மத்திய அரசு நிதியை நேரடியாக ஏழை மக்களின் கையில் வழங்குவதே சிறந்த முடிவு! அபிஜித் பானர்ஜி, நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர்
அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க உலக நாடுகள் பணத்தை அச்சிடத் தொடங்கியுள்ளன . இந்தியா இந்த வழியில் சென்றால் மட்டுமே தடுப்பூசி திட்டத்தை முன்னெடுத்து வறுமையில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும் என அபிஜித் கூறுகிறார் . மத்திய அரசு பணத்தை அச்சிடவேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர் . நீங்கள் அதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் ? நான் அரசு பணத்தை அச்சிடவேண்டுமென சில காலம் முன்பிருந்தே கூறிவருகிறேன் . நான் இந்த கருத்தை ஆதரிக்கிறேன் . முதல் அலையின்போது இதனை செய்திரு்ந்தால் மக்களுக்கு ஏற்பட்ட வலியை பெருமளவு குறைத்திருக்கலாம் இதனை நிச்சயமாக அரசு செய்திரு்க்க முடியும் . மக்களை முதலில் தடுப்பூசியைக் கொடுத்து காப்பாற்றியிருந்தால் பின்னால் கூட கடன்களுக்கான வாக்குறுதியை அரசு நிறுவனங்களுக்கு வழங்கியிருக்க முடியும் . ஆனால் அரசு தேவையில்லாமல் பயந்துவிட்டது . ஊக்கத்தொக்கையை அளித்தது நிச்சயம் அரசுக்கு வருவாயை வழங்கக்கூடியதுதான் . கடன்களை பற்றி கவலைப்படும் அரசு இப்படி ஒரு கோணத்தில் யோசிக்க