இந்தியர்கள் சற்று திறந்த மனதுடன் இருக்கவேண்டும்! - வீர் தாஸ், நகைச்சுவை கலைஞர்

 







வீர்சிங்

இந்தி நடிகர், தனிக்குரல் கலைஞர்

அமெரிக்காவில் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னரே உங்கள் பெயர் எம்மி விருதுக்கு  பரிந்துரைக்கப்பட்டது. இதற்கான அர்த்தம் என்ன?

என்னுடைய தனிக்குரல் நிகழ்ச்சிகளுக்கான அங்கீகாரம் என்று கூறிவிடமுடியாது. வீர்தாஸ் ஃபார் இந்தியா என்று கடிதம் அனுப்பியிருப்பது இந்திய ரசிகர்களின் அன்பையே எனக்கு காட்டுகிறது. வெளிநாடு சார்ந்த தன்மை இல்லாமல் இந்திய தன்மையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் இருப்பது சிறப்பாக இருக்கிறது என்று நினைக்கிறேன். 

மேனியாக் மேன் என்ற நிகழ்ச்சியை எழுதி உருவாக்கியிருக்கிறீர்கள். அதுபற்றி சொல்லுங்களேன். 

ஒன்றும் இல்லாத விஷயத்திலிருந்து வாழ்க்கையை தொடங்குவதுதான் இதன் கான்செப்ட். பலகையில் எழுதியிருந்ததை அழித்துவிட்டு நமக்கு என்ன தேவையோ அதனை எழுதுவதுதான் விஷயம். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நாம் வீட்டினுள்ளே உட்கார்ந்து விட்டோம். இனிமேல்தான் நமது வாழ்க்கையை,உறவை, அரசை என அனைத்துமே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி பேசும். 

நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனையாவது பற்றி உங்கள் கருத்து என்ன?

எனக்கு முதலில் பயமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது லண்டனில் உள்ள சோகோ அரங்கில் 14 நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். ஒரு நிகழ்ச்சிக்கு 250, 300 பேர் இருக்கும்போது நிகழ்ச்சிகளை நடத்துவது சவாலாகவே இருக்கும். நகைச்சுவையை சொல்லி அதற்காக மக்கள் சிரிப்பதை கேட்கவிரும்புகிறேன். 

இந்த நிகழ்ச்சியை இந்தியாவுக்கு கொண்டு வரும் எண்ணமிருக்கிறதா?

கண்டிப்பாக இங்கும் அதனை கொண்டு வர முயல்வேன். ஆனால் அதற்கு மக்கள் கொஞ்சம் திறந்த மனதோடு இருக்கவேண்டும். மக்கள் அரங்கிற்கு வர நான்கைந்து மாதங்கள் தேவை என்று நினைக்கிறேன். 





கருத்துகள்