ப்ளூமூன் பற்றி தெரியுமா? பதில் சொல்லுங்க ப்ரோ?

 



நீலநிலவு

பதில் சொல்லுங்க ப்ரோ?

ப்ளூமூன் என்றால் என்ன?

இதற்கான விளக்கங்கள் ஆண்டுதோறும் மாறிக்கொண்டே வருகின்றன. ஒருமுறை ப்ளூமூன் என்பதை இல்லாத ஒன்றாக கருதி பன்றிகள் பறப்பது  என கூறிவந்தனர்.  இப்போது கூறிவந்த காலம் ஆறாம் நூற்றாண்டு. பிறகு, 1883ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் இருந்த கிரகட்டாவு என்ற எரிமலை வெடித்து சாம்பல் வானில் பரவியபோது, சூரியனின் அஸ்தமனம் பச்சை நிறமாக மாறியது. அப்போது வானில் இருந்த நிலவு நீலநிறமாக மாறியது. 

காட்டுத்தீ, கடுமையான பஞ்சம், எரிமலை வெடிப்பு ஆகியவை நடக்கும் போது நீலநிலவு உருவாகிறது. மாதத்தில் கூடுதலாக நாட்கள் வருவது அல்லது ஆண்டு இறுதியில் கூடுதல் நாட்கள் வருவது ஆகியவற்றின் காரணமாக நிலவின் காட்சி அதிகமாகும் வாய்ப்புள்ளது. சாதாரணமாக ஆண்டில் 12 முழுநிலவு வரும். சில அரிதான நேரங்களில் 13 வரும். மாத த்தில் வரும் இரண்டாவது
முழுநிலவை நீலநிலவு என்று சொல்கிறார்கள். 

கோள்கள் வட்டமாக இருப்பது ஏன்?

இதற்கு காரணம் அதன் மத்தியில் செயல்படும் ஈர்ப்புவிசைதான். கோள்கள் பொதுவாகவே திரவத்தின் தன்மையில் செயல்படும். இதனால் நெடுங்காலம்  ஈர்ப்புவிசை அதன் மீது செயல்படும்போது வடிவம் வட்டமாகிறது. இப்படி நடக்கும் இந்த செயல்பாட்டு முறைக்கு ஐசோஸ்டேடிக் அட்ஜஸ்ட்மென்ட் என்று பெயர். 

சிறிய கோள்களில் ஈர்ப்புவிசை குறைவாக இருக்கும் என்பதால், அதன் வடிவம் வட்டமாக இருக்காது. வினோதமான ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். 



கருத்துகள்