் முதல் பாகத்தில் குற்றவாளிகளைப் பற்றிய கதைகளைக் கூறியது. இரண்டாவது பாகமான குற்றங்களின் முன்கதையில் குற்றங்களை செய்தவர்களின் உளவியல் சிக்கல்கள், கொலை செய்த முறை, அவர்கள் பெற்ற தண்டனை, குற்றங்களைப் பற்றிய மக்களின் மனநிலை, இதனை மக்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது பற்றிய விவரங்கள் கூறப்பட்டிருக்கிறது.  உடலுக்கு வரும் நோய்களைப் போலவே மனதில் ஏற்படும் உளவியல் சிக்கல்களையும் பார்க்க பழகுவது இப்போதுதான் தொடங்கியுள்ளது. இந்த நூல் உளவியல் சார்ந்த அறிகுறிகளை விளக்கி அதனை கவனமாக பார்க்கவேண்டும் வலியுறுத்துகிறது. உளவியல் குறைபாடுகளை சாதாரணமாக பார்க்க கூடாது என்பதை இந்த நூலை வாசிக்கும் வாசகர்கள் உணர்வார்கள் என்று உறுதியாக நம்பலாம். அசுரகுலம் நூலைப் படிக்காதவர்களும் இந்த நூலை வாசிக்கலாம். குற்றங்களைப் பற்றிய ஆவணப்படுத்துதல் மேற்குலகில் அதிகம் உண்டு. அந்த வகையில் தமிழில் இதுபோன்ற நூல்கள் குற்றங்களை குறைப்பதில் உதவும். அறிவியல் முறையில் குற்றங்களை எப்படி காவல்துறையினர் அணுகி சீரியல் கொலைகார ர்களை பிடிக்கிறார்கள் என்பதையும் நூல் பேசுகிறது. அமேசானில் வாசிக்க.... https://www.amazon.in/dp

அமெரிக்கர்களின் தனிமையைப் பேசும் நூல்! - நூல் அறிமுகம் ஜூலை மாதம் 2021

படம்
              ரேஷர் பிளேட் டியர்ஸ் எஸ் . ஏ . காஸ்பை தனது மகன்களையும் , தம்பதிகளையும் கொன்ற கொலைகாரர்களை அவர்களின் தந்தை யர் இருவரும் சேர்ந்து எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதுதான் கதை . நிகழ்கால கதையின் நடுவே பழிவாங்குபவர்களின் கடந்தகால வாழ்க்கையு்ம் வந்துபோகிறது . அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் நடைபெறும் வன்முறையான சம்பவங்கள் கொண்ட கதை . கோஸ்ட் ஃபாரஸ்ட் பிக் சுயன் ஃபங்   அப்பா இறந்த பிறகு அவரைப் பற்றிய இறந்த கால விஷயங்களை மகள் எப்படி தெரிந்துகொள்கிறாள் என்பதைப் பற்றி இந்த நூல் விவரித்துச் செல்கிறது . இந்த கதையில் மகளின் மனதிலுள்ள கேள்விகள் , குடும்பம் , அவளுக்கு கிடைத்த அன்பு பற்றிய ஏராளமான விஷயங்களுக்கு பதில் கிடைக்கிறது . சீக் யூ கிரிஸ்டன் ராட்கே வரலாறு , தனிமை , ஒருவருக்கொருவர் எப்படி தகவல் தொடர்பு கொள்வது என பல்வேறு விஷயங்களை விளக்கி கிராபிக் கட்டுரை நூலாக ஆசிரியர் எழுதியுள்ளார் .