31 வயதில் 120 பேர்கொண்ட குழுவுக்குத் தலைவர்! - ஜோஹோ பள்ளியின் சாதனைக் கதை
ஸ்ரீதர் வேம்பு, இயக்குநர், ஜோஹோ பொதுவாக தமிழ்நாட்டில் சாதித்து பெரிய இடங்களுக்கு நகர்பவர்கள், எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். விவசாயிகள், வீட்டுவேலை செய்பவர்களாகவே இருப்பார்கள். இந்தியளவில் எடுத்துக்கொண்டால், பஞ்சாப்பின் புதிய முதல்வரின் அம்மா, பள்ளிக்கூடத்தில் கூட்டிப்பெருக்கும் வேலை செய்தவர், செய்து வருபவர்தான். செய்யும் வேலையை புனிதப்படுத்துவதற்காக சொல்லவில்லை. சாதிரீதியாக, திறன் ரீதியாக நிறைய வேறுபாடுகள் இங்குள்ள மனிதர்களுக்கு இடையே உள்ளது என்பதை கூறவே முந்தைய பாரா. பார்த்திபனுக்கு வயது 31. ஜோகோ நிறுவனத்தின் மேனேஜ் எஞ்சின் என்ற நிறுவனத்தில் வேலை செய்கிறார். புரோடக்ட் மேனேஜராகப் பணி. இந்தப் பணியில்தான் 120 பேரைக் கட்டி மேய்க்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திபனுக்கு இருந்த கனவு, கட்டுமானக் கலைஞர் ஆவதுதான். ஆனால் அவரது குடும்பம் இருந்த பொருளாதார நிலையில் அது சாத்தியமில்லை என விரைவில் தெரிந்துகொண்டார். நான்கு பேர் கொண்ட குடும்பம், மாதம் அப்பா சம்பாதிக்கும் 3 ஆயிரத்தில்தான் நடந்து வந்தது. ஆங்கிலப்பள்ளியில் படித்தவர்கள், வருமானப் பற்றாக்குறையால் அங்கிருந்து வெள