இடுகைகள்

புத்தர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் - தீக நிகாயம் - பௌத்த மறைநூல்

படம்
  தீக நிகாயம் நூல் அட்டை தீக நிகாயம் பௌத்த மறைநூல் மு கு ஜெகந்நாத ராஜா தமிழினி விலை ரூ.140 பாலி மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார் ஆசிரியர். இதனால் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. பாலி மொழியில் உள்ள சொற்கள், சமஸ்கிருத மொழியில் உள்ள சொற்களைப் பற்றி முன்னமே விவரித்துவிடுகிறார்கள். இதனால் நூலை படிக்கும்போது பெரிதாக தடுமாறவேண்டியதில்லை. புத்தர் கூறியது என நிறையப் பேர் எழுதுவார்கள். ஆனால் இந்த நூல் இப்படியாக கேட்டிருக்கிறேன் என்று சொல்லி எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் பௌத்த மறைநூல் என கூறியதற்கு ஏற்பவே உள்ளது. மோசமில்லை. சமண புத்தர் ஓரிடத்தில் தனது சீடர்களோடு அமர்ந்திருக்கிறார். அங்கு அவரைப் பார்க்க பல்வேறு மன்னர்கள், விவசாயிகள், பிராமணர்கள், குறு நில மன்னர்கள், பிற சமயங்களை கடைபிடிக்கும் ஆட்கள் வருகிறார்கள். அங்கு வந்து கேள்விகளைக் கேட்கிறார்கள். இந்த முறையில் புத்தர் ஏராளமான சூத்திரங்களை வரிசையாக சொல்லிக்கொண்டே வருகிறார். அவர் கூறும் உபதேசங்களை மனம் ஒன்றிக் கேட்டு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொண்டது போலவே வாசகர்களும் மனம் ஒன்றிப் படித்தால்தான் புத்தரின்

இந்து சமூகத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழாதபோது ஆழமான வலியை மனதில் உணர்ந்தவர் அம்பேத்கர் - அசோக் கோபால்

படம்
  அம்பேத்கர் சுயசரிதை- நவாயனா இடதுபுறம் - ரவிக்குமார், திருமாவளவன், நவாயனா பதிப்பகத் தலைவர் அசோக் கோபால், வரலாற்று பட்டதாரி. 2003ஆம் ஆண்டு முதல் பி.ஆர். அம்பேத்கரைப் பற்றி படித்து ஆய்வு செய்து வருகிறார். அம்பேத்கரின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் செயல்பாடு, காந்தியுடனான உறவு என பல்வேறு விஷயங்களைப் பற்றி மராத்தி, ஆங்கில மொழியில் இருந்து படித்து வருகிறார். இதன் விளைவாக நிறைய விஷயங்கள் தெரிய வந்துள்ளன. அதைப்பற்றி அவரிடம் பேசினோம்.   இதுபற்றி   எ பார்ட் அபார்ட் – தி லைஃப் அண்ட் தாட் ஆஃப் பி.ஆர். அம்பேத்கர் என்ற நூலை எழுதியுள்ளார். நூலை நவாயனா பிரசுரித்துள்ளது. நெடுநாட்களுக்குப் பிறகு, அம்பேத்கரின் வாழ்க்கை பற்றிய முழுமையான நூல் வெளிவந்துள்ளது. நூலை எழுதுவதற்கான பணியைப் பற்றி கூறுங்கள். 2003ஆம் ஆண்டு, அம்பேத்கரைப் பற்றி படிக்கத் தொடங்கினேன்.   நான் மிக குறைவாக அறிந்த மனிதரைப் பற்றி முழுமையாக அறிவதே நோக்கம். இந்த ஆய்வுப் பணியில் அவரைப்பற்றி எழுதப்பட்ட நூல்களில் கூறப்பட்டதைவிட, அவரே தன்னைப் பற்றி கூறியதை விட, நிறைய விஷயங்களை அறிய முடிந்தது. குறிப்பாக, அம்பேத்கர் புத்தமதத்தை ஏன் தழுவுகிறா

பிராமணர்களை நிராகரித்து வேதங்களை புறக்கணித்து புத்தர் காட்டும் தம்ம நெறி - புத்தரும் அவர் தம்மமும் - அம்பேத்கர்

படம்
 புத்தரும் அவர் தம்மமும் - அம்பேத்கர்  தமிழில் பெரியார் தாசன் வெளியீடு பெரியார் தாசன்  புத்தரின் வாழ்க்கை, அவரது கொள்கைகள் பற்றிய நூல். இதை அம்பேத்கரே ஆராய்ந்து எழுதியிருக்கிறார். அம்பேத்கர் எழுதிய நூல்களில் புத்தரும் அவர் தம்மமும் நூல் முக்கியமானது. இந்தியாவில் உள்ள மதங்களில் பௌத்தம் முக்கியமானது. நிர்வாக ரீதியாக இந்து மதத்தில் பௌத்தம் சீக்கியம் உள்ளடங்கியது என தேசியவாதிகள் கூறுகின்றனர்.  பௌத்தம் எவ்வாறு வேதங்களிலிருந்த மாறுபட்டுள்ளது என்பதை உயர்வெய்திய புத்தர் விளக்குகிறார். நூலின் பக்கங்கள் ஐநூறுக்கும் அதிகமானவை. அவை அனைத்திலும் கூறப்படும் விஷயங்களைப் படித்தால் மதம் என்பது என்ன, அது மனிதர்களுக்கு பயன்படும் விதம் ஆகியவற்றை தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.  பௌத்தத்திலுள்ள பல்வேறு கொள்கைகளை திருடி தன்னை சற்றே மாற்றிக்கொண்டாலும் பிராமணத்துவம் மனிதர்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையவில்லை. ஒட்டுமொத்த சமூக அமைப்பும் சுரண்டலுக்கானதாகவே இருக்கிறது. மனிதகுல முன்னேற்றத்திற்கானதாகவே மதம் அமையவேண்டும். அவ்வாறு அமையாதபோது, அதன் தேவையே இல்லை என புத்தர் பிராமணத்துவத்தை, வேத மதங்களை தவிர்க்கிறார். 

புத்தரை நிர்மாணிக்கும் ஆப்கன் அரசு- கலாசார மறுமலர்ச்சி!

படம்
மீண்டும் புத்தர்! 2001 இல் ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் சிதைக்கப்பட்ட புத்தரின் சிலைகள் ,தற்போது அமெரிக்க அரசின் உதவியுடன் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ”புத்தரின் சிலைகளைச் சீரமைப்பதன் மூலம் எங்கள் கலாசாரத்தை மீட்கிறோம்” என்கிறார் அருங்காட்சியக மியூசிய இயக்குநரான மொகமத் ரஹிமி. மாற்றுத்திறனாளி ஐ.ஏ.எஸ்! கேரளத்தின் திருவனந்தப்புரத்தில் துணை ஆட்சியராக பார்வைத்திறன் அற்ற பிரஞ்சல் பாடீல் பதவி ஏற்றிருக்கிறார். மகாராஷ்டிரத்தைச்சேர்ந்த இவர் 2016 இல் யுபிஎஸ்சி தேர்வு எழுதி வென்றவர். சமூகநீதித்துறையின் முதன்மைச் செயலராக பணியாற்றவுள்ள பிரஞ்சல், இந்தியாவின் முதல் பார்வைத்திறன் அற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். நிலவில் இங்கிலாந்து! இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்பேஸ்பிட் எனும் நிறுவனம், 2021இல் நிலவிற்கு ரோவரை கொண்டு செல்ல உள்ளது.  விண்வெளிக்கு 1.3 கி.கி. எடைகொண்ட ரோவரை ஆஸ்ட்ரோபாடிக்  நிறுவன லேண்டர் கொண்டு செல்லும். அறிவியல் நிகழ்ச்சியில் இச்செய்தியைக் கூறியுள்ளார் ஸ்பேஸ்பிட் நிறுவனத் தலைவரான பாவ்லோ தனாஸ்யுக். மின் சிக்கனம்! பஞ்சாபில் மின்சார வாரியம் மின்சாரத்தையும், நீரையும் சிக

புத்தர் என்பவர் யார்? - குதிரைச்சாணம் என்கிறார் ஹான்

அமைதி என்பது நாமே திக் ஹியட் ஹான் தமிழில்: ஆசைத்தம்பி க்ரியா அமைதி, மகிழ்ச்சி இவை கிடைக்க என்ன செய்யவேண்டும் என்பதை எளிமையான வார்த்தைகள், கதைகளுடன் கூறியிருக்கிறார் ஹான். புத்தர் என்பது சிலையா, அல்லது தத்துவமா, மந்திரங்களா என்பது பற்றிய தத்துவப்பகுதி அசரவைக்கிறது. நம்பவே முடியாத எளிமையுடன் இந்நூலை தமிழாக்கம் செய்திருக்கிறார் ஆசைத்தம்பி. உலகத்தோடு ஒத்துவாழ்வதற்கான பயிற்சிகளும் நூலின் பின்னால் கொடுக்கப்பட்டுள்ளன. தியானம், யோகம் என்பது தனிப்பட்ட ஆன்மிக வளர்ச்சி என்பதோடு நிறுத்தாமல் அநீதி என்றால் தயங்காமல் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தும் இடத்தில் ஹான் வேறுபடுகிறார். நூல், தியானம், மோட்சம் உள்ளிட்ட விஷயங்களைப் பேசினாலும் பேசுகின்ற மொழி மிக இனிமையானதாக இருப்பதால் நம்மால் இடறல் இன்றி வாசிக்க முடிகிறது. நிதானமாக அசைபோட்டு நூலை படியுங்கள். திபெத்தில் பயணிக்கும் வெண்மேகங்களின் வாசனையை நுகரலாம். பனியின் சில்லிப்பு மனதிலும் படரக்கூடும். - கோமாளிமேடை நன்றி: த.சக்திவேல்.