இடுகைகள்

இலங்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இலங்கையின் அரசியல் நிலைமையை சொல்லும் கதைகள்! கடிதங்கள்

படம்
  இலங்கை சிறுகதைகள் - உறவுப்பாலம் அன்புள்ள நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு,  வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை இரண்டாவது முறையாக நடைமுறைக்கு வந்திருக்கிறது. இப்போது நான் சென்னையிலுள்ள அறையில் இருக்கிறேன். ஊருக்கு வரவில்லை. காலைக்கதிர் அலுவலகத்தில் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு வந்துவிட்டது. நான் உறவுப்பாலம் என்ற இலங்கை சிறுகதை தொகுப்பை படித்து முடித்தேன்.  சிங்களக்கதைகளும், ஆங்கிலக் கதைகளும் நன்றாக இருந்தன. தமிழ்க்கதைகளும் நன்றாக இருந்தன. தமிழ்கதைகள் தேறவில்லை. கணியம் சீனிவாசனிடம் வாங்கி வந்த இந்திய பயணக் கடிதங்கள் நூலை படித்து வருகிறேன். கடல் மார்க்கமாக  இந்தியாவுக்கு வரும் ஆங்கிலப் பெண்மணி எலிசாபே சந்தித்த அனுபவங்கள் கடிதமாக உள்ளன.  நூறு பக்கங்கள் படித்துள்ளேன். அக்களூர் ரவியின் மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது.  நன்றி! ச.அன்பரசு 16.3.2021

இலங்கை சிற்றிதழ் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் மல்லிகை இதழ் பயணம்! - மல்லிகை சிற்றிதழ்

படம்
                அனுபவப் பயணம்  டொமினிக் ஜீவா  நாவிதராக தொழில் செய்யும் ஒருவர் இலங்கையில் இலக்கிய இதழை நடத்தி வந்தார். அவர் பெயர்தான் டொமினிக் ஜீவா. இலங்கையில் சாகித்திய பரிசை முதன்முதலாக வென்ற எழுத்தாளர் இவரே. மல்லிகை என்ற இதழை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய தனது அனுபவத்தை நூலாக எழுதியுள்ளார்.  தனது தொழில் சார்ந்து நிறைய லாபம் கிடைத்தாலும் அதை விட்டுவிட்டு எழுத்தை தொழிலாக மாற்றிக்கொண்டு படாதபாடு பட்டிருக்கிறார். இதனை ஏன் எழுதவேண்டும் என்பதையும் நூலில் தெரிவித்துள்ளார். சாதி ரீதியான பாகுபாடுகள், அவதூறுகளை தனது கவனத்தில் கொண்டே எழுதியிருக்கிறார். மேலும் இதனை குறிப்பிட்ட அவதூறு எழுத்தாளரின் விழா மேடையில் தெரிவிக்கும் அளவுக்கு துணிச்சல் கொண்ட எழுத்தாளராக ஜீவா இருந்துள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரியது.  நூலில் நிறைய இடங்களில் தனது பெருமைகளை சொல்லுவது போல இடங்களை அதிகமாகிவிட்டன. சாதிரீதியான பாகுபாடு கொண்ட மனநிலை இப்படி ஜீவாவை பேச வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. தமிழகம் வந்து பல்வேறு எழுத்தாளர்களை சந்தித்து பேசிய நிகழ்வுகளை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். பிரபஞ்சன், ஜெயகாந்தன் ஆகிய எழ

இறந்துபோன அப்பாவை நினைவுகூரும் நான்கு மகன்களின் நினைவுக்குறிப்புகள்! - இறுதி யாத்திரை - எம்.டி. வாசுதேவன் நாயர்

படம்
                  இறுதியாத்திரை எம் . டி . வாசுதேவன் நாயர் கேரளத்தில் சிறிய கிராமத்தில் வேலை செய்து வரும் ஒருவர் , திருமணம் முடிக்கிறார் . தனது வியாபாரம் சார்ந்து இலங்கை வரை செல்கிறார் . அங்கும் சென்று தொழில் செய்து முன்னேறுகிறார் . அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறக்கின்றனர் . அதோடு அவருக்கு இலங்கையிலும் மனைவி , மகள் உண்டு . இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இறந்துவிடுகிறார் . அவரது பிள்ளைகளுக்கு இறப்புச்செய்தி சொல்லப்பட்டு விட நால்வரும் அப்பா பற்றிய நினைவுகளுடன் கிராமத்திற்கு வந்து சேர்கின்றனர் . இதில் அப்பு , குட்டேட்டன் , ராஜேட்டன் , உண்ணி ஆகியோர் தங்கள் தந்தை பற்றிய நினைவுகூர்தலே 130 பக்க நாவல் . தந்தை பற்றிய தகவல்கள் அனைத்துமே மகன்களின் நினைவுப்பூர்வமாகவே சொல்லப்படுகிறது . எதுவுமே நேரடியாக கூறப்படுவதில்லை என்பதுதான் நாவலின் முக்கியமான சிறப்பம்சம் . பல்வேறு நினைவுக்குறிப்புகளை நினைத்தால் அவர்களது தந்தை பற்றிய சித்திரம் உருவாகிறது . அம்மா இறந்துபோனதற்கு அவர் ஏன் அழவில்லை . மகனுக்கு இலங்கையில் ஏன் வேலை வாங்கித்தரவில்லை , ஒரு ரூபாய் இருந்தால் பத்து ரூபாய் போல பிறருக

அந்தரே எனும் இலங்கை விகடகவி செய்யும் கோமாளித்தனங்கள்! அந்தரே கதைகள் - மாத்தளை சோமு

படம்
        அந்தரே கதைகள்    மாத்தளை சோமு தொகுத்துள்ள கதைகள் இவை. இலங்கையில் அரசு ஆண்ட ராஜசிங்கன் என்ற மன்னரின் அமைச்சரவையில் விகடகவியாக பணியாற்றியவர் அந்தரே. அவரது செயல்பாடுகள் ஏறத்தாழ தெனாலிராமன், பீர்பாலை ஒத்துள்ளன. அந்தரே பற்றிய கதைகள், சிங்களம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன.  மாத்தளை சோமு தொகுத்துள்ள இக்கதைகள் குறைவானவைதான். நூல் மொத்தம் 68 பக்கங்கள், இதில் அனைத்து கதைகளும் அவரின் புத்திசாலித்தனத்தை நமக்கு கூறும் கதைகள் கிடையாது கருப்பு யானை வெள்ளை யானை கதையில் மன்னரிடம் திட்டு வாங்கி அவமானப்படுவது, தாயிடம் பலகாரம் திருடி திட்டு வாங்குவது, மனைவியை செவிடு என அறிமுகப்படுத்துவது நிறைய கதைகள் அந்தரேவை மாறுபட்ட ஒருவராக காட்டுகின்றன.  சிறிய எளிமையான கதைகள் என்பதால் எளிமையாக வேகமாக வாசித்துவிட முடியும். கதைகள் முடியும்போது அந்தரே வயதாகி இறந்துவிடுகிறார். அவர் இறந்து கிடக்கும் நிலையும் கூட ஒருவருக்கு சிரிப்பு வரும்படி உள்ளது என கதையை முடித்திருக்கிறார்கள். விகடகவி என்றால் எப்போதும் பிறரை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைப்பவன் என்று கூறுவார்கள். இந்த கதை தொகுப்பில் அந்தரே என்பவன் தன் இயல்பான

நோய்த்தொற்றை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைவது முக்கியம்! - ரணில் விக்ரமசிங்கே

படம்
tnie அரசியல் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை முன்னாள் பிரதமர். தெற்காசியாவில் நோய்த்தொற்று பாதுகாப்பிற்காக நாடுகள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார். அவரிடம் பேசினோம். பல்வேறு நாடுகள் நிலப்பரப்பு ரீதியாக ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்? பெருந்தொற்று பரவிவருகிறது. அனைத்து நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சிறந்த தலைமை கிடைத்திருந்தால் அனைத்து நாடுகளும் இதனை எளிதாக கட்டுப்படுத்தியிருக்க முடியும். சார்க் மாநாட்டில் பல்வேறு நாடுகளும் ஒன்றாக இணைந்து நிற்பது நல்ல நடவடிக்கை. இந்தியாவும் பிற நாடுகளும் தங்களுக்குள் மருத்துவ நடவடிக்கைகள் சார்ந்து உதவிகளைப் பரிமாறிக்கொண்டால் எளிதாக நோய்த்தொற்று விஷயங்களை சமாளிக்க முடியும். மேலும் எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும். இலங்கையில் சிறப்பான அடிப்படை சுகாதார கட்டமைப்பு உள்ளது. அதேபோல இந்திய மாநிலமான கேரளத்திலும் உள்ளது. இவை இரண்டு பகுதிகளும் தங்களுக்குள் உதவிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு தங்களுடைய ஒத்துழைப்பை பலப்படுத்தலாம். சார்க் நாடுகளுக்கான அவசர

விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்துகிறதா கொரில்லா?

படம்
கொரில்லா ஷோபா சக்தி கருப்பு பிரதிகள் இலங்கையில் நடப்பது என்ன? அங்கு அமைதிப்படை தமிழ் மக்களுக்கு வழங்கியது என்ன? இதில் அரசியலின் பங்கு பற்றி எண்ணற்ற கேள்விகளை கொண்டுள்ள மக்களுக்கு இதில் பதில் கிடைக்கிறது. நூல் யாகோப்பு அந்தோணி தாசன் பிரான்ஸ் அரசுக்கு அகதி விண்ணப்பத்தை எழுதி அளிப்பது போல தொடங்குகிறது. அதிலே பகடி தொடங்கிவிடுகிறது. அதில் எளிமையாக வாழ நினைக்கும் ஒருவனுக்கு புலிகள் இயக்கம் எப்படி சாவுமணி அடிக்கிறது என்று பல்வேறு சம்பவங்கள் வழியாக கூறும் சம்பவங்கள் பீதியூட்டுகிறது. ரொக்கிராஜ் என்பவரின் முழு வாழ்க்கைதான் கதை. அவர் எப்படி குஞ்சன் வயலிலிருந்து இயக்கத்திற்கு செல்கிறார், அங்கு பயிற்சி எடுப்பது, பின் ஊருக்கு காவலாக வருவது, இயக்கத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், வன்முறை ஆகியவற்றை இந்த நாவல் அப்பட்டமாக பேசுகிறது. இதனால்தான் நூலை விமர்சிக்கையில் சாருநிவேதிதா விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் நூல் என்று கூறியிருக்கிறார். அதை அவர் படித்துவிட்டு சொல்லியிருக்கும் தன்மைக்கு மதிப்புக்கொடுத்து அதனை பிரசுரித்திருக்கிறார்கள். இந்த த

வாழ நினைக்கும் ஆன்மாவின் துயரமான ஆசை - இச்சா - ஷோபா சக்தி

படம்
இச்சா ஷோபா சக்தி கருப்பு பிரதிகள் இந்த நூல் பிரான்சில் உள்ள எழுத்தாளர் ஷோபா சக்திக்கு, போலீஸ் அதிகாரி ஒருவர் கையெழுத்துப் பிரதிகளை அளிப்பது போல தொடங்குகிறது. தற்புனைவு வகையில் எழுதப்பட்டுள்ள நூலை கண்ணீர் பெருகாமல் தொடர்ச்சியாக வாசிப்பது கடினமாக உள்ளது. ஆலா என்ற தமிழ்பெண்ணின் வாழ்க்கைதான் இலங்கை அரசியல், வரலாறு, புலிகளின் எழுச்சி, வீழ்ச்சி ஆகியவற்றுடன் சொல்லப்படுகிறது. நூலின் செழுமை இதில் புழங்கும் ஏராளமான பழமொழிகள், புதிய சொற்களில் தெரிகிறது. தமிழீழ ஆதரவாளர்களுக்கு இந்த நூல் நிச்சயம் பிடித்தமானதாக இருக்காது. ஷோபாசக்தி/vikatan சாதாரணமாக படிப்பவர்களுக்கு அந்த நிலத்தில் நிம்மதியாக வாழ நினைப்பவர்களுக்கு விடுதலை இயக்கம் எப்படி பிரச்னைகளை உருவாக்குகிறது என்ற எண்ணமே ஏற்படுகிறது. தினசரி வாழ்க்கைப்பாடுகளுக்கு தடுமாறி வரும் தமிழ் மக்களிடம் புலிகள் வலுவில் வந்து உதவி கேட்க பிரச்னைகள் தொடங்குகின்றன. இப்படித்தான் ஆலா என்ற பெண்ணின் வாழ்கையும் இஞ்சி தேநீரை புலிகளுக்கு வழங்கிய பொழுதில் மாறுகிறது. அடுத்த நாள் அவளது தம்பியை வெட்டிக்கொல்கிறது சிங்கள ஊர்க்காவல் படை. இதில் ஏற்

இலங்கையின் வளர்ச்சிக்காக மகிந்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!

படம்
இலங்கையில் அதிபர் தேர்தலில் மகிந்தா ராஜபக்சே தேர்வாகியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிராக போராடி வென்று சிங்கள இனவாத த்திற்கு உறுதுணையாக நின்றவர் இவர். இவரின் வெற்றி பற்றி இலங்கையில் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநர்  அசங்கா அபேயாகூனசேகராவிடம் கேட்டோம். இலங்கையில் மகிந்தா அதிபராகியுள்ளார். இந்நிலையில் டெல்லி - கொழும்பு உறவு எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்? மகிந்தா, டெல்லியுடன் சிறப்பான உறவைப் பேணுவதாக முன்னமே கூறிவிட்டார். அதிபரான நிலையில் இதில் சில மாறுபாடுகள் நடக்கலாம். மகிந்தா முன்னமே இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பணிபுரிந்திருக்கிறார். ஆனால் இது தென்னிந்தியாவுக்குப் பொருந்தாது. மொத்தமாக இந்தியா - இலங்கை உறவுகள் சிறப்பாகவும் உறுதியாகவும் இருக்கும் என கூறலாம். மகிந்தா வெற்றி பெற்றதை இலங்கையில் எப்படி பார்க்கிறார்கள்? மக்கள் அவரை வரவேற்கிறார்கள். காரணம் நாட்டின் பொருளாதார நிலைமை படுமோசமாக இருக்கிறது.அதனை சரிசெய்ய மகிந்தாவினால் முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர் தான் செய்யப்போகும் செயல்களைப் பற்றி முன்னமே கூறிவிட்டார். இப்போது அவர் எப

சிலோன் டீ குடித்தால் பயன் உண்டா?

படம்
Monterey Bay Spice Company சிலோன் டீ பருகலாமா? சிலோன் டீ என்பது இலங்கையில் தயாராகும் ஆன்டி ஆக்சிடன்ஸ் நிறைந்த தேநீர். காமெலியா சினென்சிஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த தேயிலையில் மைரிசெடின், க்யூவர் செடின் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடன்ஸ் உண்டு. காஃபீன், மாங்கனீஸ், கோபால்ட், குரோமியம் ஆகிய வேதிப்பொருட்கள் இத்தேயிலையில் உண்டு. காஃபீன் உள்ள பொருட்களில் கொஞ்சம் பிரச்னைகள் உண்டு. தூக்க குறைவு, செரிமானப் பிரச்னை, பதற்றம் ஆகியவற்றை சிலோன் டீயும் ஏற்படுத்துகிறது. 237 மி.லி நீருக்கு ஒரு டீஸ்பூன் 2.35 கிராம் தேயிலை எடுத்து போட்டால் போதும். நன்றி: ஹெல்த்லைன்