இடுகைகள்

உயிர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிறக்கும் உயிர்களுக்கான நோக்கம் - எரிக் எரிக்சன்

படம்
  பிறந்த உயிர்களுக்கு குறிப்பிட்ட நோக்கம் இருக்கிறது. அதை நிறைவேற்றிக்கொள்ளவே உயிர்கள் முயல்கின்றன என உளவியலாளர் எரிக் எரிக்சன் கருதினார். மனிதர்களின் ஆளுமை எட்டு வகையான நிலைகளைக் கொண்டது. இந்த நிலை பாரம்பரியம், சூழல் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு இயங்குகிறது என்று கூறினார்.   நம்பிக்கை/ அவநம்பிக்கை - ஒரு வயது குழந்தையின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் நம்பிக்கை உருவாகிறது. அப்படி நிறைவேறாதபோது அவநம்பிக்கை உருவாகிறது. இந்த அவநம்பிக்கை குழந்தையின் எதிர்கால உறவுகளைப் பாதிக்கிறது.  சுயமான இயக்கம்/ சந்தேகம், அவமானம் - பதினெட்டு மாதம் முதல் 2 ஆண்டுகள் புதிய விஷயங்களை குழந்தை செய்யத் தொடங்குகிறது. ஆனால், செய்யும் செயலில் சந்தேகம், தோல்வியானால் அவமானம் அடைகிறது. வெற்றி, தோல்வி என இரண்டையும் குழந்தை வேறுபடுத்திப் பார்க்கிறது.  செயல்/குற்றவுணர்வு - மூன்று தொடங்கி ஆறு வயது வரை குழந்தை, குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்களை செய்யத் தொடங்குகிறது.இந்த காலகட்டத்தில் செய்யும் செயல்களுக்கு தரப்படும் தண்டனை, கடுமையான குற்றவுணர்ச்சியில் தள்ளுகிறது.    செயலூக்கம்/ தாழ்வுணர்ச்சி - ஆறிலிருந்து பனிரெண்டு வயது வரை இந்

பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் நேரும் உயிரிழப்புகளை தடுத்து புலிகளை காக்க முயல்கிறோம் - வீரேந்திர திவாரி

படம்
  வீரேந்திர திவாரி வீரேந்திர திவாரி தலைவர், வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா திவாரி, மகாராஷ்டிராவில் பணியாற்றி வருகிறார். காடுகளின் பாதுகாப்பு, அதில் வாழும் புலிகளின் அழிவு, அதை தடுக்க அமைப்பு செய்யும் முயற்சிகள் பற்றி பேசினோம். உங்கள் அமைப்பின் பங்களிப்பு பற்றி கூறுங்கள். நாட்டின் காடுகளிலுள்ள புலிகளைப் பாதுகாப்பது, அதன் எண்ணிக்கை பற்றிய ஆய்வுகளை செய்வது. இதன் அடிப்படையில் பல்வேறு கொள்கைகளை வகுப்பது ஆகியவற்றை வைல்ட் லைஃப் ஆஃப் இந்தியா அமைப்பு செய்கிறது. அடுத்து, புலிகள் வாழும் நிலப்பரப்பு, அதன் வரைபடம், அழிந்த புலிகளை மீட்பது, அதன் மரபணு சார்ந்த அடையாளம், தேவையான வனத்துறை ஊழியர்களை நியமிப்பது ஆகியவற்றையும் செய்து வருகிறோம். உங்களது பார்வையில் இந்திய மாநிலங்களில் எவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன? கடந்த 50 ஆண்டுகளாக, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, உத்தராகண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் புலிகளைக் காப்பது தொடர்பாக பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறார்கள். புலிகளைக் காப்பதில் உள்ள சவால்கள் என்னென்ன?   சட்டவிரோத வேட்டை, மின்சார வேலி, பாதுகாப்ப

வெளியில் அழகானவர் உள்ளே உறுமும் விலங்கு!

படம்
  சில பெற்றோர்கள் தங்களுக்கு பெண் பிள்ளை பிறக்கும் என நினைப்பார்கள். ஆனால் ஆண் குழந்தை பிறந்துவிட்டால், என்ன   செய்வது? ஆசையை எதிர்பார்ப்பை விட்டுவிட முடியாது. எனவே, ஆண் பிள்ளைக்கு பெண் பிள்ளை போல உடை உடுத்துவது, தலையில் பூ வைத்து புகைப்படம் எடுப்பது எல்லாம் உண்டு. இதெல்லாம் கொஞ்ச ஆண்டுகள்தான். அப்புறம் ஆண்களுக்கான உடைகளை உடுத்தக் கொடுப்பார்கள். ஆனால் சில பெற்றோர் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளையின் உடைகளைக் கொடுத்து அணிய வைப்பார்கள், விருந்துகளில் பங்கேற்பார்கள். இதனால் பிள்ளைகளின் மனம் என்னவாகும் என்பதை அவர்க ள் யோசிப்பதில்லை. பாலின வேறுபாடு குழப்பம் பிள்ளைகளுக்கு ஏற்படுகிறது. சமூக அழுத்தம் அவர்களை ஆணா, பெண்ணா என இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வற்புறுத்துகிறது. இதில் பெற்றோரின் ஆசை வேறு தனி நெருக்கடியைத் தருகிறது. இதனால் கேலி, அவதூறு ஆகியவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள். தொடர்கொலைகாரர்கள் இப்படித்தான் உருவாகிறார்கள். பெரும்பாலும் தாய்கள்தான் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளை போல உடை உடுத்தி பார்த்து மகிழ்கிறார்கள். இதனால் இப்படி வளரும் பிள்ளைகள், அம்மாவை கொல்வதாக நினைத

மறைந்துள்ள பாலைவன நகரின் பொக்கிஷத்தை எடுக்க நடக்கும் போராட்டம்! - சாண்ட் சீ - சீன தொடர்

படம்
  சாண்ட் சீ - பிரதர் ஹாவோ   சாண்ட் சீ (2018) சீன டிவி தொடர் 53 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் இயக்குநர்கள் – லீ ஸே லூ, மாவோ குன் யூ, சூ ஷி திரைக்கதை எழுத்தாளர்கள் – ஸாங் யுவான் ஆங்க், டாங்க் ஷி சென் அம்மா இல்லாமல் அப்பாவின் அடி, உதைகளை வாங்கி வளர்கிறான் லீ சூ, பல்கலைக்கழக தேர்வை எழுதவெல்லாம் விருப்பமில்லாத மனநிலை. இவனுக்கு இருக்கும் ஒரே தோழன், சூ வான். பணக்காரன். இவன் நன்றாக படிப்பவன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் தனது பள்ளியில் மாணவிகளை படமெடுத்து வைத்து, யாரோடு டேட்டிங் போகலாம் என யோசிப்பவன்.   அடுத்து, ஹாவோ. இவன் பள்ளியில் படிப்பவனல்ல. இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும் நிறுவனத்தை ஹாவோவின் பாட்டி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஹாவோ ஆதரவாக இருக்கிறான். இவனது வேலை சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பது.   பிறகு பணக்காரன் பள்ளி மாணவனான சூ வானை ஏதோ ஒருவகையில் மிரட்டி காசைப் பிடுங்குவது… இந்த மூன்றுபேர்களின் நட்புதான் தொடரின் முக்கியமான அம்சம். இது கடந்த காலத்தில் நட்பாக இருந்த அயர்ன் ட்ரையாங்கில் என்ற மூவரை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது.   பள்ளி மாணவன் லீ சூ, ஒர

அவசர சிகிச்சையில் நோயாளிகளிடம் கேள்வி கேட்கும் முறைகள்!

படம்
    மூச்சு விடுவதில் பிரச்னை, கண்பார்வை மங்கலாவது, சிறுநீர் வெளியேற்ற சிரமப்படுவது, சமநிலை குலைந்து மயக்கமாவது, உணர்வுநிலை தேய்வுநிலை அடைவது, கவனம், சிந்திப்பது தேக்கம் பெறுவது ஆகியவற்றை   அவசர சிகிச்சையில் சேர்க்கலாம்.   காய்ச்சல் குழந்தைகளுக்கு காய்ச்சல் அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளில் ஒன்று. ஆனால் பெற்றோர் குழந்தைக்கு வரும் காய்ச்சலைப் பார்த்து பதற்றமாவார்கள். வைரஸ், பாக்டீரியா நோய்த்தொற்று, சிறுநீரகத் தொற்று, நிம்மோனியா, காயங்களால் ஏற்படும் தொற்று, மலேரியா, அறுவை சிகிச்சை செய்த நிலை, புற்றுநோய், ஒட்டுண்ணி, ஆர்த்தரைட்டிஸ்   என பல்வேறு நோய் பாதிப்புகளின் போது காய்ச்சல் ஏற்படும்.     ரத்தப்போக்கு உடலில் நடைபெறும் ரத்தப்போக்கு சிலசமயங்களில் வலி அல்லது வலியற்ற தன்மையில் இருக்கலாம். காயங்களிலிருந்து ரத்தம் வெளியேறுதல், யோனியிலிருந்து ரத்தம் வெளியாகுதல், சிறுகுடலில் ரத்தகசிவு, ரத்தசோகை,   வான் வில்பிராண்ட் நோய் (ரத்தம் உறையாத நிலை) ஆகியவற்றின் மூலம் ரத்தம் உடலில் இருந்து வெளியேறும். சமூக காரணிகள் குடிநோயாளிகள், வீடற்றவர்கள், ஆதரவற்று தன்னை பராமரிக்க முடியாதவர்கள், ப

செத்தும் பிழைத்து வந்து எதிரிகளை அடித்து நொறுக்கும் அதிசாகச நாயகன்! யமுடிக்கி மொகுடு - சிரஞ்சீவி, ராதா, விஜயசாந்தி

படம்
  யமுடிக்கி மொகுடு சிரஞ்சீவி, ராதா, விஜயசாந்தி இயக்கம் - ராஜ் பினி செட்டி தமிழில் அதிசயப்பிறவி என்ற ரஜினிகாந்த் நடித்த படம் என நினைக்கிறேன். அதைத்தான் தெலுங்கில் ரீமேக் செய்து சிரஞ்சீவி அட்டகாசமாக நடித்து படமாக்கியிருக்கிறார்கள்.  சென்னையில் வாழும் காளி என்ற ரௌடிக்கும், சட்டவிரோத தொழில் செய்யும் இரு பணக்கார ர்களுக்கும் நேரும் பிரச்னைதான் படத்தில் வரும் முதல் பகுதி. இதில் பணக்கார ர்கள் விரோதிகளாக இருந்து பிறகு நண்பர்களாகி காளியை லாரி மூலம் விபத்துக்குள்ளாக்கி கொல்கிறார்கள். பிறகு, காளியின் ஆன்மா எமலோகம் சென்று தனக்கான நீதியைப் பெற்று திரும்ப வந்து எதிரிகளை அழிப்பதுதான் கதை.  இன்னொருபுறம், கிராமத்தில் பெரும் சொத்துள்ளவரின் வாரிசு, பாலு. இவரது சித்தப்பா. அதாவது பாபாய். பாலுவை பயந்தாங்கொள்ளியாக வைத்துக்கொண்டு அவரது சொத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். பாலுவின் அம்மா பெரிய வீட்டில் இருந்தாலும் வேலைக்காரி போல வேலைகளை செய்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில் இறந்துபோன காளியின் ஆன்மா பாலுவின் உடலுக்குள் புகுந்தால் எப்படி இருக்கும்? அதேதான். ரவுசுதான். கூடவே அப்பிராணி பாலுவுக்கு பாவாடை தாவணியில் வ

பச்சை விரியனின் தாக்குதலுக்கு பலியாகும் மக்கள்!

படம்
   பச்சை விரியனின் விஷத் தாக்குதல்! இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பாம்புகளால் மனிதர்கள் கடிபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு, 64 பாம்புகள் வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 15 பாம்பினங்கள் விஷத்தன்மை கொண்டவை. இதில் க்ரீன் பிட் வைப்பர் எனும் பாம்பினத்திலுள்ள பல்வேறு வகை பாம்புகளால் தான் மனிதர்கள் அதிகம் கடிபட்டுள்ளனர். இந்த பாம்பின் விஷத்தை ஹீமோடாக்ஸிக் ( Hemotoxic venom)என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.  கண்ணாடி விரியன், புல் விரியன் ஆகிய பாம்பினங்களை விட க்ரீன் பிட் வைப்பரின் விஷம் கடுமையானதல்ல. காணப்படும் நிலப்பரப்பைப் பொறுத்து பாம்பின் விஷம் மாறுபடுகிறது. மேற்குவங்கம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணப்படும் பாம்புகள் ஒரே இனத்தில் பல்வேறு துணைப் பிரிவுகளைச் சேர்ந்தவை. பாம்புகள் பல்வேறு வகையான விஷத்தன்மைகளைக் கொண்டுள்ளன. ஹீமோ டாக்ஸின் (Hemotoxin) என்பது, சிவப்பு ரத்தசெல்களை அழிக்கிறது. உடலின் இயல்பான ரத்தம் உறைதலைத் தடுக்கிறது. நியூரோடாக்ஸின் (Neurotoxin), மனிதர்களின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. மேலும், சைடோடாக்ஸின் (Cytotoxin), உடலின் செல்களைத் த

உயிரை ஆரோக்கியத்தை காக்கும் சில ஆப்கள்!

படம்
what3words இதனை இலவசமாக தரவிறக்கிக்கொள்ள முடியும். வாழ்க்கையை எட்டு எட்டாக பிரித்துக்கொள்ள சூப்பர்ஸ்டார் சொல்லியிருக்கிறார். இந்த ஆப் 3*3 என பிரித்துக்கொள்கிறது. இதில் உள்ளவர்களுக்கு மூன்று  வார்த்தைகளை அளிக்கிறது. உங்களுக்கு அவசரநிலை என்றால் இதைவைத்து அவர்களுக்கு தகவல் அளிக்கலாம். இங்கிலாந்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆப் இது. இதன்மூலம் ஏராளமான உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.  whatsapp வாட்ஸ்அப்பில் ஏராளமான சில்மிஷங்களை செய்திருப்போம். ஆனால் அதிலும் அவசரகால சங்கதிகள் உண்டு. ஆபத்தான சூழலில் ஒருவரின் சாட் பாக்ஸில் பிளஸ் கீயை அழுத்தி ஷேர் லைவ் லொகேஷன் அனுப்பலாம். அந்த சாட்டுக்கு உரிய நபர் உங்களது இடத்தை குறிப்பிட்ட நேரம் பார்க்க முடியும்.  skinvision ஸ்கின் விஷன் எனும் ஆப்பிற்கு காசு கட்டியே ஆக வேண்டும். இந்த ஆப் உங்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அதனை கண்டுபிடித்து சொல்லும். பாதிக்கப்பட்ட இடத்தை புகைப்படம் எடுத்து ஆப்பில் அனுப்பவேண்டும். இதனை அவர்கள் சோதித்து என்ன பாதிப்பு என்று சொல்லுவார்கள். இதற்கு 30 நொடிகள் போதும். இந்த முடிவுகளைக் கூட மருத்துவர்கள்தான் சொல்கிறார்கள்

மறைந்து விளையாடும் விளையாட்டில் உயிர் தப்ப ஓடும் மணப்பெண்! - ரெடி ஆர் நாட் 2019

படம்
  ரெடி ஆர் நாட்  Directors :  Matt Bettinelli-Olpin ,  Tyler Gillett Screenplay :  Guy Busick , Ryan Murphy படம் வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகளைக் கொண்ட படம். பெரிய மாளிகை போன்ற வீடு. அங்கு ஒருவருக்கு திருமணம் ஏற்பாடு ஆகிறது. அந்த வீட்டைச் சேர்ந்த இளைஞனை மணம் செய்துகொள்ளும் பெண், ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்ந்து வந்தவள். அவளின் காதலன் பெரும் பணக்காரன். அந்த குடும்பத்தின் வீட்டுக்கு வெளியே உள்ள இடத்தில் மணவிழா நடைபெறுகிறது. அந்த விழாவிற்கு பிறகு அவளை குடும்பத்தினர் அனைவரும் ஒரு இடத்தில் சந்தித்து விளையாட்டு ஒன்றை விளையாடுகின்றனர். கொடூரமான அந்த விளையாட்டு பற்றி தெரியாமல் மணப்பெண் அதில் சிக்கி எப்படி மீண்டு வருகிறாள் என்பதுதான் கதை.  சாத்தானை வழிபடும் குடும்பம். மணவிழாவை எப்படி விளையாட்டு போல மாற்றி மனிதர்களை வேட்டையாடி கொல்கிறார்கள் என்பதை ரத்தம் நமது முகத்தில் தெறிக்கும்படி எடுத்து வைத்திருக்கிறார்கள். படத்தை பார்க்கும் வேகத்தில் நமது அறைக்கே வேறு யாரும் வந்தால் கூட அருகிலிருக்கும் பொருளை எடுத்து பிளந்துவிடலாமா என யோசிக்க வைக்கும் அளவு வன்முறையை படத்தின் காட்சிகளில் கொண்டு வந்துவி

ஆன்டிபயாட்டிக் ஆபத்து!

படம்
unsplash ஆபத்தை ஏற்படுத்தும் ஆன்டிபயாடிக் மருந்துகள்!  ஆன்டிபயாடிக் மருந்துகளை இந்தியர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. 2050இல் உலகமெங்கும் இப்பாதிப்பிற்கு பலியாகும் மக்களின் எண்ணிக்கை பத்து லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நைஜீரியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி வாங்கி உண்ணுகிறார்கள். இதன் விளைவாக , அவர்களின் உடலில் நோய்களுக்கு எதிராக ஆன்டிபயாடிக் மருந்துகளின் செயல்பாட்டுத் திறன் குன்றுகிறது. இதுபற்றி பற்றிய தகவல்களைக் கொண்ட மருந்து பாதுகாப்பு பட்டியல் (DRI) தயாரிக்கப்பட்டது. இதனை சிடிடிஇபி, வாஷிங்டன் மற்றும் ரோலின்ஸ் சுகாதாரப் பள்ளி, ஜார்ஜியாவிலுள்ள இமோரி பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர். இதில் தெரிய வந்துள்ள உண்மை, இந்தியா ஆன்டிபயாடிக் மருந்துகளைக்  கையாளுவதில் மிக மோசமான நிலையில் உள்ளது என்பதுதான். இதுபற்றி லான்சட் இதழ் 2017ஆம் ஆண்டு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், 2002 முதல் 2012 வரையில் ஆன்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது பற்றி குறிப்பிடப்பட

புயலின் தன்மையைக் கணிக்கும் புயல்வேட்டையர்கள்

படம்
தெரிஞ்சுக்கோ! புயல் வேட்டையர்கள் புயல் வருகிறது என்றால் நாம் காய வைத்து துணி முதற்கொண்டு எடுத்து வைத்துக்கொண்டு, இன்வெர்டரில் டீசல் ஊற்றிக்கொண்டு தயாராக இருப்போம். இதில் சிலர் மட்டும் மிக கவனமாக சிறியவகை ஹெலிகாப்டர்களை எடுத்துக்கொண்டு புயலில் செல்வார்கள். இதன்மூலம் புயலின் தன்மையைக் கணிக்க முயற்சிக்கிறார்கள். மணிக்கு 314 கி.மீ வேகத்தில் வீசும் புயலுக்கு ஈடுகொடுத்து பறப்பது சாதாரண காரியமா? புயல் வேட்டையர்கள் இதைத்தான் செய்கிறார்கள். புயலுக்குள் சென்று உயிரோடு திரும்புவது சிரமம்தான். அறிவியல் தகவல்களை துல்லியமாக சேகரிக்க இந்த விஷயத்தை செய்கிறார்கள். புயலுக்குள் செல்லும் புயல் வேட்டையர்கள் அதனை ஆய்வு செய்து முழுமையாக தகவல் திரட்ட தேவைப்படும் நேரம் 8-12 மணிநேரம். இவர்களின் விமானம் தோராயமாக 10 ஆயிரம் அடி தூரத்தில் பயணிக்கிறது. அமெரிக்காவில் உள்ள விமானப்படையில் புயல் வேட்டையாளர்களாக 70 பேர் பணிபுரிகிறார்கள். பருவநிலையைக் கணிப்பதற்காக 70 ட்யூப் வடிவிலான கருவிகள் விமானத்தில் பொருத்தப்பட்டு உள்ளன. நோவா எனும் புயல் வேட்டையர்கள் பயன்படுத்தும் விமானத்தில் 3 இஞ்சின்கள் உ

உறக்கம் உயிரைப் பறிக்கிறதா? - இங்கிலாந்தில் அடிக்கிறது அலாரம்!

படம்
giphy.com  ஐரோப்பிய நாடுகளில் விரைவில் ஓட்டுநர்களின் உறக்கப் பிரச்னையைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்கள் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன. ஐரோப்பிய யூனியனில் புதிதாக தயாரிக்கப்படும் கார்களில் விபத்தைக் குறைப்பதற்காக முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். இவை 2022 இல் அமலுக்கு வரும்.  காரில் உறக்கத்தைக் கண்காணிக்கும் கருவி, கருப்புப்பெட்டி ஆகியவை இடம்பெறவிருக்கின்றன. என்ன காரணம், அதிகரித்து வரும் விபத்துகள்தான். 2017 ஆம் ஆண்டில் மட்டும் ஐரோப்பாவில் 25 ஆயிரத்து 300 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் விபத்துகளால் படுகாயமுற்றுள்ளனர். இந்நாடுகளில் சாலை விபத்துகளில் பலியாகுபவர்களின் எண்ணிக்கையை  2030க்குள் 7 ஆயிரமாக குறைக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஓட்டுநருக்கான மேம்பட்ட உதவி அமைப்புகளை( ADAS) உருவாக்குவதற்கான அறிக்கையை கடந்த ஆண்டு ஏப்ரலில் உருவாக்கியது. இதில் 15 புதிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெறவிருக்கின்றன. “நீங்கள் இந்த வசதிகளை காரில் முதன்முறையாக பாதுகாப்பு சீட்பெல்ட் அறிமுகமானது போலத்தான் பார்க்கவேண்டும்” என்கிறார் ஐரோப்பிய யூனியன