இலங்கையின் அரசியல் நிலைமையை சொல்லும் கதைகள்! கடிதங்கள்

 




இலங்கை சிறுகதைகள் - உறவுப்பாலம்




அன்புள்ள நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு, 

வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை இரண்டாவது முறையாக நடைமுறைக்கு வந்திருக்கிறது. இப்போது நான் சென்னையிலுள்ள அறையில் இருக்கிறேன். ஊருக்கு வரவில்லை. காலைக்கதிர் அலுவலகத்தில் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு வந்துவிட்டது. நான் உறவுப்பாலம் என்ற இலங்கை சிறுகதை தொகுப்பை படித்து முடித்தேன். 

சிங்களக்கதைகளும், ஆங்கிலக் கதைகளும் நன்றாக இருந்தன. தமிழ்க்கதைகளும் நன்றாக இருந்தன. தமிழ்கதைகள் தேறவில்லை. கணியம் சீனிவாசனிடம் வாங்கி வந்த இந்திய பயணக் கடிதங்கள் நூலை படித்து வருகிறேன். கடல் மார்க்கமாக  இந்தியாவுக்கு வரும் ஆங்கிலப் பெண்மணி எலிசாபே சந்தித்த அனுபவங்கள் கடிதமாக உள்ளன. 

நூறு பக்கங்கள் படித்துள்ளேன். அக்களூர் ரவியின் மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது. 

நன்றி!

ச.அன்பரசு

16.3.2021



கருத்துகள்