வெளியில் அழகானவர் உள்ளே உறுமும் விலங்கு!

 










சில பெற்றோர்கள் தங்களுக்கு பெண் பிள்ளை பிறக்கும் என நினைப்பார்கள். ஆனால் ஆண் குழந்தை பிறந்துவிட்டால், என்ன  செய்வது? ஆசையை எதிர்பார்ப்பை விட்டுவிட முடியாது. எனவே, ஆண் பிள்ளைக்கு பெண் பிள்ளை போல உடை உடுத்துவது, தலையில் பூ வைத்து புகைப்படம் எடுப்பது எல்லாம் உண்டு. இதெல்லாம் கொஞ்ச ஆண்டுகள்தான். அப்புறம் ஆண்களுக்கான உடைகளை உடுத்தக் கொடுப்பார்கள். ஆனால் சில பெற்றோர் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளையின் உடைகளைக் கொடுத்து அணிய வைப்பார்கள், விருந்துகளில் பங்கேற்பார்கள். இதனால் பிள்ளைகளின் மனம் என்னவாகும் என்பதை அவர்கள் யோசிப்பதில்லை.

பாலின வேறுபாடு குழப்பம் பிள்ளைகளுக்கு ஏற்படுகிறது. சமூக அழுத்தம் அவர்களை ஆணா, பெண்ணா என இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வற்புறுத்துகிறது. இதில் பெற்றோரின் ஆசை வேறு தனி நெருக்கடியைத் தருகிறது. இதனால் கேலி, அவதூறு ஆகியவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள். தொடர்கொலைகாரர்கள் இப்படித்தான் உருவாகிறார்கள். பெரும்பாலும் தாய்கள்தான் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளை போல உடை உடுத்தி பார்த்து மகிழ்கிறார்கள். இதனால் இப்படி வளரும் பிள்ளைகள், அம்மாவை கொல்வதாக நினைத்து பெண்களை வேட்டையாடி கொல்கிறார்கள். ஓரினச்சேர்க்கையாளர்கள், வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் என யாரெல்லாம் அவர்களுக்கு அவர்களின் அவமானத்தை நினைவுபடுத்துகிறார்களோ அவர்களையெல்லாம் கொல்கின்றனர்.

இப்போது போலந்து நாட்டைச் சேர்ந்த டெங்கே பற்றி பார்ப்போம். போலந்தின் முன்ஸ்டர் பர்க் எனுமிடத்தில் வாழ்ந்து வந்தார். இவர் வீடுகளை பலருக்கும் வாடகைக்கு விட்டு வந்தார். அந்தபகுதியில் நன்கு அறிந்த முகம். செல்லமாக பாபா என்று அழைத்து வந்தனர். அந்தப்பகுதியில் உள்ள தேவாலயத்தில்  இசைக்கருவி வாசிப்பவராக இருந்தார். ஆனால் பிறருக்கும் தெரியாத விஷயம், டெங்கே திட்டமிட்டு முப்பது பேர்களுக்கும் மேல் கொலை செய்துவிட்டார் என்பதுதான்.

இதற்காக அவர் தேர்ந்தெடுத்த ஆட்களை யாராலும் நினைத்தே பார்க்க முடியாது. பிச்சைக்காரர்கள், வீடற்றவர்கள், சுற்றுலா செல்பவர்கள் என அடித்து கொன்றால் கேட்பதற்கு யாரும் இல்லை என்று கூறும்படி உள்ளவர்களை மட்டும் கொன்றார். கொலைக்கு டெங்கே பயன்படுத்திய ஆயுதம், கோடாரி. மண்டையில் ஒரு வீச்சு. அப்படியே பிளந்துவிடும். வேலை முடிந்தது. இந்த கொலையை அவரது வீட்டில் தங்கியிருந்தவர்தான் கண்டுபிடித்தார். ஏதோ கீழ்தளத்தில் அலறல் போல சத்தம் கேட்கிறதே என பார்க்கப் போனால் அங்கு மண்டை பிளந்து குற்றுயிராக கிடந்தவர், டெங்கே தன்னை தாக்கியதாக சொன்னார். 1921ஆம் ஆண்டு முதல் கொன்றவர்களை டெங்கே பட்டியலிட்டு எழுதி வைத்திருந்தார். மொத்தம் 31 உடல்களை காவல்துறை கண்டெடுத்தது. பாலியல் ரீதியாக எதையும் செய்யாதவர், எதற்கு கொலைகளை செய்தார்  என்று காரணங்கள் தெரியவில்லை. சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

படம் - பின்டிரெஸ்ட் 

கருத்துகள்