பணம் சம்பாதிக்க முதியவர்களை திட்டம் தீட்டி கொன்ற பெண்மணி - ஏமி

 








1873ஆம ஆண்டு பிறந்தவர், ஏமி. இருபது வயதில் ஜேம்ஸ் ஆர்ச்சர் என்பவருடன் திருமணமானது. இவருக்கு பிறந்த பெண்பிள்ளையின் பெயர் மேரி. இவருக்கு செவிலியர் படிப்பு படிக்க ஆசை, ஆனால் படிக்கவில்லை. ஆனாலும் தன்னம்பிக்கை இருந்தது. படிக்காவிட்டால் என்ன படித்ததாக கூறிக்கொள்வோம் தவறில்லை என நினைத்தார். எனவே, கனெக்டிகட்டில் வயதானவர்களுக்கான நர்சிங் ஹோமை தொடங்கி நடத்தினார்.

1907ஆம் ஆண்டு ஏமி, தனது நர்சிங் ஹோமை விண்ட்சோர் எனுமிடத்திற்கு மாற்றிக்கொண்டார்.வயதானவர்களுக்கான இல்லமாக மாற்றி நடத்தினர்.  தொடங்கிய காலத்தில் இருந்து முதல் மூன்று ஆண்டுகளில் சேர்ந்த பத்து வயதானவர்கள் நோயாளிகளாக இருந்து காலமானார்கள். 1910ஆம் ஆண்டு கணவர் ஜேம்ஸ் ஆர்ச்சர் இயற்கையான முறையில் இறந்துபோனார். பிறகு மைக்கேல் கில்லிகன் என்பவரை ஏமி மணந்துகொண்டார். இவரது ஆயுள் அதற்குப் பிறகு பனிரெண்டு மாதங்களாக குறைந்துவிட்டது. 1911- 1916 வரையிலான காலகட்டத்தில் நர்சிங் ஹோமில் இருந்தவர்களில் 48 பேர் காலமானார்கள். மைக்கேல் கில்லிகனின் குடும்ப மருத்துவர் மருத்துவர் கிங். இவருக்கு, ஏமியின் செயல்பாடுகளில் நம்பிக்கை இருந்தது. அதனால் அவர், ஏமி நோயாளிகளின் இறப்புக்கு சொல்லும் காரணங்களை நம்பினார். அதனால் அவர் நீதிமன்றத்தில் நின்று பதில் சொல்லும் காலமும் வந்தது.

கொலை செய்வதில் ஏமிக்கு என்ன லாபம் என ஒருவர் கேட்கலாம். லாபம் இல்லாமல், சுயநலமின்றி இந்த உலகில் மனிதர்கள் அசையவே மாட்டார்கள். அதிலும் மனம் முழுக்க சுயநலமே நிறைந்து இருக்கும் பெண்கள் எதற்காக பிறருக்கு அதிலும் வயதானவர்களுக்கு உதவ வேண்டும்? எல்லாம் காசுக்காகத்தான். ஏமியின் நர்சிங் ஹோமில் மொத்தமுள்ள படுக்கைகளே பதினான்குதான். அங்கு, வயதானவர்களுக்கான இல்லத்தை தொடங்கியபோதும் நிலைமை ஏதும் மாறவில்லை. முதலில் வருபவர்களிடம் வாழ்நாள் பராமரிப்பு என்று சொல்லி ஆயிரம் டாலர்களை வாங்கி வைத்துக்கொள்வார். பிறகுதான் அவர்களுக்கு விஷம் கொடுத்து, தலையணையை முகத்தில் அழுத்தி.. என கொலை செய்வதற்கான முறைகளை யோசிப்பார். சா பூ த்ரீ போட்டு ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து முதியவர்களைக் கொல்வார். பெரும்பாலும் விஷம் வைத்துத்தான். அதில்தான் நோயாளி திடீரென உடல்நலக்குறைவால் இறந்தது போல காட்ட முடியும். அதாவது மெதுவாக கொல்லும் விஷத்தைப் பயன்படுத்தினார் ஏமி.

ஏமி சொல்லுவதற்கு எல்லாம் தலையாட்டிய மருத்துவர் கிங் இறப்புச்சான்றிதழை கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆனால் இறந்துபோன முதியவர்களின் உறவினர் ஒருவர் தனது உறவினரின் இறப்பு பற்றி சந்தேகம் எழுப்ப, காவல்துறையும் நடவடிக்கை எடுத்தது இறந்தவர்களில் ஐந்து பேரின் உடலைப் பரிசோதிக்க அதில் விஷத்தின் எச்சமிருந்தது. இரண்டாவது கணவரான மைக்கேல், விஷத்தால் பாதிக்கப்பட்டு காலமாகியிருந்தார்.

 1917ஆம் ஆண்டு ஏமியின் குற்றம் உறுதியானது. பிறகு, ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ஜூரிகளின் தலையீட்டால் அவரின் தண்டனை குறைக்கப்பட்டு காப்பகத்தில் அடைக்கப்பட்டு 89 வயதில் இறந்துபோனார்.

 

படம் -பின்டிரெஸ்ட்

கருத்துகள்